இராஜ்யம்

  • அடிப்படைவாதம் - பூமி அழியுமோ?

    அடிப்படைவாதிகள் பூமி அழிந்துபோகும் என்கிறார்கள். அது வேதாகமப்படி சரியா? பின் இயேசு ஏன் "சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்," என்கிறார்? "பூமியோ என்றைக்கும் நிலைத்திருக்கிறது", என்று வசனம் ஏன் உரைக்கிறது? உலகத்தின் முடிவிற்கும் யுகத்தின் முடிவிற்கும் ஏதும் வித்தியாசம் உண்டா? தேவனின் "எரிச்சலின் அக்கினி" பூமியை துவம்சம் செய்தபின் சுவாரஸ்யமான விசயங்கள் பூமியில் நடக்கவிருப்பதை ஏன் வேதாகமம் முன்னறிவிக்கிறது?

  • ஆதாம் உட்பட கெட்டவரின் கதி

    மரித்தவர்கள் தற்போது எங்கேதான் உள்ளனர்? அவர்கள் மறுபடியும் உயிர்பெற வாய்ப்பு உண்டா? முதல் மனிதனான ஆதாம் ஏதேன் தோட்டத்தில் கீழ்ப்படியாமல் வீழ்ச்சியடைந்தபோது அவன் வம்சாவழி வந்த நமது ஆத்துமாக்கள் அனைத்தும் "ஷியோல்/ஹேடீஸ்" என்றொரு பாதாளத்திற்கு கண்டனம் செய்யப்பட்டன. அதுதான் கல்லறை. ஆனாலும் நம் எல்லோருக்கும் எதிர்கால நம்பிக்கை உண்டு! (ஷியோல் என்னும்) கல்லறையின் பிடியிலிருந்து நம்மை மீட்கும் பொருள் (ransom) கொடுத்து மீட்டு விடுவிப்பேன் என்று தேவன் வாக்குத்தத்தம் செய்தார் (ஓசியா 13:14). அவர் இயேசுவை ஆதாமிற்குப் பதிலாக மரிப்பதற்கு அனுப்பிவைத்தார் (யோவான் 3:16). ஆதாமிற்குரிய மீட்பின் கிரயத்தை (விலையை) இயேசு கொடுத்து ஆதாமின் வம்சம் அனைவரையும் (எல்லா மனிதரையும்) உயிர்த்தெழ வைப்பதற்கான வழியை ஏற்படுத்தினார் (ரோமர் 5:12,18). இயேசுவே அனைவருக்குமாகக் கொடுக்கப்பட்ட மீட்கும் பொருள் (1தீமோத்தேயு 2:6). "ஆதாமிற்குள் எல்லாரும் மரிக்கிறது போல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்" (1கொரி 15:22).

  • ஆன்மீகம்: எல்லாம் மனதில் மட்டும்தானோ?

    ஆன்மீகவாதிகள் இராஜ்யம் என்பது ஒரு ஆன்மீக காரியம் மட்டும்தான் என கருதுகின்றனர். வழக்கமாக, லூக்கா 17:21 வசனத்தை மேற்கோள் காட்டி இராஜ்யம் "மக்களுக்குள்" இருப்பதாக கூறுவார்கள். உண்மையிலேயே இயேசு பரிசேயரிடம் இராஜ்யம் அவர்களுக்குள் இருதயத்தில் இருப்பதாக கூறினாரா, என்ன?  அவர் சொல்லவந்த விசயம்தான் என்ன? அவருடைய கூற்று பைபிளின் மற்ற பகுதிகளுடன் எவ்வாறு பொருந்துகிறது?

  • இரட்சிப்பு

  • உண்மை சொல்லி நன்மை செய்!

