பரம அழைப்பு

  • அன்பின் பிரதான கட்டளைகள்

    Christ suffering for mankind

    கட்டளைகளிலேயே பிரதானமான கட்டளை எது என்று கேட்கப்பட்டபோது, இயேசு பதிலளிக்கிறார் – “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்பு (கிரேக்கம்: அகாப்பே “agape”) கூருவாயாக, இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்பு ("அகாப்பே”) கூருவாயாக என்பதே”. மத்தேயு 22:37-39. புதிய ஏற்பாடு எழுதப்பட்ட கிரேக்க மொழியில் அன்பை குறிக்க பல வார்த்தைகள் உள்ளன. இங்கே மத்தேயு "அகாப்பே" என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார். அதன் அர்த்தம் என்ன? நாம் எப்படி தேவனிடமும், மனிதரிடமும் "அகாப்பே" காட்ட முடியும்?

  • ஆவிக்குரியனவும், மாம்சத்திற்குரியனவும்

    Jesus in Gethsemane

    “அன்றியும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள், ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள். மாம்சசிந்தை மரணம்: ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்”. ரோமர் 8:5-6.மாம்ச சிந்தனை என்பது பாவத்தை குறிக்கிறது என்று பலர் நினைக்கின்றனர். மாம்சத்தின் செயல்கள் பாவம் மட்டுந்தானா? இல்லை, நாம் உலக வாழ்வில் செய்யும் அனைத்து விசயங்களுமே மாம்சத்திற்குரியவைதான்.

  • உங்கள் பரம அழைப்பு - நீங்கள் செய்ய வேண்டியது

    இயேசு ஆதாமிற்காக சிலுவையில் செலுத்திய மீட்பின் கிரயம் பற்றின உண்மையான நற்செய்தியை நீங்கள் புரிந்துகொண்டீர்களா? மனுக்குலம் அனைத்தும் மறுபடி பூமியில் உயிரோடு எழும்பி கிறிஸ்துவின் ஆட்சியின்கீழ் நீதி கற்றுக்கொள்ளவிருக்கும் தேவனின் மகிமையான இராஜ்யம் குறித்து நீங்கள் உற்சாகமடைகிறீர்களா? நீங்கள் அப்பொழுது கிறிஸ்துவுடன் ஆட்சி செய்ய விரும்புகிறீர்களா? மெய் கிறிஸ்தவத்தின் வேதாகம அஸ்திபாரங்களை நீங்கள் தெரிந்துகொண்டீர்களா? நீங்கள் தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் பின்பற்ற விரும்புகிறீர்களா? சரி, அப்படியென்றால் நீங்கள் இப்போது செய்ய வேண்டியது என்ன?

  • உண்மை சொல்லி நன்மை செய்!

    தேவனுடைய சித்தத்தின்படி பாடநுபவிக்கிறவர்கள் நன்மைசெய்கிறவர்களாய்த் தங்களை உண்மையுள்ள சிருஷ்டிகர்த்தாவாகிய அவருக்கு ஒப்புக்கொடுக்கக்கடவர்கள். 1பேதுரு 4:19. நாம் நன்மை செய்ய வேண்டும் என்று பேதுரு கூறுகிறார். ஆனால் இவ்வுலகத்தின் நன்மைகள் என அழைக்கப்படுபவை எல்லாம் மாயை, அர்த்தமற்றவை என வேதாகமம் கருதுகிறது (பிரசங்கி 1:14; 2:1). அப்படியிருக்க ஒருவருக்கு நாம் உண்மையிலேயே என்ன நன்மைதான் செய்ய முடியும்? மேலும் சிலர் கேட்கலாம் – ஏன் நாம் உலகிற்கு இப்போதே சொல்ல வேண்டும்? எப்படியும் இராஜ்யத்தில் கேட்கத்தானே போகிறார்கள்? பெரும்பாலோர் தற்போது நற்செய்தியை நிராகரிக்கத்தான் செய்கிறார்கள், இல்லையா?

  • கிறிஸ்துவின் திருச்சபை

    கிறிஸ்துவின் சரீரம் என கருதப்படும் மெய் திருச்சபையில் ஒருவர் அங்கமாய் இருக்கிறாரா என்பதை நாம் எப்படி அறிந்துகொள்ள முடியும்? தேவனின் இராஜ்ய நற்செய்தியின் வேதப்பூர்வமான அடிப்படைக் கோட்பாடுகளை புரிந்து கொண்டு  கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை பின்பற்றுவதற்காக தனது வாழ்வை அர்ப்பணித்தவர்களே கிறிஸ்துவின் மெய் திருச்சபையின் அங்கமாவார்கள். ஆனால், வேதாகமம் மிகப்பெரியது. அதில் கிறிஸ்துவின் நற்செய்தியின் இன்றியமையாத அஸ்திபார கோட்பாடுகளை நாம் உண்மையில் அடையாளம் கண்டுகொள்ள முடியுமா? மேலும், அந்த அஸ்திபாரக் கோட்பாடுகளில் ஒருவர் கருத்து வேறுபட்டால், கிறிஸ்துவின் மெய் திருச்சபையில் அவர் அங்கமாக இருப்பது சாத்தியம் ஆகுமா?

