mei kristhavam

  • பதிப்புரிமை அறிவிப்பு

    This website and its content are copyright of ChristianityOriginal.com - © ChristianityOriginal.com 2013. All rights reserved.

    Any redistribution or reproduction of part or all of the contents in any form is prohibited other than the following:

    • You may print or download to a local hard disk extracts for your personal and non-commercial use only.
    • You may copy the content to individual third parties for their personal use, but only if you acknowledge the website as the source of the material.

    You may not, except with our express written permission, distribute or commercially exploit the content. Nor may you transmit it or store it in any other website or other form of electronic retrieval system.

    All scripture quotations, unless otherwise indicated, are taken from the Holy Bible, New International Version®, NIV®. Copyright ©1973, 1978, 1984, 2011 by Biblica, Inc.™ Used by permission of Zondervan. All rights reserved worldwide. www.zondervan.com 

    The “NIV” and “New International Version” are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.™

  • பயனற்ற விசயங்கள்

    Jesus calls Tax Collector Matthew to follow him

    திருச்சபை பாவத்தை எதிர்த்து போராட அழைக்கப்படவில்லை என்றால், அப்போஸ்தலர்கள் ஏன் சில காரியங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்துகிறார்கள்? கொரிந்தியர்களுக்கு பவுல் எழுதுகிறார் - 'எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் பயனாயிராது.' 1கொரிந்தியர் 6:12 . முதலாவதாக, கடுகளவும் குழப்பமில்லாத என்ன ஒரு துணிகர அறிவிப்பு இது! -- எல்லாவற்றையும் அநுபவிக்க திருச்சபைக்கு அதிகாரமுண்டு! ஆம், நாம் கிறிஸ்துவினால் நியாயபடுத்தப்பட்டு நீதிமான் என்று "கருதப்படுகிறோம்", அதனால் நாம் மாம்சத்தில் செய்யும் பாவத்தை தேவன் கணக்கில் கொள்வதில்லை. அதனால் எல்லாவற்றையும், எதை வேண்டுமானாலும் செய்ய நமக்கு நிச்சயம் அதிகாரம் உண்டு. ஆனால் எல்லாமும் நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் நாம் ஓடுவதற்கு பயனாயிருமா?

  • பரலோகத்தின் இராஜ்யம்

    பரலோகத்தின் இராஜ்யத்தை பற்றி எந்தவொரு கிறிஸ்தவரும் ஏன் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டும்? தேவனின் சித்தம் பரலோகத்தில் செய்யபடுவதை போல பூமிலேயும் செய்யப்படும் நாட்களான தேவனின் இராஜ்யம் பூமியில் வரவேண்டுமென ஜெபியுங்கள் என இயேசு ஏன் நமக்கு கற்றுக்கொடுத்தார்? பரலோகத்தின் இராஜ்யம் பரலோகத்தில் அல்லவா இருக்கும்? இயேசு பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, இராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார். அதனோடு ஒப்பிட்டுப்பார்க்கும்பொழுது, இன்றைய சபைகளில் இராஜ்யத்தைப் பற்றி காணப்படும் பரவலான போதனைதான் என்ன?

  • பரிசுத்த ஆவியின் அபிஷேகம்

    'நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்.' 1கொரிந்தியர் 12:13. இதன் அர்த்தம் என்ன? ஞானஸ்நானத்தின் போது பரிசுத்த ஆவி ஏன் நமக்கு கொடுக்கப்படுகிறது? தேவனின் பரிசுத்த ஆவியின் இந்த அபிஷேகத்தின் நோக்கம் குறித்து இயேசு என்ன குறிப்பிட்டார்? பரிசுத்த ஆவியானாலான ஞானஸ்நானத்திற்கும் அக்கினியினாலான ஞானஸ்நானத்திற்கும் என்ன வித்தியாசம்?

  • பாபிலோனின் குமாரத்திகள்

    மெய் திருச்சபையானது எப்பொழுதுமே வனாந்தரத்தில் (சமூகத்திலிருந்து ஓரம் கட்டப்பட்ட நிலையில்) கேட்டின் மகனின் (அந்திக்கிறிஸ்துவின்) 1,260 வருட ஆட்சியின்கீழ் போப்பாண்டத்துவதால்  துன்புறுத்தப்பட்டிருந்து வந்திருந்ததுதான் உண்மை என்றால், சீர்திருத்த (Reformation) சகாப்தத்தின் பிரபலமான புராட்டஸ்டன்ட் சீர்திருத்த திருச்சபைகள் எப்படிப்பட்டவை? அவை நல்ல சபைகள் இல்லையா? அவைகள் போப்பாண்டத்துவத்தின் வேதாகமம் சாராத போதனைகளுக்கு ஆட்சேபம் தெரிவித்து அந்த அமைப்பிலிருந்து வெளிவந்தன, அல்லவா? பைபிளில் திருச்சபை வரலாற்றில் அந்தவொரு காலப்பகுதி பற்றி எந்தவொரு தீர்க்கதரிசனங்களும் உள்ளனவா? அவை எவ்வாறு நிறைவேறின?

