mei kristhavam

  • கிறிஸ்துவின் பாடுகளில் பங்கு

    பவுல் எழுதுகிறார் – நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே, தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே, கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும். ரோமர் 8:17. இது நியாயமான விசயமாகத்தான் தெரிகிறது. கிறிஸ்துவின் பாடுகளில் நாம் பங்கெடுத்தால் மட்டுமே அவருடைய மகிமையில் பங்கெடுப்போம். இயேசு என்ன விதமான பாடுகளை சந்தித்தார்? சுவிசேஷத்திற்காக பாடுபடுவது அப்போஸ்தலர்களான பவுல், பேதுரு போன்றவர்களுக்கு மட்டும் தானா?

  • கெஹன்னா- நித்திய அக்கினிக்கடல்

    "கெஹன்னா"என்ற கிரேக்க வார்த்தை "நரகம்" என பன்னிரண்டு தடவை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கெஹன்னா நரகத்தை குறிக்கிறது எனில், உண்மையில் நாம் டிக்கெட் எடுத்து விமானம் மூலம் நரகத்திற்கு செல்ல முடியும்! ஆம், இஸ்ரவேல் நாட்டிலே மெய்யாகவே அமைந்துள்ள ஒரு நிஜ இடம் "கெஹன்னா". அது ஒரு பெயர்ச்சொல். ஒரு நிஜ இடத்தின் பெயர்! ஆகவே தான் ஒய்.எல்.டீ. (YLT) போன்ற ஆங்கில மொழிபெயர்ப்புகள் "நரகம்" என்று சொல்லாமல் எப்படி ஒரு இடப்பெயரை பயன்படுத்துவோமோ, அங்ஙனமே அதை "கெஹன்னா" (Gehenna) என்றே குறிப்பிடுகின்றன. 'கெஹன்னாவில் உள்ள அக்கினி' என்று இயேசு சொல்வது எப்படியென்றால், 'சைதாப்பேட்டையில் எரியும் தீ' என்று ஒரு சென்னை நகரவாசி சொல்வதை போன்றதே! "கெஹன்னா" என்ற பெயர் கொண்ட ஹின்னோம் பள்ளத்தாக்கு எருசலேம் நகரத்திற்கு சற்று வெளியே அமைந்துள்ளது. இயேசுவின் காலத்தில் அது அந்த நகரத்தின் குப்பையெரிக்கும் பேட்டையாக இருந்தது. குப்பையாக கொட்டப்படும் பொருட்கள் யாவற்றையும் முழுவதாக உட்கொண்டு அழிப்பதற்கென அங்கே தொடர்ந்து நெருப்பு எரியவைக்கப்பட்டுக்கொண்டே (ஒரு நித்திய அக்கினிக்கடல்!) இருக்கும்.

  • கேட்டின் மகன்

    வேதாகம தீர்க்கதரிசனங்கள் ஒரு "கேட்டின் மகனாகிய பாவமனுஷன்", அதாவது ஒரு அந்திக்கிறிஸ்துவை முன்னறிவித்தன. பலர் அந்த தீர்க்கதரிசனங்கள் உரைப்பது எதிர்காலத்தில் எழப்போகும் ஒரு உலகத் தலைவரை என்று எதிர்பார்க்கின்றனர். வேறு சிலர் அந்த நபர் ரோம பேரரசனாக இருந்த நீரோ என்றும் அந்தத் தீர்க்கதரிசனங்கள் எல்லாம் கி.பி.70-இலேயே நிறைவேறிவிட்டன என்றும் கருதுகின்றனர். இந்த இரண்டு  கோட்பாடுகளில் ஏதேனும் ஒன்று உண்மையாக இருந்தால் - அதாவது, அந்திக்கிறிஸ்து கி.பி.70-இல் ஒரு குறுகியகால ஆட்சி செய்தான் என்றாலோ (அல்லது) அவன் வெகுதொலைவில் உள்ள எதிர்காலத்தில்தான்  எழவிருக்கிறான் என்றாலோ - அது திருச்சபை வரலாற்றின் பெரும்பகுதியை (2000-சொச்சம் ஆண்டுகளை) அர்த்தமற்றதாக்கிவிடும். அது நிச்சயம் சரியாக தோன்றவில்லை. வேதாகமம் உண்மையில் அப்படியா சொல்கிறது?

