அந்திக்கிறிஸ்து

  • கேட்டின் மகன்

    வேதாகம தீர்க்கதரிசனங்கள் ஒரு "கேட்டின் மகனாகிய பாவமனுஷன்", அதாவது ஒரு அந்திக்கிறிஸ்துவை முன்னறிவித்தன. பலர் அந்த தீர்க்கதரிசனங்கள் உரைப்பது எதிர்காலத்தில் எழப்போகும் ஒரு உலகத் தலைவரை என்று எதிர்பார்க்கின்றனர். வேறு சிலர் அந்த நபர் ரோம பேரரசனாக இருந்த நீரோ என்றும் அந்தத் தீர்க்கதரிசனங்கள் எல்லாம் கி.பி.70-இலேயே நிறைவேறிவிட்டன என்றும் கருதுகின்றனர். இந்த இரண்டு  கோட்பாடுகளில் ஏதேனும் ஒன்று உண்மையாக இருந்தால் - அதாவது, அந்திக்கிறிஸ்து கி.பி.70-இல் ஒரு குறுகியகால ஆட்சி செய்தான் என்றாலோ (அல்லது) அவன் வெகுதொலைவில் உள்ள எதிர்காலத்தில்தான்  எழவிருக்கிறான் என்றாலோ - அது திருச்சபை வரலாற்றின் பெரும்பகுதியை (2000-சொச்சம் ஆண்டுகளை) அர்த்தமற்றதாக்கிவிடும். அது நிச்சயம் சரியாக தோன்றவில்லை. வேதாகமம் உண்மையில் அப்படியா சொல்கிறது?

  • தேர்ந்தெடுக்கப்பட்டோரின் அழைப்பு

    அப்போஸ்தலனாகிய பவுல் முன்னறிவித்ததைப் போல, கிறிஸ்தவர்களுக்குள்ளிருந்தே கொடிதான ஓநாய்கள் எழும்பி, வேதாகம சத்தியங்களை திரித்து, பெரும்பாலான விசுவாசிகளை ஏமாற்றினர். இந்த பரவலான வஞ்சனையானது அந்திக்கிறிஸ்துவின் 1260 வருட போப்பாண்டத்துவ ஆட்சிக்காலம் முழுவதும் நீடித்து, புராட்டஸ்டன்ட் சீர்திருத்த திருச்சபைகளிலும்கூட பல வடிவங்களில் தொடர்ந்து, பல நூற்றாண்டுகளாக நிலைத்து, இன்றும்கூட பரவலாக உள்ளது. அதனால்தான் இன்று காணப்படும் அனைத்து ஜனரஞ்சகமான கிறிஸ்தவ பிரிவுகளும் ஆதியிலிருந்த மெய் கிறிஸ்தவத்தின் அஸ்திபார நம்பிக்கைகளுக்கு எதிராகச் செல்லும் பல்வேறு கோட்பாடுகளைக் கொண்டிருக்கின்றன. அப்படியானால், ஒரு மெய்யான வேதாகாமப்பூர்வமான விசுவாசி இந்த காலத்தில் என்னதான் செய்ய வேண்டும்?

  • நரகம் - ஒரு வரலாறு

    அக்கினிமயமான பாதாளம் குறித்த புறஜாதி நம்பிக்கைகள் எகிப்திய நிம்ரோது காலத்திலேயே தோன்றியவை. கிறிஸ்துவுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே, பார்சி சமயத்தை நிறுவின சரத்துஸ்தர் (Zoroaster) பாரசீகர்களுக்கு, மனிதர்களது செயல்களை வரவு (நன்மை), செலவுகளாக (தீமைகள்) பதிவு செய்யும் பூமியடியிலே இருண்ட பகுதிகளில் வாழும் ஓர் "பொய்களின் தேவன்" (Lord of Lies) பற்றி போதித்துள்ளார். மரணத்திற்குப்பின் ஆத்துமாக்கள் நியாயத்தீர்ப்புக்கு செல்லும் எனவும், தீயதாக நியாயந்தீர்க்கப்பட்டால், வேதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் போதனை செய்யப்பட்டது. புறஜாதியாரை எளிதாக கிறிஸ்தவத்திற்கு மதமாற்றம் செய்வதற்காக திருச்சபை இந்தக் கோட்பாடுகளை தத்தெடுத்துக்கொண்டது. அடையாளப்பூர்வ வசனங்களுடன் பார்சிய மத அர்த்தங்கள் சம்பந்தப்படுத்தப்பட ஆரம்பித்தன. இதுபோன்ற திரிப்புகள் (விசுவாச துரோகம்) நிகழும் என அப்போஸ்தலர் பவுல் தீர்க்கதரிசனமாக சொல்லியிருக்கிறார் (அப்போஸ்தலர் 20:29-30, 1தீமோத்தேயு 4:1).

  • பாபிலோனின் குமாரத்திகள்

    மெய் திருச்சபையானது எப்பொழுதுமே வனாந்தரத்தில் (சமூகத்திலிருந்து ஓரம் கட்டப்பட்ட நிலையில்) கேட்டின் மகனின் (அந்திக்கிறிஸ்துவின்) 1,260 வருட ஆட்சியின்கீழ் போப்பாண்டத்துவதால்  துன்புறுத்தப்பட்டிருந்து வந்திருந்ததுதான் உண்மை என்றால், சீர்திருத்த (Reformation) சகாப்தத்தின் பிரபலமான புராட்டஸ்டன்ட் சீர்திருத்த திருச்சபைகள் எப்படிப்பட்டவை? அவை நல்ல சபைகள் இல்லையா? அவைகள் போப்பாண்டத்துவத்தின் வேதாகமம் சாராத போதனைகளுக்கு ஆட்சேபம் தெரிவித்து அந்த அமைப்பிலிருந்து வெளிவந்தன, அல்லவா? பைபிளில் திருச்சபை வரலாற்றில் அந்தவொரு காலப்பகுதி பற்றி எந்தவொரு தீர்க்கதரிசனங்களும் உள்ளனவா? அவை எவ்வாறு நிறைவேறின?

  • வெளி 20:5 - விஷமமாக செருகப்பட்ட தாமதம்

    பூமியில் வரவிருக்கும் கிறிஸ்துவின் இராஜ்யத்திற்கு ஒரு குறிப்பிட்ட நோக்கம் இருப்பதாக வேதம் கூறுகிறது. கிறிஸ்துவும் அவருடைய நிரூபிக்கப்பட்ட சீஷர்களும் இராஜ்யத்தின் ஆயிரம் ஆண்டுகளில் உயிர்த்தெழுப்பப்பட்ட மற்ற மனிதர்களை ஆட்சி செய்து, அவர்களுக்கு நீதி கற்பிப்பார்கள். ஆனால் வெளிப்படுத்துதலின் ஒரு வசனம் (20:5) மற்ற எல்லா வேதவசனங்களுக்கும் முரணாக மற்ற மனிதர்கள் அந்த ஆயிர வருஷம் முடியுமளவும் உயிரடைய மாட்டார்கள் என்று சொல்வதாக தெரிகிறது. அதன் கதை என்ன?

Scriptures, unless otherwise indicated, are taken from THE HOLY BIBLE, NEW INTERNATIONAL VERSION®, NIV® Copyright © 1973, 1978, 1984, 2011 by Biblica, Inc.® Used by permission. All rights reserved worldwide. Scriptures indicated NASB are taken from the NEW AMERICAN STANDARD BIBLE®, Copyright © 1960,1962,1963,1968,1971,1972,1973,1975,1977,1995 by The Lockman Foundation. Used by permission.