    தேவனுடைய சித்தத்தின்படி பாடநுபவிக்கிறவர்கள் நன்மைசெய்கிறவர்களாய்த் தங்களை உண்மையுள்ள சிருஷ்டிகர்த்தாவாகிய அவருக்கு ஒப்புக்கொடுக்கக்கடவர்கள். 1பேதுரு 4:19. நாம் நன்மை செய்ய வேண்டும் என்று பேதுரு கூறுகிறார். ஆனால் இவ்வுலகத்தின் நன்மைகள் என அழைக்கப்படுபவை எல்லாம் மாயை, அர்த்தமற்றவை என வேதாகமம் கருதுகிறது (பிரசங்கி 1:14; 2:1). அப்படியிருக்க ஒருவருக்கு நாம் உண்மையிலேயே என்ன நன்மைதான் செய்ய முடியும்? மேலும் சிலர் கேட்கலாம் – ஏன் நாம் உலகிற்கு இப்போதே சொல்ல வேண்டும்? எப்படியும் இராஜ்யத்தில் கேட்கத்தானே போகிறார்கள்? பெரும்பாலோர் தற்போது நற்செய்தியை நிராகரிக்கத்தான் செய்கிறார்கள், இல்லையா?

  • ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும்

    "ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே” எபிரெயர் 9:27. பெரும்பாலான மக்கள் இந்த வசனத்தை படிக்கும்போது, ஒவ்வொரு மனிதனின் தற்போதைய வாழ்க்கையும் நாம் ஒவ்வொருவரும் அனுபவிக்கும் ஒருவிதமான பரீட்சை என்றும், அதன் முடிவில் நாம் மரித்து நம் வாழ்வில் நாம் புரிந்த செயல்களுக்கு ஏற்ப பரிசோ தண்டனையோ பெற கடவுள்முன் நிற்க நேரிடும் என்று அர்த்தப்படுத்துகிறார்கள். இது வேதப்பூர்வமான அர்த்தமா? வேதவசனங்களின்படி நியாயத்தீர்ப்பு என்றால் என்ன?

  • கிறிஸ்துவின் இரண்டாம் வருகை

    தானியேலின் தீர்க்கதரிசனங்கள் உலகம் கட்டியாளும் பேரரசுகளையும், அரசாங்கங்களையும் பற்றி என்ன முன்னறிவிக்கின்றன? கடைசி பேரரசான ரோமாபுரியின் வீழ்ச்சிக்குப் பின் என்ன நடக்கிறது? தேவனிடத்தில்  இராஜ்யத்தையும், அரசாங்க உரிமையையும் பெறவிருக்கும் மனுஷகுமாரன் யார்?

  • கிறிஸ்துவின் பாடுகளில் பங்கு

    பவுல் எழுதுகிறார் – நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே, தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே, கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும். ரோமர் 8:17. இது நியாயமான விசயமாகத்தான் தெரிகிறது. கிறிஸ்துவின் பாடுகளில் நாம் பங்கெடுத்தால் மட்டுமே அவருடைய மகிமையில் பங்கெடுப்போம். இயேசு என்ன விதமான பாடுகளை சந்தித்தார்? சுவிசேஷத்திற்காக பாடுபடுவது அப்போஸ்தலர்களான பவுல், பேதுரு போன்றவர்களுக்கு மட்டும் தானா?

  • திருச்சபை நம்பிக்கைகள் - ஒரு வரலாறு

    ஆதித்திருச்சபை இராஜ்யம் குறித்து என்ன நம்பிக்கை கொண்டிருந்தது? அடுத்த நூற்றாண்டுகளில் என்ன நடந்தது? இயேசு கிறிஸ்துவிற்குப் பின்வந்த இரண்டாயிரம் ஆண்டுகால வரலாற்றில் திருச்சபையின்  இராஜ்ய நம்பிக்கைகள் குறித்து என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா என்ன பதிவு செய்கிறது? இன்றைய கிறிஸ்தவர்கள் இராஜ்யத்தைப் பற்றி என்ன நம்புகிறார்கள்? நவீனவாதிகள், அடிப்படைவாதிகள் மற்றும் ஆன்மீகவாதிகள் இடையேயான வேறுபாடுகள் என்ன? அவர்களில் யாராவது வேதாகம சத்தியங்களைக் கடைப்பிடிக்கிறார்களா?