  • சரிசமானத்துவ கேள்வி

    இயேசு அவர்களை நோக்கி, "என் பிதா இதுவரைக்கும் கிரியைசெய்துவருகிறார். நானும் கிரியைசெய்துவருகிறேன்," என்றார். அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மை தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள் (யோவான் 5:17-18).இந்த வசனத்தில் பரிசுத்த ஆவி பற்றி எந்தவிதமான குறிப்பும் இல்லை. எனினும் சிலர் அந்த ஓட்டையை மறந்து, “சரிசமானத்துவ” திரித்துவத்தை ஆதரிக்க இந்த வசனத்தை மேற்கோள் காட்டுவது உண்டு. இந்த வசனத்தின் சூழலையும், மேலும் இயேசு பிதாவுடன் தனக்குள்ள உறவின் தன்மை பற்றி நேரடியாகவே  குறிப்பிடும் மற்ற வசனங்களையும் படிப்போம்.

  • சர்வ வல்ல தேவன் யார்?

    திரித்துவம், திரித்துவ தெய்வம் என்ற வார்த்தைகள் வேதாகமத்தில் காணப்படவில்லை. திரித்துவக் கோட்பாடில் பயன்படுத்தப்படுகிற தலைப்புகள் - 'பிதாவாகிய தேவன்', 'குமாரனாகிய தேவன்', 'பரிசுத்த ஆவியானவராகிய தேவன்' - நாம் பைபிளில் தேடும்போது, இவற்றில் ஒன்றை மட்டுமே காணலாம் - 'பிதாவாகிய தேவன்'. வேதாகமத்தில் 'தேவன்' என்ற வார்த்தை 3500+ தரம் நிகழ்கிறது. கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் சர்வ வல்ல தேவனை (கடவுளை) குறிக்கவே பயன்படுத்தப்படுகிறது. ஆயினும் சில இடங்களில் 'தேவன்' என்ற வார்த்தை வேறுவிதமாக பயன்படுத்தப்படுவதையும் காண்கிறோம். அதனால்தான் பவுல் கூறுகிறார் - 'வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டு.' (1 கொரிந்தியர் 8:5). வேதாகமத்தில் வேறே தேவர்களை எங்கு காண்கிறோம்?

  • சுவிசேஷ ஓட்டத்தின் நோக்கம்

    வேதாகமப்படி, கிறிஸ்துவை பின்பற்றுகிறவருடைய பரம அழைப்பு என்பது, அனைத்து மனுக்குலத்திற்கும் அவரது இராஜ்யத்தின் சுவிசேஷத்தை அறிவிக்க நம் வாழ்க்கையை முழுமையாய் அர்ப்பணிப்பதே ஆகும். மேலோட்டமாக பார்த்தால், இது ஒரு அற்பமான விஷயம் போல தோன்றலாம். ஆனால் வேதவாக்கியங்களை நாம் வாசிக்கும்போது, நற்செய்தியை அறிவிக்கும் இந்த சுவிசேஷ ஓட்டத்தில் ஓட நம்மை நாமே ஜீவபலியாய் ஒப்புக்கொடுக்கும்படி தேவன் ஏன் கேட்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். அவரது நோக்கம் பல்வேறு சாராம்சங்களை கொண்டதாகும். அவற்றை ஒவ்வொன்றாக ஆழமாக படிப்போம்.

  • ஞானஸ்நானம்

    இரண்டாம் நூற்றாண்டு முதல், தண்ணீர் ஞானஸ்நானம் கடந்தகால பாவங்களை சுத்திகரித்து கடவுளுடன் ஓர் உறவை நிலைநாட்டும் ஒரு சடங்காக பயன்படுத்தப்படு வருகிறது. கிறிஸ்துவின் அப்போஸ்தலரால் கொடுக்கப்பட்ட மெய்  ஞானஸ்நானத்தின் நோக்கம் அதுதானா? கிறிஸ்துவின் பெயரால் கொடுக்கப்படும் ஞானஸ்நானத்திற்கும் யோவான் ஸ்நானகன் கொடுத்த ஸ்நானத்திற்கும் என்ன வித்தியாசம்? ஏன் அது  ஒரு 'மறுபிறப்பு' என எண்ணப்படுகிறது? இந்த அடையாளப்பூர்வ செயல் அவசியம்தானா? குழந்தைகள்  கிறிஸ்துவிற்குள் ஞானஸ்நானம் பெறமுடியுமா? ஒரு நபர் ஞானஸ்நானம் எடுக்கும்போது என்னதான் நடக்கிறது?