  • பெந்தெகொஸ்தே இயக்கம்

    பெந்தெகொஸ்தே இயக்கம் 20-ஆம் நூற்றாண்டில் தோன்றிய ஓர் இயக்கம். அதன் சபைகளின் முக்கிய கவனம் அந்நிய பாஷைகளில் பேசுவது போன்ற பரிசுத்த ஆவியின் அதிசய வரங்களை அனுபவிப்பதாகும். இன்று பலர் அந்நிய பாஷை வரம் என்றால் யாருக்கும் புரிய மாட்டாத சொற்களை பேசுவது என்று நினைக்கிறார்கள், ஏனென்றால் பெந்தெகொஸ்தே சபைகளில் மக்கள் அதைத்தான் காண்கிறார்கள். ஆனால் ஆதித்திருச்சபை இந்த வரத்தை பெற்றபோது என்ன நிகழ்ந்தது? முதலாவதாக, தேவன் இந்த வரங்களை ஆதித்திருச்சபைக்கு ஏன் கொடுத்தார்? சுகமளித்தல், தனிநபர் தீர்க்கதரிசனங்கள் போன்ற அற்புத வரங்களின் நோக்கம் என்னவாக இருந்தது?

  • பொறுப்பாகாமை

    The information contained in this website is for general information purposes only. While we endeavor to keep the information up to date and correct, we make no representations or warranties of any kind, express or implied, about the completeness, accuracy, reliability, suitability or availability with respect to the website or the information, products, services, or related graphics contained on the website for any purpose. Any reliance you place on such information is therefore strictly at your own risk. Articles and other content in this website are purely based on biblical research. No web page or email response should be construed as counseling, therapy, legal, or other professional advice in any way whatsoever. As such, in consideration for using any of the services of ChristianityOriginal.com, you hereby release ChristianityOriginal.com from any liability for any decision you might make in your life.

    In no event will we be liable for any loss or damage including without limitation, indirect or consequential loss or damage, or any loss or damage whatsoever arising from loss of data or profits arising out of, or in connection with, the use of this website.

    Through this website you are able to link to other websites which are not under the control of ChristianityOriginal.com. We have no control over the nature, content and availability of those sites. The inclusion of any links does not necessarily imply a recommendation or endorsement of the views expressed within them.

    Every effort is made to keep the website up and running smoothly. However, ChristianityOriginal.com takes no responsibility for, and will not be liable for, the website being temporarily unavailable due to technical issues beyond our control.

  • மகா மறுசீரமைப்பின் காலம்

    "தேவன் எல்லோரின் மீட்பராக இருக்கிறார். அதோடு விசுவாசிகளுக்குச் சிறப்பான முறையில் மீட்பராக இருக்கிறார்." 1தீமோத்தேயு 4:10. இந்த வசனம் தேவன் எல்லோரையும் மீட்பார் எனவும், இன்றைய விசுவாசிகளை ஒரு சிறப்பான முறையில் மீட்பார் என்றும் உரைக்கிறது. அப்படியெனில், எல்லா மக்களுக்கும் இலவச சொர்க்க அனுமதி சீட்டு என்று அர்த்தமா? இன்றைய விசுவாசிகளுக்குக் காத்திருக்கும் சிறப்பு மீட்புதான் என்ன? அதுபோக, இயேசு சொல்கிறார், "முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேசங்கள் மேல் அதிகாரம் கொடுப்பேன்.” வெளி. 2:26. யார் இந்த தேசங்கள்? கிறிஸ்துவைப் பின்பற்றுவோரால் அவை எதற்காக ஆளப்படவேண்டும்?