  • நரகத்தின் கட்டுக்கதை!

    சிலர், "நித்திய நரக வேதனை என்பது பைபிளில் இல்லாமல் இருக்கலாம்; எனினும் உலக மக்களை தேவனுக்கு கீழ்ப்படிய வைப்பதற்காக அவர்களை பயமுறுத்தும் அச்சுறுத்தலாக எரிநரகத்தைப் பயன்படுத்துவது பரவாயில்லை, தானே?" என்று கேட்கலாம். அது சரிதானா? இல்லை, அது சரி அல்ல. அப்படிப்பட்டவர்களை குறித்து ஏமாற்றம் அடைந்த தேவன் கூறுகிறார்: "அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது" (ஏசாயா 29:13). மிரட்சியாலும், அச்சுறுத்தல்களாலும் தனக்கு கீழ்ப்படிகிற இதயங்களை அவர் நாடவில்லை. மாறாக, தன்மேலும் தனது நீதியின்மேலும் கொண்ட அன்பாலே உந்தப்பட்டு மனமுவந்து கீழ்ப்படிகிற இதயத்தையே அவர் விரும்புகிறார். மேலும், சித்திரவதை பற்றிய எண்ணமே தேவனுக்கு அருவருப்பானது. தனது நியாயப்பிரமாணத்திலே தேவன் சித்திரவதை முறைகளை அனுமதிக்கவில்லை. நம் எதிரிகளிடமும் நாம் அன்பு செலுத்த வேண்டுமென்று கட்டளையிடுகிற தேவன் அவர்களை நித்தியமாக எரிப்பதற்கு விரும்புவாரா, என்ன?

  • நவீனத்துவம் - சாத்தியமா?

    நவீனத்துவ கோட்பாட்டின்படி மனிதனால் பூமியில் அமைதியான நீதி செழிக்கும் இராஜ்யத்தை எவ்வாறு நிறுவ முடியும்? நவீனவாதிகளின் கூற்று உண்மையில் சாத்தியமா? நாம் சமாதானத்தின் இராஜ்யம் நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறோமா? இதற்கு வேதவசன ஆதாரங்கள் உள்ளனவா? வேதம் இதைப்பற்றி என்னதான் சொல்கிறது?

  • நியாயத்தீர்ப்பு நாள்

    இரண்டாம் உயிர்த்தெழுதலில் எழுபவர்கள் ஒரு நியாயத்தீர்ப்புச்சோதனைக்காக ("க்ரைசீஸ்") எழுகிறார்கள். ஆம், இது அவர்களுக்கு நியாயத்தீர்ப்பு நாளாகும். ஆனால் நியாயத்தீர்ப்பு நாள் என்றால் என்னதான் அர்த்தம்? வேதவாக்கியங்கள் கடவுளுடைய இராஜ்யத்துடன் ஏன் அதனை இணைகின்றன? அது எவ்வளவு காலம் நீடிக்கும்? அது ஒரு 24 மணிநேர நாளா? கடவுளுடைய நியாயத்தீர்ப்புகள் பூமியில் வரும்போது உலகின் குடிமக்கள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள் என்று வேதாகமம் ஏன் சொல்கிறது?

  • பரலோகத்தின் இராஜ்யம்

    பரலோகத்தின் இராஜ்யத்தை பற்றி எந்தவொரு கிறிஸ்தவரும் ஏன் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டும்? தேவனின் சித்தம் பரலோகத்தில் செய்யபடுவதை போல பூமிலேயும் செய்யப்படும் நாட்களான தேவனின் இராஜ்யம் பூமியில் வரவேண்டுமென ஜெபியுங்கள் என இயேசு ஏன் நமக்கு கற்றுக்கொடுத்தார்? பரலோகத்தின் இராஜ்யம் பரலோகத்தில் அல்லவா இருக்கும்? இயேசு பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, இராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார். அதனோடு ஒப்பிட்டுப்பார்க்கும்பொழுது, இன்றைய சபைகளில் இராஜ்யத்தைப் பற்றி காணப்படும் பரவலான போதனைதான் என்ன?