  • டார்டரூ - வீழ்ந்த தூதர் சிறை

    "டார்டரூ" என்ற கிரேக்க வார்த்தை வேதாகமத்தில் ஒரே ஒருமுறைதான் வருகிறது. அது "நரகம்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. "பாவம் செய்த தூதர்களை தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்தார்" (2பேதுரு 2:4). –இங்கே "நரகத்திலே தள்ளி" என்று முழு சொற்றொடரும் "டார்டரூ" என்ற ஒரே மூல கிரேக்க வார்த்தையின் மொழியாக்கம் ஆகும். சில தேவதூதர்கள் தமது உயர் கண்ணியத்தில் இருந்து வீழ்ந்து தகுதியற்ற அவமான நிலைக்கு ஆளானதையும், அதனால் தேவன் அவர்களை கீழ்நிலைப்படுத்தினதையும் அது குறிக்கிறது. விழுந்துபோன தூதர்களையும், பாவிகளையும் நித்திய காலமாக பிடித்துவைக்க ஒரு பாதாள நரக உலகம் இருக்கிறது என்று பிரசங்கிக்கும் பொருட்டு சிலர் இந்த வசனத்தை தவறாக பயன்படுத்துவது உண்டு. ஆனால், வசனம் நமக்கு என்ன காண்பிக்கிறது?

  • தனியுரிமை கொள்கை

    This privacy policy sets out how ChristianityOriginal.com uses and protects any information that you provide when you use this website.

    ChristianityOriginal.com is committed to ensuring that your privacy is protected. Should we ask you to provide certain information by which you can be identified when using this website, you can be assured that it shall only be used in accordance with this privacy statement.
    ChristianityOriginal.com may change this policy from time to time by updating this page. You should check this page periodically to ensure that you are satisfied with any changes.

    This policy is effective December 31, 2013.

    • What do we collect?
      We may collect your name if you choose to leave a comment on an article. Instead if you choose to use your facebook or any other third-party sign-in user id to leave the comment, then that sign-in is with the third-party servers.
      We may collect your name and e-mail address if you register and create an account with us.
    • What do we do with the information we gather?
      We require this information just for our internal record-keeping purposes, to identify you by your name for any comments that you post on the articles, and to notify you in case you sign up for any notifications.
    • Security
      We are committed to ensuring that your information is secure. In order to prevent unauthorized access or disclosure we have put in place suitable physical, electronic and managerial procedures to safeguard and secure the information we collect online.
    • Links to other websites
      Our website may contain links to other websites of interest. However, once you have used these links to leave our site, you should note that we do not have any control over that other website. Therefore, we cannot be responsible for the protection and privacy of any information which you provide whilst visiting such sites and such sites are not governed by this privacy statement. You should exercise caution and look at the privacy statement applicable to the website in question.
    • Controlling your personal information
      We will not sell, distribute or lease your personal information to third parties unless we have your permission or are required by law to do so. If you believe that any information we are holding on you is incorrect or incomplete, please write to or email us as soon as possible. We will promptly rectify any information found to be incorrect.
  • திரித்துவம் கிறிஸ்தவத்துள் நுழைந்த கதை

    மறையியல் ஞானமார்க்க தத்துவங்கள் (Gnosticism) பரவ ஆரம்பித்தபோது அப்போஸ்தலர் யோவான் இயேசு தேவகுமாரன் என்பதையும், வல்லமை வாய்ந்த வார்த்தையானவர் என்பதையும் அழுத்தமாக வலியுறுத்தி பதிலளிக்கிறார். அந்த வரலாற்று சூழலின் வெளிச்சத்தில் பார்த்தால் யோவானின் புத்தகங்கள் ஒரு புது அர்த்தம்  கொள்கின்றன. அப்போஸ்தலர்கள் இறந்த பிறகு, ஞானமார்க்கத்திற்கு எதிர்ப்பாக சில கிறிஸ்தவர்கள் இயேசுவைப் படிப்படியாக தேவனுடைய குமாரன் என்ற ஸ்தானத்திலிருந்து தேவனுக்கே இணையாக உயர்த்துவதை வரலாறு காட்டுகிறது. பிறகு 4-ம் நூற்றாண்டில், இயேசுவை கடவுள் என்று அறிவிக்கும் ஒரு பிரமாணத்தை (Creed) நிறுவவதில் அரசியல் ஆற்றும் பங்கைக் காண்கிறோம். திரித்துவம் என்ற கோட்பாடு - அதாவது, பரிசுத்த ஆவியும் கடவுள் எனும் தத்துவம், 5-ம் நூற்றாண்டில் நுழைகிறது.