  • மகா விசுவாச துரோகம்

    அப்போஸ்தலர்களின் மரணத்திற்குப்பின் கிறிஸ்தவத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற வேதாகமத்தின் கணிப்பு சுவாரஸ்யமாக இருந்தது. விசுவாசிகளுக்குள்ளிருந்தே கொடிதான ஓநாய்கள் எழும்பி, சீஷர்களை திசைதிருப்பும்படி மாறுபாடானவைகளைப் போதிக்கும் ஒரு மகத்தான விசுவாச துரோகம் நேரும் என்று அப்போஸ்தலர் பவுல் முன்னறிவித்தார். இந்த தீர்க்கதரிசனம் எங்ஙனம் நிறைவேறியது? இந்த விசுவாச துரோகம் கொண்டுவந்த தவறான கோட்பாடுகள் என்ன? அவை கிறிஸ்தவத்தை எப்படி பாதித்தன?

  • மகா வெண்சிம்மாசன நியாயத்தீர்ப்பு

    மகா வெண்சிம்மாசன நியாயத்தீர்ப்பு என்றால் என்ன? அதில் இயேசுவுடன் சிம்மாசனத்தில் அமரவிருப்பவர்கள் யார்? சிம்மாசனத்தின் முன் நிற்கும் வெள்ளாடுகளுக்கு, செம்மறியாடுகளும் யாரை சித்தரிக்கின்றன? ஆயிரம் வருடங்கள் ஆட்சி நடக்குமென்றால், அதன் முடிவில் என்ன நடக்கும்? சாத்தானின் கதி என்ன? 'மரணமும் கல்லறையும் அக்கினி கடலுக்குள் தள்ளப்படும்' என்று வேதாகமம் ஏன் சொல்கிறது? வரவிருக்கும் யுகங்கள் எப்படி இருக்கும்? அப்போது பூமியில் மனிதனின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? ஆயிரம் வருட ஆட்சிக்குப் பின்னர் இயேசு மற்றும் அவரது திருச்சபையின் பதவி என்னவாக மாறும்?

  • மனந்திரும்புதல் - எதிலிருந்து?

    வேதாகமத்தின் மூல கிரேக்கத்திற்கு செல்லும்போது, 'மனந்திரும்புதல்' (கிரேக்க: மெட்டனோயியா metanoia) என்ற வார்த்தை 'மனதை மாற்றுவது' என அர்த்தப்படுத்துகிறது என்பதை பார்க்கிறோம். சரி, நாம் எந்த விசயத்தில் மனதை மாற்றிக்கொள்ள வேண்டும்? மனிதர்கள் நீதி/நியாயமற்ற நிலையில் இருக்கிறார்கள் என வேதாகமம் ஏன் சொல்கிறது? பழைய ஏற்பாட்டு காலங்களில், கடவுள் நியாயப்பிரமாண உடன்படிக்கை என்று கட்டளைகளின் ஒரு தொகுப்பு கொடுத்தார். அந்த உடன்படிக்கையின் ஒப்பந்தம்தான் என்ன? அதற்கும் பாவத்திற்கும் என்ன சம்பந்தம்? புதிய ஏற்பாடு வரும் என்று முன்னமே அறிந்திருந்தால் கடவுள் ஏன் ஒரு பழைய ஏற்பாட்டை (நியாயப்பிரமாணத்தை) அளித்தார்?

  • மனுக்குலத்தின் கிரய மீட்பு

    ஆதாமின் பாவத்திற்குரிய தண்டனையாக ஆதாமின் இனம் முழுவதும் மரண நித்திரையில் ஆழ்கிறதெனில், கிறிஸ்துவுக்குள் அனைவரும் உயிர்பெறுவர் என்று வேதாகமம் எப்படி வாக்களிக்கக்கூடும்? வேதத்தில் கடவுள் பிரகடனம் செய்கிறார்: “அவர்களை நான் மரணத்திற்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்.” ஓசியா 13:14. இந்த தீர்க்கதரிசனத்தைக் கிறிஸ்து எங்ஙனம் நிறைவேற்றினார் என்று அப்போஸ்தலன் பவுல் 1தீமோத்தேயு 2:4-6 வசனங்களில் விவரிக்கிறார். பவுலின் வார்த்தைகளில் இவற்றின் அர்த்தம்தான் என்ன - 'எல்லாரையும் மீட்கும் பொருள்', ‘ஏற்ற கால சாட்சி’, 'இரட்சிக்கப்பட்டு சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும்’?

