நியாயத்தீர்ப்பு நாள்

  • ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும்

    "ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே” எபிரெயர் 9:27. பெரும்பாலான மக்கள் இந்த வசனத்தை படிக்கும்போது, ஒவ்வொரு மனிதனின் தற்போதைய வாழ்க்கையும் நாம் ஒவ்வொருவரும் அனுபவிக்கும் ஒருவிதமான பரீட்சை என்றும், அதன் முடிவில் நாம் மரித்து நம் வாழ்வில் நாம் புரிந்த செயல்களுக்கு ஏற்ப பரிசோ தண்டனையோ பெற கடவுள்முன் நிற்க நேரிடும் என்று அர்த்தப்படுத்துகிறார்கள். இது வேதப்பூர்வமான அர்த்தமா? வேதவசனங்களின்படி நியாயத்தீர்ப்பு என்றால் என்ன?

  • டார்டரூ - வீழ்ந்த தூதர் சிறை

    "டார்டரூ" என்ற கிரேக்க வார்த்தை வேதாகமத்தில் ஒரே ஒருமுறைதான் வருகிறது. அது "நரகம்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. "பாவம் செய்த தூதர்களை தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்தார்" (2பேதுரு 2:4). –இங்கே "நரகத்திலே தள்ளி" என்று முழு சொற்றொடரும் "டார்டரூ" என்ற ஒரே மூல கிரேக்க வார்த்தையின் மொழியாக்கம் ஆகும். சில தேவதூதர்கள் தமது உயர் கண்ணியத்தில் இருந்து வீழ்ந்து தகுதியற்ற அவமான நிலைக்கு ஆளானதையும், அதனால் தேவன் அவர்களை கீழ்நிலைப்படுத்தினதையும் அது குறிக்கிறது. விழுந்துபோன தூதர்களையும், பாவிகளையும் நித்திய காலமாக பிடித்துவைக்க ஒரு பாதாள நரக உலகம் இருக்கிறது என்று பிரசங்கிக்கும் பொருட்டு சிலர் இந்த வசனத்தை தவறாக பயன்படுத்துவது உண்டு. ஆனால், வசனம் நமக்கு என்ன காண்பிக்கிறது?

  • நியாயத்தீர்ப்பு நாள்

    இரண்டாம் உயிர்த்தெழுதலில் எழுபவர்கள் ஒரு நியாயத்தீர்ப்புச்சோதனைக்காக ("க்ரைசீஸ்") எழுகிறார்கள். ஆம், இது அவர்களுக்கு நியாயத்தீர்ப்பு நாளாகும். ஆனால் நியாயத்தீர்ப்பு நாள் என்றால் என்னதான் அர்த்தம்? வேதவாக்கியங்கள் கடவுளுடைய இராஜ்யத்துடன் ஏன் அதனை இணைகின்றன? அது எவ்வளவு காலம் நீடிக்கும்? அது ஒரு 24 மணிநேர நாளா? கடவுளுடைய நியாயத்தீர்ப்புகள் பூமியில் வரும்போது உலகின் குடிமக்கள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள் என்று வேதாகமம் ஏன் சொல்கிறது?

  • மகா மறுசீரமைப்பின் காலம்

    "தேவன் எல்லோரின் மீட்பராக இருக்கிறார். அதோடு விசுவாசிகளுக்குச் சிறப்பான முறையில் மீட்பராக இருக்கிறார்." 1தீமோத்தேயு 4:10. இந்த வசனம் தேவன் எல்லோரையும் மீட்பார் எனவும், இன்றைய விசுவாசிகளை ஒரு சிறப்பான முறையில் மீட்பார் என்றும் உரைக்கிறது. அப்படியெனில், எல்லா மக்களுக்கும் இலவச சொர்க்க அனுமதி சீட்டு என்று அர்த்தமா? இன்றைய விசுவாசிகளுக்குக் காத்திருக்கும் சிறப்பு மீட்புதான் என்ன? அதுபோக, இயேசு சொல்கிறார், "முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேசங்கள் மேல் அதிகாரம் கொடுப்பேன்.” வெளி. 2:26. யார் இந்த தேசங்கள்? கிறிஸ்துவைப் பின்பற்றுவோரால் அவை எதற்காக ஆளப்படவேண்டும்?

Scriptures, unless otherwise indicated, are taken from THE HOLY BIBLE, NEW INTERNATIONAL VERSION®, NIV® Copyright © 1973, 1978, 1984, 2011 by Biblica, Inc.® Used by permission. All rights reserved worldwide. Scriptures indicated NASB are taken from the NEW AMERICAN STANDARD BIBLE®, Copyright © 1960,1962,1963,1968,1971,1972,1973,1975,1977,1995 by The Lockman Foundation. Used by permission.