  • திருச்சபை

    புதிய ஏற்பாட்டில் 'திருச்சபை' (Church) என்ற வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தினது இயேசுதான். இன்று பெரும்பான்மை மக்கள் திருச்சபைகள் என்றால் தேவாலய கட்டடங்கள் என்று நினைக்கின்றனர். உண்மையில் வேதாகமப்படி, திருச்சபை என்றால் என்ன?  'திருச்சபை' என்ற வேதாகம கிரேக்க மூலச்சொல்லானது எக்கலீசியா (ekklesia) ஆகும். அதன் பொருள் என்ன? ஆதி திருச்சபைகளை வேதாகமம் எவ்வாறு விவரிக்கிறது? இயேசு கிறிஸ்துவின் திருச்சபையில் ஒரு அங்கமாக ஒருவர் எப்படி சேர்வது? அதற்கென செய்ய வேண்டிய சில குறிப்பிட்ட காரியங்கள் உள்ளனவா?

  • திருச்சபை நம்பிக்கைகள் - ஒரு வரலாறு

    ஆதித்திருச்சபை இராஜ்யம் குறித்து என்ன நம்பிக்கை கொண்டிருந்தது? அடுத்த நூற்றாண்டுகளில் என்ன நடந்தது? இயேசு கிறிஸ்துவிற்குப் பின்வந்த இரண்டாயிரம் ஆண்டுகால வரலாற்றில் திருச்சபையின்  இராஜ்ய நம்பிக்கைகள் குறித்து என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா என்ன பதிவு செய்கிறது? இன்றைய கிறிஸ்தவர்கள் இராஜ்யத்தைப் பற்றி என்ன நம்புகிறார்கள்? நவீனவாதிகள், அடிப்படைவாதிகள் மற்றும் ஆன்மீகவாதிகள் இடையேயான வேறுபாடுகள் என்ன? அவர்களில் யாராவது வேதாகம சத்தியங்களைக் கடைப்பிடிக்கிறார்களா?

  • தேர்ந்தெடுக்கப்பட்டோரின் அழைப்பு

    அப்போஸ்தலனாகிய பவுல் முன்னறிவித்ததைப் போல, கிறிஸ்தவர்களுக்குள்ளிருந்தே கொடிதான ஓநாய்கள் எழும்பி, வேதாகம சத்தியங்களை திரித்து, பெரும்பாலான விசுவாசிகளை ஏமாற்றினர். இந்த பரவலான வஞ்சனையானது அந்திக்கிறிஸ்துவின் 1260 வருட போப்பாண்டத்துவ ஆட்சிக்காலம் முழுவதும் நீடித்து, புராட்டஸ்டன்ட் சீர்திருத்த திருச்சபைகளிலும்கூட பல வடிவங்களில் தொடர்ந்து, பல நூற்றாண்டுகளாக நிலைத்து, இன்றும்கூட பரவலாக உள்ளது. அதனால்தான் இன்று காணப்படும் அனைத்து ஜனரஞ்சகமான கிறிஸ்தவ பிரிவுகளும் ஆதியிலிருந்த மெய் கிறிஸ்தவத்தின் அஸ்திபார நம்பிக்கைகளுக்கு எதிராகச் செல்லும் பல்வேறு கோட்பாடுகளைக் கொண்டிருக்கின்றன. அப்படியானால், ஒரு மெய்யான வேதாகாமப்பூர்வமான விசுவாசி இந்த காலத்தில் என்னதான் செய்ய வேண்டும்?

  • நம் அனைவரின் கடவுள் யார்?