  • மரண தண்டனை

    மனிதர்கள் மரித்துப்போவதேன்? இது இயற்கை நியதியா? மிருகங்கள் போல் மடிந்து போவதுதான் நம் விதியா? ஒருவன் மரிக்கும்போது என்ன நேருகிறது? மரணத்தைப்பற்றி இயேசு என்ன சொன்னார்? மரணநிலை பற்றி வேதாகமம் கூறுவதை அறிவியல் ஏற்றுக்கொள்கிறதா? வேதாகமத்தின்படி ஆத்துமா என்பது என்ன? ஆத்துமா மரித்துப் போகக்கூடுமா? மரணத்திற்குப்பின் ‘ஆவி’ வாழுமா?

  • மரித்தோர் உயிர்த்தெழுதல்

    இயேசு கிறிஸ்து பூமி திரும்பும்பொழுது, மரித்த அனைவரும் உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்று வேதவாக்கியங்கள் கூறுகின்றன. அப்படியெனில், எல்லா மனிதரும் ஒரே நொடிப்பொழுதில் உயிரோடு எழுவார்களா, என்ன? இரண்டுவித உயிர்த்தெழுதல்கள் உள்ளன என்று வேதாகமம் சொல்கிறது. மேலும் அது, 'முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவான்' என்று கூறுவதன் காரணம் என்ன?

  • மறுசீரமைப்பின் யுகம்

    இயேசு பூமி திரும்பும்போது எல்லாம் மறுசீரமைப்பு செய்யும் காலம் வரும் என பேதுரு ஏன் வாக்குறுதி அளிக்கிறார்? பழைய ஏற்பாட்டின் பரிசுத்த தீர்க்கதரிசிகளால் அந்த காலம் விவரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார். இந்த மறுசீரமைப்பின் யுகம் பற்றி வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்குத்தத்தங்கள் யாவை? மனுக்குலத்தின் ஆரோக்கியம், சமூக நீதி, நியாயம், உலக சமாதானம், மற்றும் செழிப்பு பற்றி இந்த இராஜ்ய தீர்க்கதரிசனங்கள் என்னதான் கணிக்கின்றன? மனிதனுக்காக கடவுள் வைத்திருக்கும் எதிர்காலம்தான் என்ன?

  • யுக மாற்றம்

    முதலாம் உயிர்த்தெழுதலுடன் சம்பந்தப்பட்டதாக வேதாகமம் விவரிக்கிற நிகழ்வுகள் யாவை? இரண்டு உயிர்த்தெழுதல்கள் இருப்பது போல, இரண்டு நியாயத்தீர்ப்புகளும் உள்ளன. பேமா ஆசன நியாயத்தீர்ப்பிற்கும், மகா வெண்சிம்மாசன நியாயத்தீர்ப்பிற்கும் என்ன வேறுபாடு? அடுத்த யுகத்தின்  ஆரம்பத்தில் சாத்தானுக்கு என்ன நடக்கும்? இரண்டாவது உயிர்த்தெழுதலில் எழுகிறவர்கள் ஒரு நியாயத்தீர்ப்புச்சோதனையை (கிரேக்கம்: 'க்ரைசீஸ்') எதிர்கொள்வார்கள் என வேதாகமம் ஏன் சொல்கிறது?

  • யுகங்களுக்கோர் உவமை - யார் அந்த ஐசுவரியவான்?

    சிலர், ஐசுவரியவான் - லாசரு உவமையை நிஜமான சம்பவம் என்று எடுத்துக் கொண்டு, நரக வேதனையை பிரசங்கிக்கிறார்கள். ஆனால் நிஜ நிகழ்வாக அர்த்தப்படுத்திக்கொண்டால் இந்த உவமையானது சில அபத்தங்களை உள்ளடக்கியதாகத் தோன்றுகிறது. -- லாசரு ஒரு விசுவாசி என்றோ, நல்லவன் என்றோ உவமையில் கூறப்படவில்லை. மாறாக, அவன் ஆசீர்வதிக்கப்படுவதன் காரணம் வெறுமனே நோயாளியாக, ஏழையாக இருந்ததாலேயே என்ற அர்த்தமாகிறது. அப்படியெனில், நோயாளிகளும், தரித்திரர்களும் மட்டுந்தான் மீட்கப்படுவார்களா? உவமையில் ஐசுவரியவான் செல்லும் "பாதாளம்" ஓர் நிஜ இடம் என்று எடுத்துக்கொண்டால், ஏழை லாசரு செல்லும் "ஆபிரகாமின் மடி"யும் ஒரு நிஜ இடம் என்றுதான் நாம் கருதவேண்டும். அப்படியெனில், கோடிக்கணக்கான ஏழைகள் வாசம் செய்யும் இடமாக ஆபிரகாமின் மடி உள்ளதா? ஆபிரகாம் என்ன ஓர் இராட்சசனா? யூத பரிசேயர்களுக்கு ஓர் உருவகக்கதை பாடமாகவே இயேசு இந்த உவமையை சொன்னார். அவர்களுக்கு அவர் உண்மையில் சொல்லவந்த செய்திதான் என்ன?

