போப்பாண்டத்துவம்

  • கேட்டின் மகன்

    வேதாகம தீர்க்கதரிசனங்கள் ஒரு "கேட்டின் மகனாகிய பாவமனுஷன்", அதாவது ஒரு அந்திக்கிறிஸ்துவை முன்னறிவித்தன. பலர் அந்த தீர்க்கதரிசனங்கள் உரைப்பது எதிர்காலத்தில் எழப்போகும் ஒரு உலகத் தலைவரை என்று எதிர்பார்க்கின்றனர். வேறு சிலர் அந்த நபர் ரோம பேரரசனாக இருந்த நீரோ என்றும் அந்தத் தீர்க்கதரிசனங்கள் எல்லாம் கி.பி.70-இலேயே நிறைவேறிவிட்டன என்றும் கருதுகின்றனர். இந்த இரண்டு  கோட்பாடுகளில் ஏதேனும் ஒன்று உண்மையாக இருந்தால் - அதாவது, அந்திக்கிறிஸ்து கி.பி.70-இல் ஒரு குறுகியகால ஆட்சி செய்தான் என்றாலோ (அல்லது) அவன் வெகுதொலைவில் உள்ள எதிர்காலத்தில்தான்  எழவிருக்கிறான் என்றாலோ - அது திருச்சபை வரலாற்றின் பெரும்பகுதியை (2000-சொச்சம் ஆண்டுகளை) அர்த்தமற்றதாக்கிவிடும். அது நிச்சயம் சரியாக தோன்றவில்லை. வேதாகமம் உண்மையில் அப்படியா சொல்கிறது?

  • பாபிலோனின் குமாரத்திகள்

    மெய் திருச்சபையானது எப்பொழுதுமே வனாந்தரத்தில் (சமூகத்திலிருந்து ஓரம் கட்டப்பட்ட நிலையில்) கேட்டின் மகனின் (அந்திக்கிறிஸ்துவின்) 1,260 வருட ஆட்சியின்கீழ் போப்பாண்டத்துவதால்  துன்புறுத்தப்பட்டிருந்து வந்திருந்ததுதான் உண்மை என்றால், சீர்திருத்த (Reformation) சகாப்தத்தின் பிரபலமான புராட்டஸ்டன்ட் சீர்திருத்த திருச்சபைகள் எப்படிப்பட்டவை? அவை நல்ல சபைகள் இல்லையா? அவைகள் போப்பாண்டத்துவத்தின் வேதாகமம் சாராத போதனைகளுக்கு ஆட்சேபம் தெரிவித்து அந்த அமைப்பிலிருந்து வெளிவந்தன, அல்லவா? பைபிளில் திருச்சபை வரலாற்றில் அந்தவொரு காலப்பகுதி பற்றி எந்தவொரு தீர்க்கதரிசனங்களும் உள்ளனவா? அவை எவ்வாறு நிறைவேறின?

Scriptures, unless otherwise indicated, are taken from THE HOLY BIBLE, NEW INTERNATIONAL VERSION®, NIV® Copyright © 1973, 1978, 1984, 2011 by Biblica, Inc.® Used by permission. All rights reserved worldwide. Scriptures indicated NASB are taken from the NEW AMERICAN STANDARD BIBLE®, Copyright © 1960,1962,1963,1968,1971,1972,1973,1975,1977,1995 by The Lockman Foundation. Used by permission.