    இன்றைய மனித மக்கள் தொகையில் சுமார் மூன்றில் ஒரு பங்கு கிறிஸ்தவர். உலகத்திலேயே மிகவேகமாக வளர்ந்து வரும் மதம் இஸ்லாம். ஆயிரக்கணக்கான தேவர்களை வழிபடும் பல கோடி இந்துக்களும் உண்டு. கடவுள் என்று யாருமே கிடையாது என நம்பும் நாத்திகர்களும் நம் மத்தியில் உண்டு. இப்படிப்பட்ட பல வகையான நம்பிக்கைகளில் எதுதான் சரி? மனிதர் வணங்கும் எல்லா தேவர்களும் தங்கள் சொந்த 'புனித நூல்கள்' மூலமே வரையறுக்கப்படுவதால், நாம் வேதாகமத்தையும், மத புத்தகங்களையும் சில சோதனைகளுக்கு உட்படுத்திப் பார்ப்போம். அறிவியலும், மனித வரலாறும் இரண்டு முக்கிய சோதனைகள்.

  • நரகத்தின் கட்டுக்கதை!

    சிலர், "நித்திய நரக வேதனை என்பது பைபிளில் இல்லாமல் இருக்கலாம்; எனினும் உலக மக்களை தேவனுக்கு கீழ்ப்படிய வைப்பதற்காக அவர்களை பயமுறுத்தும் அச்சுறுத்தலாக எரிநரகத்தைப் பயன்படுத்துவது பரவாயில்லை, தானே?" என்று கேட்கலாம். அது சரிதானா? இல்லை, அது சரி அல்ல. அப்படிப்பட்டவர்களை குறித்து ஏமாற்றம் அடைந்த தேவன் கூறுகிறார்: "அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது" (ஏசாயா 29:13). மிரட்சியாலும், அச்சுறுத்தல்களாலும் தனக்கு கீழ்ப்படிகிற இதயங்களை அவர் நாடவில்லை. மாறாக, தன்மேலும் தனது நீதியின்மேலும் கொண்ட அன்பாலே உந்தப்பட்டு மனமுவந்து கீழ்ப்படிகிற இதயத்தையே அவர் விரும்புகிறார். மேலும், சித்திரவதை பற்றிய எண்ணமே தேவனுக்கு அருவருப்பானது. தனது நியாயப்பிரமாணத்திலே தேவன் சித்திரவதை முறைகளை அனுமதிக்கவில்லை. நம் எதிரிகளிடமும் நாம் அன்பு செலுத்த வேண்டுமென்று கட்டளையிடுகிற தேவன் அவர்களை நித்தியமாக எரிப்பதற்கு விரும்புவாரா, என்ன?

  • நரகம் - ஒரு வரலாறு

    அக்கினிமயமான பாதாளம் குறித்த புறஜாதி நம்பிக்கைகள் எகிப்திய நிம்ரோது காலத்திலேயே தோன்றியவை. கிறிஸ்துவுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே, பார்சி சமயத்தை நிறுவின சரத்துஸ்தர் (Zoroaster) பாரசீகர்களுக்கு, மனிதர்களது செயல்களை வரவு (நன்மை), செலவுகளாக (தீமைகள்) பதிவு செய்யும் பூமியடியிலே இருண்ட பகுதிகளில் வாழும் ஓர் "பொய்களின் தேவன்" (Lord of Lies) பற்றி போதித்துள்ளார். மரணத்திற்குப்பின் ஆத்துமாக்கள் நியாயத்தீர்ப்புக்கு செல்லும் எனவும், தீயதாக நியாயந்தீர்க்கப்பட்டால், வேதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் போதனை செய்யப்பட்டது. புறஜாதியாரை எளிதாக கிறிஸ்தவத்திற்கு மதமாற்றம் செய்வதற்காக திருச்சபை இந்தக் கோட்பாடுகளை தத்தெடுத்துக்கொண்டது. அடையாளப்பூர்வ வசனங்களுடன் பார்சிய மத அர்த்தங்கள் சம்பந்தப்படுத்தப்பட ஆரம்பித்தன. இதுபோன்ற திரிப்புகள் (விசுவாச துரோகம்) நிகழும் என அப்போஸ்தலர் பவுல் தீர்க்கதரிசனமாக சொல்லியிருக்கிறார் (அப்போஸ்தலர் 20:29-30, 1தீமோத்தேயு 4:1).

