சுவிசேஷ ஓட்டத்தின் நோக்கம்

வேதாகமப்படி, கிறிஸ்துவை பின்பற்றுகிறவருடைய பரம அழைப்பு என்பது, அனைத்து மனுக்குலத்திற்கும் அவரது இராஜ்யத்தின் சுவிசேஷத்தை அறிவிக்க நம் வாழ்க்கையை முழுமையாய் அர்ப்பணிப்பதே ஆகும். மேலோட்டமாக பார்த்தால், இது ஒரு அற்பமான விஷயம் போல தோன்றலாம். ஆனால் வேதவாக்கியங்களை நாம் வாசிக்கும்போது, நற்செய்தியை அறிவிக்கும் இந்த சுவிசேஷ ஓட்டத்தில் ஓட நம்மை நாமே ஜீவபலியாய் ஒப்புக்கொடுக்கும்படி தேவன் ஏன் கேட்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். அவரது நோக்கம் பல்வேறு சாராம்சங்களை கொண்டதாகும். அவற்றை ஒவ்வொன்றாக ஆழமாக படிப்போம்.

மேலும் படிக்க: சுவிசேஷ ஓட்டத்தின் நோக்கம்

விசுவாசமும், புனிதமும்

சுவிசேஷ ஓட்டத்தை நாம் ஓடும்போது நாம் சாதிக்கின்ற அதிமுக்கியமான ஒரு காரியம் என்னவெனில் நம் விசுவாசத்தை நிரூபிக்கிறோம்! பவுல் எழுதிய நிருபங்களின்படி சுவிசேஷத்தை அறிவிப்பது என்பது ஒரு விசுவாசிக்கான அடிப்படைத் தேவையாகும். அதுவே விசுவாசத்தின் சோதனை. நற்செய்திப் பணியின் மற்றொரு முக்கிய நோக்கம் நமது ஆசாரிய கடமையை நிறைவேற்றுவதாகும். ஆம், ஒவ்வொரு உண்மையான கிறிஸ்தவனும் ஓர் ஆசாரியன் என்கிறது வேதாகமம். மேலும், இந்த ஆசாரிய கடமையை செய்வதே பரிசுத்தம் அடைவதற்கான வழியாகும்.

மேலும் படிக்க: விசுவாசமும், புனிதமும்

உண்மை சொல்லி நன்மை செய்!

தேவனுடைய சித்தத்தின்படி பாடநுபவிக்கிறவர்கள் நன்மைசெய்கிறவர்களாய்த் தங்களை உண்மையுள்ள சிருஷ்டிகர்த்தாவாகிய அவருக்கு ஒப்புக்கொடுக்கக்கடவர்கள். 1பேதுரு 4:19. நாம் நன்மை செய்ய வேண்டும் என்று பேதுரு கூறுகிறார். ஆனால் இவ்வுலகத்தின் நன்மைகள் என அழைக்கப்படுபவை எல்லாம் மாயை, அர்த்தமற்றவை என வேதாகமம் கருதுகிறது (பிரசங்கி 1:14; 2:1). அப்படியிருக்க ஒருவருக்கு நாம் உண்மையிலேயே என்ன நன்மைதான் செய்ய முடியும்? மேலும் சிலர் கேட்கலாம் – ஏன் நாம் உலகிற்கு இப்போதே சொல்ல வேண்டும்? எப்படியும் இராஜ்யத்தில் கேட்கத்தானே போகிறார்கள்? பெரும்பாலோர் தற்போது நற்செய்தியை நிராகரிக்கத்தான் செய்கிறார்கள், இல்லையா?

மேலும் படிக்க: உண்மை சொல்லி நன்மை செய்!

கிறிஸ்துவின் பாடுகளில் பங்கு

பவுல் எழுதுகிறார் – நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே, தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே, கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும். ரோமர் 8:17. இது நியாயமான விசயமாகத்தான் தெரிகிறது. கிறிஸ்துவின் பாடுகளில் நாம் பங்கெடுத்தால் மட்டுமே அவருடைய மகிமையில் பங்கெடுப்போம். இயேசு என்ன விதமான பாடுகளை சந்தித்தார்? சுவிசேஷத்திற்காக பாடுபடுவது அப்போஸ்தலர்களான பவுல், பேதுரு போன்றவர்களுக்கு மட்டும் தானா?

மேலும் படிக்க: கிறிஸ்துவின் பாடுகளில் பங்கு

அன்பின் பிரதான கட்டளைகள்

Christ suffering for mankind

கட்டளைகளிலேயே பிரதானமான கட்டளை எது என்று கேட்கப்பட்டபோது, இயேசு பதிலளிக்கிறார் – “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்பு (கிரேக்கம்: அகாப்பே “agape”) கூருவாயாக, இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்பு ("அகாப்பே”) கூருவாயாக என்பதே”. மத்தேயு 22:37-39. புதிய ஏற்பாடு எழுதப்பட்ட கிரேக்க மொழியில் அன்பை குறிக்க பல வார்த்தைகள் உள்ளன. இங்கே மத்தேயு "அகாப்பே" என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார். அதன் அர்த்தம் என்ன? நாம் எப்படி தேவனிடமும், மனிதரிடமும் "அகாப்பே" காட்ட முடியும்?

மேலும் படிக்க: அன்பின் பிரதான கட்டளைகள்

Scriptures, unless otherwise indicated, are taken from THE HOLY BIBLE, NEW INTERNATIONAL VERSION®, NIV® Copyright © 1973, 1978, 1984, 2011 by Biblica, Inc.® Used by permission. All rights reserved worldwide. Scriptures indicated NASB are taken from the NEW AMERICAN STANDARD BIBLE®, Copyright © 1960,1962,1963,1968,1971,1972,1973,1975,1977,1995 by The Lockman Foundation. Used by permission.