திருச்சபை

புதிய ஏற்பாட்டில் 'திருச்சபை' (Church) என்ற வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தினது இயேசுதான். இன்று பெரும்பான்மை மக்கள் திருச்சபைகள் என்றால் தேவாலய கட்டடங்கள் என்று நினைக்கின்றனர். உண்மையில் வேதாகமப்படி, திருச்சபை என்றால் என்ன?  'திருச்சபை' என்ற வேதாகம கிரேக்க மூலச்சொல்லானது எக்கலீசியா (ekklesia) ஆகும். அதன் பொருள் என்ன? ஆதி திருச்சபைகளை வேதாகமம் எவ்வாறு விவரிக்கிறது? இயேசு கிறிஸ்துவின் திருச்சபையில் ஒரு அங்கமாக ஒருவர் எப்படி சேர்வது? அதற்கென செய்ய வேண்டிய சில குறிப்பிட்ட காரியங்கள் உள்ளனவா?

மேலும் படிக்க: திருச்சபை

மனந்திரும்புதல் - எதிலிருந்து?

வேதாகமத்தின் மூல கிரேக்கத்திற்கு செல்லும்போது, 'மனந்திரும்புதல்' (கிரேக்க: மெட்டனோயியா metanoia) என்ற வார்த்தை 'மனதை மாற்றுவது' என அர்த்தப்படுத்துகிறது என்பதை பார்க்கிறோம். சரி, நாம் எந்த விசயத்தில் மனதை மாற்றிக்கொள்ள வேண்டும்? மனிதர்கள் நீதி/நியாயமற்ற நிலையில் இருக்கிறார்கள் என வேதாகமம் ஏன் சொல்கிறது? பழைய ஏற்பாட்டு காலங்களில், கடவுள் நியாயப்பிரமாண உடன்படிக்கை என்று கட்டளைகளின் ஒரு தொகுப்பு கொடுத்தார். அந்த உடன்படிக்கையின் ஒப்பந்தம்தான் என்ன? அதற்கும் பாவத்திற்கும் என்ன சம்பந்தம்? புதிய ஏற்பாடு வரும் என்று முன்னமே அறிந்திருந்தால் கடவுள் ஏன் ஒரு பழைய ஏற்பாட்டை (நியாயப்பிரமாணத்தை) அளித்தார்?

மேலும் படிக்க: மனந்திரும்புதல் - எதிலிருந்து?

இயேசு கிறிஸ்துவின் மீதான விசுவாசம்

நியாயப்பிரமாண உடன்படிக்கையின் காலமானது, மனுக்குலம் சுயமாய் தம்மைதாமே நியாயப்படுத்திக்கொள்ள முனையும் முயற்சிகளிலிருந்து தம் மனப்போக்கை மாற்றி ஒரு இரட்சகரின் (கிறிஸ்துவின்) தேவையை புரிந்து கொள்ளவேண்டும் என்பதைக் காட்டியது. ஆனால், நாம் இன்னும் வீழ்ச்சியுற்ற மாம்சத்தில் இருக்கும்போது, கிறிஸ்து எவ்வாறு நம்மை நியாயப்படுத்த முடியும்? பாவமன்னிப்புக்காக ஜெபிக்கும்படி கிறிஸ்து நமக்குக் கற்றுக் கொடுத்தபோது, அந்த ஜெபம் எவ்வளவுதரம் நமக்குத் தேவைப்படும் என்று சொன்னாரா? நியாயப்பிரமாணம் கிறிஸ்துவின் அவசியத்தை நமக்குக் காட்டினதென்றால், அவருடைய வருகையைத் தொடர்ந்து அதன் நிலை என்ன ஆனது? அது இன்னும் நடைமுறையில் உள்ளதா?

மேலும் படிக்க: இயேசு கிறிஸ்துவின் மீதான விசுவாசம்

விசுவாசத்தை நிரூபிப்பது

திருச்சபையின் அழைப்பு பாவத்திற்கு எதிராக போராடுவது அல்ல என்றால், கிறிஸ்துவின்மீது வைக்கும் விசுவாசமே நமக்கு நீதியாக எண்ணப்படுகிறது என்றால், நம் விசுவாசத்தை நிரூபிக்க எதுவும் செய்யவேண்டியதில்லை என்று அர்த்தமா, என்ன? ஒரு நபர் கிறிஸ்துவின்மீது கொண்ட விசுவாசத்தை எவ்வாறு நிரூபிக்க முடியும்? நாம் கிறிஸ்துவைப் பின்பற்ற வேண்டும் என்று அடிக்கடி கூறப்படுகிறது. ஆனால் அதன் பொருள்தான் என்ன? இயேசு தன்னை பின்பற்றுபவர்களை என்ன செய்யும்படி கட்டளையிட்டார்?

மேலும் படிக்க: விசுவாசத்தை நிரூபிப்பது

ஞானஸ்நானம்

இரண்டாம் நூற்றாண்டு முதல், தண்ணீர் ஞானஸ்நானம் கடந்தகால பாவங்களை சுத்திகரித்து கடவுளுடன் ஓர் உறவை நிலைநாட்டும் ஒரு சடங்காக பயன்படுத்தப்படு வருகிறது. கிறிஸ்துவின் அப்போஸ்தலரால் கொடுக்கப்பட்ட மெய்  ஞானஸ்நானத்தின் நோக்கம் அதுதானா? கிறிஸ்துவின் பெயரால் கொடுக்கப்படும் ஞானஸ்நானத்திற்கும் யோவான் ஸ்நானகன் கொடுத்த ஸ்நானத்திற்கும் என்ன வித்தியாசம்? ஏன் அது  ஒரு 'மறுபிறப்பு' என எண்ணப்படுகிறது? இந்த அடையாளப்பூர்வ செயல் அவசியம்தானா? குழந்தைகள்  கிறிஸ்துவிற்குள் ஞானஸ்நானம் பெறமுடியுமா? ஒரு நபர் ஞானஸ்நானம் எடுக்கும்போது என்னதான் நடக்கிறது?

மேலும் படிக்க: ஞானஸ்நானம்

பரிசுத்த ஆவியின் அபிஷேகம்

'நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்.' 1கொரிந்தியர் 12:13. இதன் அர்த்தம் என்ன? ஞானஸ்நானத்தின் போது பரிசுத்த ஆவி ஏன் நமக்கு கொடுக்கப்படுகிறது? தேவனின் பரிசுத்த ஆவியின் இந்த அபிஷேகத்தின் நோக்கம் குறித்து இயேசு என்ன குறிப்பிட்டார்? பரிசுத்த ஆவியானாலான ஞானஸ்நானத்திற்கும் அக்கினியினாலான ஞானஸ்நானத்திற்கும் என்ன வித்தியாசம்?

மேலும் படிக்க: பரிசுத்த ஆவியின் அபிஷேகம்

Scriptures, unless otherwise indicated, are taken from THE HOLY BIBLE, NEW INTERNATIONAL VERSION®, NIV® Copyright © 1973, 1978, 1984, 2011 by Biblica, Inc.® Used by permission. All rights reserved worldwide. Scriptures indicated NASB are taken from the NEW AMERICAN STANDARD BIBLE®, Copyright © 1960,1962,1963,1968,1971,1972,1973,1975,1977,1995 by The Lockman Foundation. Used by permission.