நரகம் - ஒரு வரலாறு

அக்கினிமயமான பாதாளம் குறித்த புறஜாதி நம்பிக்கைகள் எகிப்திய நிம்ரோது காலத்திலேயே தோன்றியவை. கிறிஸ்துவுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே, பார்சி சமயத்தை நிறுவின சரத்துஸ்தர் (Zoroaster) பாரசீகர்களுக்கு, மனிதர்களது செயல்களை வரவு (நன்மை), செலவுகளாக (தீமைகள்) பதிவு செய்யும் பூமியடியிலே இருண்ட பகுதிகளில் வாழும் ஓர் "பொய்களின் தேவன்" (Lord of Lies) பற்றி போதித்துள்ளார். மரணத்திற்குப்பின் ஆத்துமாக்கள் நியாயத்தீர்ப்புக்கு செல்லும் எனவும், தீயதாக நியாயந்தீர்க்கப்பட்டால், வேதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் போதனை செய்யப்பட்டது. புறஜாதியாரை எளிதாக கிறிஸ்தவத்திற்கு மதமாற்றம் செய்வதற்காக திருச்சபை இந்தக் கோட்பாடுகளை தத்தெடுத்துக்கொண்டது. அடையாளப்பூர்வ வசனங்களுடன் பார்சிய மத அர்த்தங்கள் சம்பந்தப்படுத்தப்பட ஆரம்பித்தன. இதுபோன்ற திரிப்புகள் (விசுவாச துரோகம்) நிகழும் என அப்போஸ்தலர் பவுல் தீர்க்கதரிசனமாக சொல்லியிருக்கிறார் (அப்போஸ்தலர் 20:29-30, 1தீமோத்தேயு 4:1).

மேலும் படிக்க: நரகம் - ஒரு வரலாறு

ஆதாம் உட்பட கெட்டவரின் கதி

மரித்தவர்கள் தற்போது எங்கேதான் உள்ளனர்? அவர்கள் மறுபடியும் உயிர்பெற வாய்ப்பு உண்டா? முதல் மனிதனான ஆதாம் ஏதேன் தோட்டத்தில் கீழ்ப்படியாமல் வீழ்ச்சியடைந்தபோது அவன் வம்சாவழி வந்த நமது ஆத்துமாக்கள் அனைத்தும் "ஷியோல்/ஹேடீஸ்" என்றொரு பாதாளத்திற்கு கண்டனம் செய்யப்பட்டன. அதுதான் கல்லறை. ஆனாலும் நம் எல்லோருக்கும் எதிர்கால நம்பிக்கை உண்டு! (ஷியோல் என்னும்) கல்லறையின் பிடியிலிருந்து நம்மை மீட்கும் பொருள் (ransom) கொடுத்து மீட்டு விடுவிப்பேன் என்று தேவன் வாக்குத்தத்தம் செய்தார் (ஓசியா 13:14). அவர் இயேசுவை ஆதாமிற்குப் பதிலாக மரிப்பதற்கு அனுப்பிவைத்தார் (யோவான் 3:16). ஆதாமிற்குரிய மீட்பின் கிரயத்தை (விலையை) இயேசு கொடுத்து ஆதாமின் வம்சம் அனைவரையும் (எல்லா மனிதரையும்) உயிர்த்தெழ வைப்பதற்கான வழியை ஏற்படுத்தினார் (ரோமர் 5:12,18). இயேசுவே அனைவருக்குமாகக் கொடுக்கப்பட்ட மீட்கும் பொருள் (1தீமோத்தேயு 2:6). "ஆதாமிற்குள் எல்லாரும் மரிக்கிறது போல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்" (1கொரி 15:22).

மேலும் படிக்க: ஆதாம் உட்பட கெட்டவரின் கதி

நரகத்தின் கட்டுக்கதை!

சிலர், "நித்திய நரக வேதனை என்பது பைபிளில் இல்லாமல் இருக்கலாம்; எனினும் உலக மக்களை தேவனுக்கு கீழ்ப்படிய வைப்பதற்காக அவர்களை பயமுறுத்தும் அச்சுறுத்தலாக எரிநரகத்தைப் பயன்படுத்துவது பரவாயில்லை, தானே?" என்று கேட்கலாம். அது சரிதானா? இல்லை, அது சரி அல்ல. அப்படிப்பட்டவர்களை குறித்து ஏமாற்றம் அடைந்த தேவன் கூறுகிறார்: "அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது" (ஏசாயா 29:13). மிரட்சியாலும், அச்சுறுத்தல்களாலும் தனக்கு கீழ்ப்படிகிற இதயங்களை அவர் நாடவில்லை. மாறாக, தன்மேலும் தனது நீதியின்மேலும் கொண்ட அன்பாலே உந்தப்பட்டு மனமுவந்து கீழ்ப்படிகிற இதயத்தையே அவர் விரும்புகிறார். மேலும், சித்திரவதை பற்றிய எண்ணமே தேவனுக்கு அருவருப்பானது. தனது நியாயப்பிரமாணத்திலே தேவன் சித்திரவதை முறைகளை அனுமதிக்கவில்லை. நம் எதிரிகளிடமும் நாம் அன்பு செலுத்த வேண்டுமென்று கட்டளையிடுகிற தேவன் அவர்களை நித்தியமாக எரிப்பதற்கு விரும்புவாரா, என்ன?

மேலும் படிக்க: நரகத்தின் கட்டுக்கதை!

அசல் "நரகங்கள்"

"ஷியோல்", "ஹேடீஸ்", "கெஹன்னா", "டார்டரூ" என்ற நான்கு மூல வார்த்தைகளும் தமிழ் பைபிளில் "நரகம்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. "ஷியோல்" என்ற சொல் பழைய ஏற்பாட்டு எபிரேய பதமாகும். மற்ற மூன்றும் புதிய ஏற்பாட்டு கிரேக்க பதங்களாகும். தமிழ் பைபிள் மொழிபெயர்ப்புகள் கூறுவது போல் இந்த மூல வார்த்தைகள் அனைத்திற்கும் ஒரே அர்த்தம்தானா? அல்லது அச்சொற்கள் ஒவ்வொன்றிற்கும் வெவ்வேறு அர்த்தங்கள் உண்டா? எபிரேய, கிரேக்க அகராதிகளை எடுத்துப்பார்க்கும்போதும், இந்த வார்த்தைகளைக் குறித்த திருமறையின் சுய விவரிப்புகளையும் கவனித்துப்பார்க்கும்போதும், அச்சொற்களின் அர்த்தங்களைக் குறித்த ஆழமான நுண்ணறிவை நாம் கண்டறிகிறோம். தமிழ் வேதாகமங்களில் மேலோட்டமாக படிக்கும்போது ஒன்றுக்கொன்று முரணாக தோன்றுகிற வசனங்களை பற்றிய தெளிவையும் கண்டடைகிறோம்.

மேலும் படிக்க: அசல் "நரகங்கள்"