உயிர்த்தெழுதல்

  • இரட்சிப்பு

  • ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும்

    "ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே” எபிரெயர் 9:27. பெரும்பாலான மக்கள் இந்த வசனத்தை படிக்கும்போது, ஒவ்வொரு மனிதனின் தற்போதைய வாழ்க்கையும் நாம் ஒவ்வொருவரும் அனுபவிக்கும் ஒருவிதமான பரீட்சை என்றும், அதன் முடிவில் நாம் மரித்து நம் வாழ்வில் நாம் புரிந்த செயல்களுக்கு ஏற்ப பரிசோ தண்டனையோ பெற கடவுள்முன் நிற்க நேரிடும் என்று அர்த்தப்படுத்துகிறார்கள். இது வேதப்பூர்வமான அர்த்தமா? வேதவசனங்களின்படி நியாயத்தீர்ப்பு என்றால் என்ன?

  • நியாயத்தீர்ப்பு நாள்

    இரண்டாம் உயிர்த்தெழுதலில் எழுபவர்கள் ஒரு நியாயத்தீர்ப்புச்சோதனைக்காக ("க்ரைசீஸ்") எழுகிறார்கள். ஆம், இது அவர்களுக்கு நியாயத்தீர்ப்பு நாளாகும். ஆனால் நியாயத்தீர்ப்பு நாள் என்றால் என்னதான் அர்த்தம்? வேதவாக்கியங்கள் கடவுளுடைய இராஜ்யத்துடன் ஏன் அதனை இணைகின்றன? அது எவ்வளவு காலம் நீடிக்கும்? அது ஒரு 24 மணிநேர நாளா? கடவுளுடைய நியாயத்தீர்ப்புகள் பூமியில் வரும்போது உலகின் குடிமக்கள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள் என்று வேதாகமம் ஏன் சொல்கிறது?

  • பரலோகத்தின் இராஜ்யம்

    பரலோகத்தின் இராஜ்யத்தை பற்றி எந்தவொரு கிறிஸ்தவரும் ஏன் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டும்? தேவனின் சித்தம் பரலோகத்தில் செய்யபடுவதை போல பூமிலேயும் செய்யப்படும் நாட்களான தேவனின் இராஜ்யம் பூமியில் வரவேண்டுமென ஜெபியுங்கள் என இயேசு ஏன் நமக்கு கற்றுக்கொடுத்தார்? பரலோகத்தின் இராஜ்யம் பரலோகத்தில் அல்லவா இருக்கும்? இயேசு பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, இராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார். அதனோடு ஒப்பிட்டுப்பார்க்கும்பொழுது, இன்றைய சபைகளில் இராஜ்யத்தைப் பற்றி காணப்படும் பரவலான போதனைதான் என்ன?

  • மனுக்குலத்தின் கிரய மீட்பு

    ஆதாமின் பாவத்திற்குரிய தண்டனையாக ஆதாமின் இனம் முழுவதும் மரண நித்திரையில் ஆழ்கிறதெனில், கிறிஸ்துவுக்குள் அனைவரும் உயிர்பெறுவர் என்று வேதாகமம் எப்படி வாக்களிக்கக்கூடும்? வேதத்தில் கடவுள் பிரகடனம் செய்கிறார்: “அவர்களை நான் மரணத்திற்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்.” ஓசியா 13:14. இந்த தீர்க்கதரிசனத்தைக் கிறிஸ்து எங்ஙனம் நிறைவேற்றினார் என்று அப்போஸ்தலன் பவுல் 1தீமோத்தேயு 2:4-6 வசனங்களில் விவரிக்கிறார். பவுலின் வார்த்தைகளில் இவற்றின் அர்த்தம்தான் என்ன - 'எல்லாரையும் மீட்கும் பொருள்', ‘ஏற்ற கால சாட்சி’, 'இரட்சிக்கப்பட்டு சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும்’?

  • மரித்தோர் உயிர்த்தெழுதல்

    இயேசு கிறிஸ்து பூமி திரும்பும்பொழுது, மரித்த அனைவரும் உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்று வேதவாக்கியங்கள் கூறுகின்றன. அப்படியெனில், எல்லா மனிதரும் ஒரே நொடிப்பொழுதில் உயிரோடு எழுவார்களா, என்ன? இரண்டுவித உயிர்த்தெழுதல்கள் உள்ளன என்று வேதாகமம் சொல்கிறது. மேலும் அது, 'முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவான்' என்று கூறுவதன் காரணம் என்ன?

  • மெய்யாகவே நல்ல செய்தி

  • யுக மாற்றம்

    முதலாம் உயிர்த்தெழுதலுடன் சம்பந்தப்பட்டதாக வேதாகமம் விவரிக்கிற நிகழ்வுகள் யாவை? இரண்டு உயிர்த்தெழுதல்கள் இருப்பது போல, இரண்டு நியாயத்தீர்ப்புகளும் உள்ளன. பேமா ஆசன நியாயத்தீர்ப்பிற்கும், மகா வெண்சிம்மாசன நியாயத்தீர்ப்பிற்கும் என்ன வேறுபாடு? அடுத்த யுகத்தின்  ஆரம்பத்தில் சாத்தானுக்கு என்ன நடக்கும்? இரண்டாவது உயிர்த்தெழுதலில் எழுகிறவர்கள் ஒரு நியாயத்தீர்ப்புச்சோதனையை (கிரேக்கம்: 'க்ரைசீஸ்') எதிர்கொள்வார்கள் என வேதாகமம் ஏன் சொல்கிறது?

  • வெளி 20:5 - விஷமமாக செருகப்பட்ட தாமதம்

    பூமியில் வரவிருக்கும் கிறிஸ்துவின் இராஜ்யத்திற்கு ஒரு குறிப்பிட்ட நோக்கம் இருப்பதாக வேதம் கூறுகிறது. கிறிஸ்துவும் அவருடைய நிரூபிக்கப்பட்ட சீஷர்களும் இராஜ்யத்தின் ஆயிரம் ஆண்டுகளில் உயிர்த்தெழுப்பப்பட்ட மற்ற மனிதர்களை ஆட்சி செய்து, அவர்களுக்கு நீதி கற்பிப்பார்கள். ஆனால் வெளிப்படுத்துதலின் ஒரு வசனம் (20:5) மற்ற எல்லா வேதவசனங்களுக்கும் முரணாக மற்ற மனிதர்கள் அந்த ஆயிர வருஷம் முடியுமளவும் உயிரடைய மாட்டார்கள் என்று சொல்வதாக தெரிகிறது. அதன் கதை என்ன?

Scriptures, unless otherwise indicated, are taken from THE HOLY BIBLE, NEW INTERNATIONAL VERSION®, NIV® Copyright © 1973, 1978, 1984, 2011 by Biblica, Inc.® Used by permission. All rights reserved worldwide. Scriptures indicated NASB are taken from the NEW AMERICAN STANDARD BIBLE®, Copyright © 1960,1962,1963,1968,1971,1972,1973,1975,1977,1995 by The Lockman Foundation. Used by permission.