  • கிறிஸ்துவின் பாடுகளில் பங்கு

    பவுல் எழுதுகிறார் – நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே, தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே, கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும். ரோமர் 8:17. இது நியாயமான விசயமாகத்தான் தெரிகிறது. கிறிஸ்துவின் பாடுகளில் நாம் பங்கெடுத்தால் மட்டுமே அவருடைய மகிமையில் பங்கெடுப்போம். இயேசு என்ன விதமான பாடுகளை சந்தித்தார்? சுவிசேஷத்திற்காக பாடுபடுவது அப்போஸ்தலர்களான பவுல், பேதுரு போன்றவர்களுக்கு மட்டும் தானா?

  • சுவிசேஷ ஓட்டத்தின் நோக்கம்

    வேதாகமப்படி, கிறிஸ்துவை பின்பற்றுகிறவருடைய பரம அழைப்பு என்பது, அனைத்து மனுக்குலத்திற்கும் அவரது இராஜ்யத்தின் சுவிசேஷத்தை அறிவிக்க நம் வாழ்க்கையை முழுமையாய் அர்ப்பணிப்பதே ஆகும். மேலோட்டமாக பார்த்தால், இது ஒரு அற்பமான விஷயம் போல தோன்றலாம். ஆனால் வேதவாக்கியங்களை நாம் வாசிக்கும்போது, நற்செய்தியை அறிவிக்கும் இந்த சுவிசேஷ ஓட்டத்தில் ஓட நம்மை நாமே ஜீவபலியாய் ஒப்புக்கொடுக்கும்படி தேவன் ஏன் கேட்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். அவரது நோக்கம் பல்வேறு சாராம்சங்களை கொண்டதாகும். அவற்றை ஒவ்வொன்றாக ஆழமாக படிப்போம்.

  • திருச்சபை

    புதிய ஏற்பாட்டில் 'திருச்சபை' (Church) என்ற வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தினது இயேசுதான். இன்று பெரும்பான்மை மக்கள் திருச்சபைகள் என்றால் தேவாலய கட்டடங்கள் என்று நினைக்கின்றனர். உண்மையில் வேதாகமப்படி, திருச்சபை என்றால் என்ன?  'திருச்சபை' என்ற வேதாகம கிரேக்க மூலச்சொல்லானது எக்கலீசியா (ekklesia) ஆகும். அதன் பொருள் என்ன? ஆதி திருச்சபைகளை வேதாகமம் எவ்வாறு விவரிக்கிறது? இயேசு கிறிஸ்துவின் திருச்சபையில் ஒரு அங்கமாக ஒருவர் எப்படி சேர்வது? அதற்கென செய்ய வேண்டிய சில குறிப்பிட்ட காரியங்கள் உள்ளனவா?

  • தேர்ந்தெடுக்கப்பட்டோரின் அழைப்பு

    அப்போஸ்தலனாகிய பவுல் முன்னறிவித்ததைப் போல, கிறிஸ்தவர்களுக்குள்ளிருந்தே கொடிதான ஓநாய்கள் எழும்பி, வேதாகம சத்தியங்களை திரித்து, பெரும்பாலான விசுவாசிகளை ஏமாற்றினர். இந்த பரவலான வஞ்சனையானது அந்திக்கிறிஸ்துவின் 1260 வருட போப்பாண்டத்துவ ஆட்சிக்காலம் முழுவதும் நீடித்து, புராட்டஸ்டன்ட் சீர்திருத்த திருச்சபைகளிலும்கூட பல வடிவங்களில் தொடர்ந்து, பல நூற்றாண்டுகளாக நிலைத்து, இன்றும்கூட பரவலாக உள்ளது. அதனால்தான் இன்று காணப்படும் அனைத்து ஜனரஞ்சகமான கிறிஸ்தவ பிரிவுகளும் ஆதியிலிருந்த மெய் கிறிஸ்தவத்தின் அஸ்திபார நம்பிக்கைகளுக்கு எதிராகச் செல்லும் பல்வேறு கோட்பாடுகளைக் கொண்டிருக்கின்றன. அப்படியானால், ஒரு மெய்யான வேதாகாமப்பூர்வமான விசுவாசி இந்த காலத்தில் என்னதான் செய்ய வேண்டும்?

  • படி, மீன் பிடி, கிறிஸ்து போல் ஆகு!

    Christ, Mary and Martha

    வேதவசனங்களை கவனமாக படித்து, கடவுளையும் கிறிஸ்துவையும் பற்றின அறிவில் வளர நாம் விரும்புகிறோம். அதற்கு சுவிசேஷ ஓட்டம் எவ்வாறு உதவுகிறது? இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களை தாம் மக்களை பிடிக்கிறவர்களாக அனுப்புவதாக கூறுகிறார். அதற்கும் நம் சுவிசேஷ ஓட்டத்திற்கும் என்ன சம்பந்தம்? எல்லோரும் கிறிஸ்துவைப் போல் மாற விரும்புகிறோம், அல்லவா? அவரது சாயலை எங்ஙனம் அடைவது என வேதாகமம் எங்கேனும் தெளிவாக வெளிப்படுத்துகிறதா?