  • யோவான் 1:1 - வார்த்தையும் தேவனும்

    யோவான் 1:1 கூறுகிறது, 'ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனுடன் இருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது'. இவ்வசனம் வார்த்தை கடவுளுடன் இருந்ததாகவும், அதே சமயத்தில் அதுவே கடவுளாகவும் இருந்ததாகவும் சொல்கிற மாதிரி தெரிகிறது. கூட பரிசுத்த ஆவிபற்றி  குறிப்பிடாத பற்றாக்குறை இருப்பினும், இவ்வசனம் திரித்துவத்தை நிரூபிக்க மேற்கோள் காட்டப்படுவது வழக்கம். யோவானின் மூல வார்த்தைகளை கிரேக்க மொழியில் படித்துப் பார்ப்போம். வார்த்தை (லோகாஸ்) பற்றியும் தேவன் பற்றியும் அவர் உண்மையில்  என்ன சொல்கிறார் என்பது பற்றி தெளிவான புரிதல் கிடைக்கும்.

  • வரலாற்றின் கடவுள் யார்?

    "பூர்வகாலத்தில் நடந்தவைகளை ஆதிமுதல் அறிவித்தேன், அவைகள் என் வாயிலிருந்து பிறந்தன, அவைகளை வெளிப்படுத்தினேன். அவைகளைச் சடிதியாய்ச் செய்தேன், அவைகள் நடந்தன.. நான் அவைகளை முன்னமே உனக்கு அறிவித்து, அவைகள் வராததற்குமுன்னே உனக்கு வெளிப்படுத்தினேன்." ஏசாயா 48:3-5. சரிதான். மனிதனின் எதிர்காலத்தை வடிவமைக்கும் மெய்யான கடவுளால் மட்டுமே மனிதகுல வரலாற்று நிகழ்வுகளை முன்னறிவிக்க முடியும். எங்கெல்லாம் இந்த தேவன் தனது தீர்க்கதரிசனங்களை முன்னறிவிக்கிறார்? அவை எதுவும் நிறைவேறியிருக்கின்றனவா?

  • வாக்குத்தத்த வியாபாரிகள்

    ஆசீர்வாத நற்செய்தி சபைகள் நடத்துபவர்கள் தங்கள் சபையாரிடம், "தேவன் நீங்கள் உலக வாழ்க்கையை அனுபவித்து மகிழ்ச்சியையும், செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் அனுபவிக்க விரும்புகிறார். வியாதி தீரும்! வறுமை ஒழியும்! அதுதான் உன் பரிசு. இந்த வாக்குத்தத்தத்தை உங்களுக்குரியதாக்கிக் கொள்ளுங்கள். என்னோடு சேர்ந்து இதை சொல்லுங்கள்!" என்று பிரகடனம் செய்கிறார்கள். அவர்கள் தம்வசப்பட்ட சபை மக்களை பழைய ஏற்பாட்டு வேதவசனங்களை வாய்மொழியால் மந்திரம்போல மறுபடி மறுபடி ஆமென் போட்டு ஓதவைக்க உற்சாகப்படுத்துவது வழக்கம். மேலும் அவர்கள் சபையாரின் மாதாந்திர ஊதியத்தில் தசமபாகமாக பத்தில் ஒரு பங்கை தேவாலயத்திற்கென  கோருகின்றனர். இவை எல்லாம் வேதாகாமப்பூர்வமானவையா? உலகப்பிரகாரமனான வெற்றிகளையும்,  செல்வச்செழிப்பையும் தேடுவதைப்பற்றி இயேசு என்ன சொன்னார்?

Scriptures, unless otherwise indicated, are taken from THE HOLY BIBLE, NEW INTERNATIONAL VERSION®, NIV® Copyright © 1973, 1978, 1984, 2011 by Biblica, Inc.® Used by permission. All rights reserved worldwide. Scriptures indicated NASB are taken from the NEW AMERICAN STANDARD BIBLE®, Copyright © 1960,1962,1963,1968,1971,1972,1973,1975,1977,1995 by The Lockman Foundation. Used by permission.