  • நவீனத்துவம் - சாத்தியமா?

    நவீனத்துவ கோட்பாட்டின்படி மனிதனால் பூமியில் அமைதியான நீதி செழிக்கும் இராஜ்யத்தை எவ்வாறு நிறுவ முடியும்? நவீனவாதிகளின் கூற்று உண்மையில் சாத்தியமா? நாம் சமாதானத்தின் இராஜ்யம் நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறோமா? இதற்கு வேதவசன ஆதாரங்கள் உள்ளனவா? வேதம் இதைப்பற்றி என்னதான் சொல்கிறது?

  • நாங்கள் யார்?

    நாங்கள் யார்?

    1. வாழ்க்கை,பிரபஞ்சம் இவை எல்லாவற்றின் அர்த்தம் தேடும் பயணத்தில் சக பயணி நாங்கள். இந்த தேடுதலானது காலத்தின் சோதனைகளைத் தாண்டி நிலைநிற்கும் ஒரே புத்தகமான புனித வேதாகமத்தில் மிகவும் சுவாரஸ்யமாகிறது.
    2. வேதாகமம் தான் கடவுளின் வார்த்தை என்பதில் எங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. அதுவே தெய்வீக தாக்கம் கொண்ட அறிவிற்கெல்லாம் மூலாதாரம். அதன் நம்பகத்தன்மை காலகாலமாய் விஞ்ஞானம் மூலவும்,மனுக்குலத்தின் சரித்திரத்தின் மூலவும் மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது.
    3. "விவாதிப்போம்,வாருங்கள்,"என்று கர்த்தர் சொல்லுகிறார். (ஏசாயா1:18) -மனிதனின் பகுத்தறிவை முடக்க முயலும் நிறுவனமயமாக்கப்பட்ட மதங்கள் போல் அல்லாமல்,வாசகர்களைப் பகுத்தறிந்து விவாதிக்க அழைக்கும் ஒரே மத நூல் உலகத்திலேயே புனித வேதாகமம் மட்டும்தான்!
      தன்னுடன் விவாதிக்க அழைக்கும் கடவுளின் அழைப்பை (பணிவுடன்) மகிழ்ச்சியுடன் ஏற்று அவரது வார்த்தையைக் கவனமாய்ப் படிக்கிறோம்.
    4. நாங்கள் எந்த சபைப்பிரிவையும் சார்ந்தவர்கள் அல்ல. எங்களில் பெரும்பாலோர் பிரபலமான சபைப்பிரிவுகளில் அங்கமாக இருந்தவர்கள்தான். ஆனால்,வேதாகமத்தை படித்தபின் அதெல்லாம் மாறிப்போனது.
      மாறாக,வேதாகமத்தில் உள்ள மெய் நற்செய்தி அறிவிக்கும் மெய்யான கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படவே நாங்கள் விரும்புகிறோம்.
    5. எங்களுக்கு ஒத்த சிந்தனையுள்ள மெய் கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் பரவலாக உலகம் முழுவதும் உண்டு.

    நாங்கள் நம்புவது என்ன? ஏன் மெய் கிறிஸ்தவம் என்ற பெயர்?