  • பயனற்ற விசயங்கள்

    Jesus calls Tax Collector Matthew to follow him

    திருச்சபை பாவத்தை எதிர்த்து போராட அழைக்கப்படவில்லை என்றால், அப்போஸ்தலர்கள் ஏன் சில காரியங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்துகிறார்கள்? கொரிந்தியர்களுக்கு பவுல் எழுதுகிறார் - 'எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் பயனாயிராது.' 1கொரிந்தியர் 6:12 . முதலாவதாக, கடுகளவும் குழப்பமில்லாத என்ன ஒரு துணிகர அறிவிப்பு இது! -- எல்லாவற்றையும் அநுபவிக்க திருச்சபைக்கு அதிகாரமுண்டு! ஆம், நாம் கிறிஸ்துவினால் நியாயபடுத்தப்பட்டு நீதிமான் என்று "கருதப்படுகிறோம்", அதனால் நாம் மாம்சத்தில் செய்யும் பாவத்தை தேவன் கணக்கில் கொள்வதில்லை. அதனால் எல்லாவற்றையும், எதை வேண்டுமானாலும் செய்ய நமக்கு நிச்சயம் அதிகாரம் உண்டு. ஆனால் எல்லாமும் நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் நாம் ஓடுவதற்கு பயனாயிருமா?

  • பரிசுத்த ஆவியின் அபிஷேகம்

    'நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்.' 1கொரிந்தியர் 12:13. இதன் அர்த்தம் என்ன? ஞானஸ்நானத்தின் போது பரிசுத்த ஆவி ஏன் நமக்கு கொடுக்கப்படுகிறது? தேவனின் பரிசுத்த ஆவியின் இந்த அபிஷேகத்தின் நோக்கம் குறித்து இயேசு என்ன குறிப்பிட்டார்? பரிசுத்த ஆவியானாலான ஞானஸ்நானத்திற்கும் அக்கினியினாலான ஞானஸ்நானத்திற்கும் என்ன வித்தியாசம்?

  • மனந்திரும்புதல் - எதிலிருந்து?

    வேதாகமத்தின் மூல கிரேக்கத்திற்கு செல்லும்போது, 'மனந்திரும்புதல்' (கிரேக்க: மெட்டனோயியா metanoia) என்ற வார்த்தை 'மனதை மாற்றுவது' என அர்த்தப்படுத்துகிறது என்பதை பார்க்கிறோம். சரி, நாம் எந்த விசயத்தில் மனதை மாற்றிக்கொள்ள வேண்டும்? மனிதர்கள் நீதி/நியாயமற்ற நிலையில் இருக்கிறார்கள் என வேதாகமம் ஏன் சொல்கிறது? பழைய ஏற்பாட்டு காலங்களில், கடவுள் நியாயப்பிரமாண உடன்படிக்கை என்று கட்டளைகளின் ஒரு தொகுப்பு கொடுத்தார். அந்த உடன்படிக்கையின் ஒப்பந்தம்தான் என்ன? அதற்கும் பாவத்திற்கும் என்ன சம்பந்தம்? புதிய ஏற்பாடு வரும் என்று முன்னமே அறிந்திருந்தால் கடவுள் ஏன் ஒரு பழைய ஏற்பாட்டை (நியாயப்பிரமாணத்தை) அளித்தார்?

  • விசுவாசமும், புனிதமும்

    சுவிசேஷ ஓட்டத்தை நாம் ஓடும்போது நாம் சாதிக்கின்ற அதிமுக்கியமான ஒரு காரியம் என்னவெனில் நம் விசுவாசத்தை நிரூபிக்கிறோம்! பவுல் எழுதிய நிருபங்களின்படி சுவிசேஷத்தை அறிவிப்பது என்பது ஒரு விசுவாசிக்கான அடிப்படைத் தேவையாகும். அதுவே விசுவாசத்தின் சோதனை. நற்செய்திப் பணியின் மற்றொரு முக்கிய நோக்கம் நமது ஆசாரிய கடமையை நிறைவேற்றுவதாகும். ஆம், ஒவ்வொரு உண்மையான கிறிஸ்தவனும் ஓர் ஆசாரியன் என்கிறது வேதாகமம். மேலும், இந்த ஆசாரிய கடமையை செய்வதே பரிசுத்தம் அடைவதற்கான வழியாகும்.

Scriptures, unless otherwise indicated, are taken from THE HOLY BIBLE, NEW INTERNATIONAL VERSION®, NIV® Copyright © 1973, 1978, 1984, 2011 by Biblica, Inc.® Used by permission. All rights reserved worldwide. Scriptures indicated NASB are taken from the NEW AMERICAN STANDARD BIBLE®, Copyright © 1960,1962,1963,1968,1971,1972,1973,1975,1977,1995 by The Lockman Foundation. Used by permission.