    • உலகம் மற்றும் மனுக்குலத்தின் இன்றைய நிலைமையின் காரணம் என்னவென்று திருப்திகரமாய் விளக்கும் ஒரே மத நூல் புனித வேதாகமம் மட்டுமே என நம்புகிறோம்.
    • வேதாகமமானது கடவுள் அனைத்து மனுகுலத்திற்கும் வைத்திருக்கும் அற்புதமான திட்டத்தை எடுத்துரைக்கிறது எனவும், ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரை அத்திட்டத்தை முழுமையான ஒத்திசைவுடன் விளக்குகிறது எனவும் நம்புகிறோம்.
    • கடவுளை சென்றடைய இயேசு கிறிஸ்துவே ஒரே வழி எனவும், அவரது கிரயப்பலியும், உயிர்த்தெழுதலும் மனுக்குலத்தின் மீட்பிற்கு பிரதான காரணம் எனவும் விசுவாசிக்கிறோம்.
    • 2,000 வருட திருச்சபை வரலாறு படிக்கும்பொழுது, அந்த சரித்திரம் கிறிஸ்து மற்றும் அவரது அப்போஸ்தலர் போதித்து வேதாகமத்தில் எழுதப்பட்ட ஆதி அசல் கிறிஸ்தவமானது நிறுவனமயமாக்கப்பட்ட மதத்தாலும், அரசியல் தாக்கங்களாலும் எவ்வளவு தூரம் மாற்றப்பட்டுள்ளது எனக் காட்டுகிறது.
    • பல நூற்றாண்டுகளாக, மகிமையான மெய் சுவிசேஷம் பலவிதமாய் திரிக்கப்படுதலும், ஆதி விசுவாசத்தை களங்கப்படுத்தும்விதமாய் வசனங்கள் துஷ்பிரயோகம் பண்ணப்படுதலும் நடந்து வருகிறது.
      உண்மையில் இந்த கெடுதல்கள் எல்லாம் அப்போஸ்தலர்களால் முன்னறிவிக்கப்பட்டன (அப்போஸ்தலர் 20:29-30).
    • அந்த நூற்றாண்டுகள் பொழுதிலும், களங்கப்படாத மெய் கிறிஸ்தவ விசுவாசமானது (original Christianity), ஒடுக்குமுறைகள், பாடுகள் மத்தியிலும் வாழ்ந்த மெய் கிறிஸ்தவர்களால் தொடர்ந்து அன்புடன் கடைப்பிடிக்கப்பட்டு வந்து உள்ளது.
      மேலும், இயேசுவானவரே கணித்தது போல, அப்படிப்பட்ட கிறிஸ்தவர்கள் எப்பொழுதுமே எண்ணிக்கையில் சிலராகவே இருந்து வந்துள்ளனர் (மத்தேயு 7:14).
    • மூல வேதாகமத்தில் எழுதி வைக்கப்பட்ட மெய் கிறிஸ்தவமானது, ஆதாமின் இனமான மனுக்குலத்தின் மீட்பைச் சொல்லும் மகத்துவமான நற்செய்தி.
      அந்த மீட்பினை மனிதனால் உருவாக்கப்பட்ட எந்த மதமும் வழங்க முடியாது.

    நாங்கள் வேதாகமம் படிக்கும் வழிமுறை என்ன?

    • நாங்கள் வேதாகமத்தை தலைப்பு-ரீதியாகவும் மற்றும் நிருப-நிருபமாகவும் படித்து ஆய்வு செய்கிறோம்.
    • வசனங்களை எப்பொழுதும் சூழல் பொருத்தம் (context) பார்த்து படித்துப் புரிதல் அவசியம் என நம்புகிறோம்.
    • ஆசிரியரின் செய்தியை நன்றாக புரிந்துகொள்ள, புதிய ஏற்பாட்டில் உள்ள நிருபங்களை வழக்கமாக கடிதம் (letter) அல்லது மின்னஞ்சல் (e-mail) படிப்பது போல் ஒரே மூச்சில் படிக்குமாறு பரிந்துரைக்கிறோம்.
    • வேதாகமம் ஒருபோதும் ஒன்றுக்கொன்று நேர்மறையான வசனங்களைக் கொண்டு தன்னைத்தானே முரண்படுத்திக் கொள்ளாது என்று உறுதியாக நம்புகிறோம்.
      அப்படி ஏதேனும் ஒரு தலைப்பில் இரண்டு முரண்பட்ட வசனங்கள் வேதாகமத்தில் காணப்படும் என்றால், மூல (original) எபிரேயு / கிரேக்க (Hebrew / Greek) வேதாகமங்களில் அவ்வசனங்களை சரிபார்த்து தமிழ் மொழிபெயர்ப்பில் ஏதேனும் ஒன்றில் தவறு (translation error) நிகழ்ந்துள்ளதா என கண்டுபிடிக்கவேண்டும்.
      மேலும், வேதாகமத்தின் ஆரம்பகால ஆதி மூலப்பிரதிகளில் (earliest manuscripts) அவ்வசனங்கள் இரண்டும் உள்ளனவா என சரிபார்த்து அவற்றின் நம்பகத்தன்மையை (authenticity) உறுதி செய்ய வேண்டும்.
    • நாங்கள் எல்லாவற்றையும் சோதித்துப் பார்க்கும் வழக்கம் கடைப்பிடிக்கிறோம் (1தெசலோனிக்கியர்5:21). எந்த கேள்விகளுக்கும் விடைகள் அருவமாகவோ (abstract), வெறும் அலங்காரச் சொற்றொடர்களாகவோ (hyperbole) இருப்பின் நாங்கள் ஏற்றுக்கொள்வதில்லை.
    • ஒவ்வொருவரும் தனிப்பட வேதாகம வசனங்களை படித்து, கடவுளின் வார்த்தையில் வெளியாக்கப்பட்டுள்ள சத்தியத்தைப் பகுத்தறிந்து தனக்கென நிரூபித்துச் சொந்தமாக்கிக் கொள்ளுதல் அவசியம் என வலியுறுத்துகிறோம் (2தீமோத்தேயு 2:15).
    • நாங்கள் கடைப்பிடிக்கும் வேதாகம ஆய்வு நடைமுறைகள் பற்றிய பரிபூரணமான பட்டியலை இங்கே காணலாம்.

    எங்கள் குறிக்கோள் என்ன?

    • நம்முடையது முற்றிலும் வணிக நோக்கம் அல்லாத ஓர் முயற்சி.
    • எந்தவித வருவாயோ, இலாபமோ நாங்கள் தேடவில்லை.
    • ஆதாமின் மூலம் வரும் மரணத்தில் இருந்து மனுக்குலத்திற்கு இயேசு கிறிஸ்துவின் மூலம் வரும் மீட்பு பற்றியும், கிறிஸ்துவும் அவரது அப்போஸ்தலரும் பிரசங்கித்த வரவிருக்கும் தேவனின் இராஜ்யம் பற்றியுமான நற்செய்தியினை அனைவருடன் பகிர்ந்து கொள்வதே எமது குறிக்கோள்.
    • கடவுளின் வார்த்தையைப் பகிர்ந்து கொள்ள கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் நாங்கள் பெரும் பாக்கியமாகவும், ஆசீர்வாதமாகவும் எண்ணி மகிழ்கிறோம்.
  • நியாயத்தீர்ப்பு நாள்

    இரண்டாம் உயிர்த்தெழுதலில் எழுபவர்கள் ஒரு நியாயத்தீர்ப்புச்சோதனைக்காக ("க்ரைசீஸ்") எழுகிறார்கள். ஆம், இது அவர்களுக்கு நியாயத்தீர்ப்பு நாளாகும். ஆனால் நியாயத்தீர்ப்பு நாள் என்றால் என்னதான் அர்த்தம்? வேதவாக்கியங்கள் கடவுளுடைய இராஜ்யத்துடன் ஏன் அதனை இணைகின்றன? அது எவ்வளவு காலம் நீடிக்கும்? அது ஒரு 24 மணிநேர நாளா? கடவுளுடைய நியாயத்தீர்ப்புகள் பூமியில் வரும்போது உலகின் குடிமக்கள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள் என்று வேதாகமம் ஏன் சொல்கிறது?

  • படி, மீன் பிடி, கிறிஸ்து போல் ஆகு!

    Christ, Mary and Martha

    வேதவசனங்களை கவனமாக படித்து, கடவுளையும் கிறிஸ்துவையும் பற்றின அறிவில் வளர நாம் விரும்புகிறோம். அதற்கு சுவிசேஷ ஓட்டம் எவ்வாறு உதவுகிறது? இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களை தாம் மக்களை பிடிக்கிறவர்களாக அனுப்புவதாக கூறுகிறார். அதற்கும் நம் சுவிசேஷ ஓட்டத்திற்கும் என்ன சம்பந்தம்? எல்லோரும் கிறிஸ்துவைப் போல் மாற விரும்புகிறோம், அல்லவா? அவரது சாயலை எங்ஙனம் அடைவது என வேதாகமம் எங்கேனும் தெளிவாக வெளிப்படுத்துகிறதா?

Scriptures, unless otherwise indicated, are taken from THE HOLY BIBLE, NEW INTERNATIONAL VERSION®, NIV® Copyright © 1973, 1978, 1984, 2011 by Biblica, Inc.® Used by permission. All rights reserved worldwide. Scriptures indicated NASB are taken from the NEW AMERICAN STANDARD BIBLE®, Copyright © 1960,1962,1963,1968,1971,1972,1973,1975,1977,1995 by The Lockman Foundation. Used by permission.