  • மகா மறுசீரமைப்பின் காலம்

    "தேவன் எல்லோரின் மீட்பராக இருக்கிறார். அதோடு விசுவாசிகளுக்குச் சிறப்பான முறையில் மீட்பராக இருக்கிறார்." 1தீமோத்தேயு 4:10. இந்த வசனம் தேவன் எல்லோரையும் மீட்பார் எனவும், இன்றைய விசுவாசிகளை ஒரு சிறப்பான முறையில் மீட்பார் என்றும் உரைக்கிறது. அப்படியெனில், எல்லா மக்களுக்கும் இலவச சொர்க்க அனுமதி சீட்டு என்று அர்த்தமா? இன்றைய விசுவாசிகளுக்குக் காத்திருக்கும் சிறப்பு மீட்புதான் என்ன? அதுபோக, இயேசு சொல்கிறார், "முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேசங்கள் மேல் அதிகாரம் கொடுப்பேன்.” வெளி. 2:26. யார் இந்த தேசங்கள்? கிறிஸ்துவைப் பின்பற்றுவோரால் அவை எதற்காக ஆளப்படவேண்டும்?

  • மகா விசுவாச துரோகம்

    அப்போஸ்தலர்களின் மரணத்திற்குப்பின் கிறிஸ்தவத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற வேதாகமத்தின் கணிப்பு சுவாரஸ்யமாக இருந்தது. விசுவாசிகளுக்குள்ளிருந்தே கொடிதான ஓநாய்கள் எழும்பி, சீஷர்களை திசைதிருப்பும்படி மாறுபாடானவைகளைப் போதிக்கும் ஒரு மகத்தான விசுவாச துரோகம் நேரும் என்று அப்போஸ்தலர் பவுல் முன்னறிவித்தார். இந்த தீர்க்கதரிசனம் எங்ஙனம் நிறைவேறியது? இந்த விசுவாச துரோகம் கொண்டுவந்த தவறான கோட்பாடுகள் என்ன? அவை கிறிஸ்தவத்தை எப்படி பாதித்தன?

  • மகா வெண்சிம்மாசன நியாயத்தீர்ப்பு

    மகா வெண்சிம்மாசன நியாயத்தீர்ப்பு என்றால் என்ன? அதில் இயேசுவுடன் சிம்மாசனத்தில் அமரவிருப்பவர்கள் யார்? சிம்மாசனத்தின் முன் நிற்கும் வெள்ளாடுகளுக்கு, செம்மறியாடுகளும் யாரை சித்தரிக்கின்றன? ஆயிரம் வருடங்கள் ஆட்சி நடக்குமென்றால், அதன் முடிவில் என்ன நடக்கும்? சாத்தானின் கதி என்ன? 'மரணமும் கல்லறையும் அக்கினி கடலுக்குள் தள்ளப்படும்' என்று வேதாகமம் ஏன் சொல்கிறது? வரவிருக்கும் யுகங்கள் எப்படி இருக்கும்? அப்போது பூமியில் மனிதனின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? ஆயிரம் வருட ஆட்சிக்குப் பின்னர் இயேசு மற்றும் அவரது திருச்சபையின் பதவி என்னவாக மாறும்?

  • மனுக்குலத்தின் கிரய மீட்பு

    ஆதாமின் பாவத்திற்குரிய தண்டனையாக ஆதாமின் இனம் முழுவதும் மரண நித்திரையில் ஆழ்கிறதெனில், கிறிஸ்துவுக்குள் அனைவரும் உயிர்பெறுவர் என்று வேதாகமம் எப்படி வாக்களிக்கக்கூடும்? வேதத்தில் கடவுள் பிரகடனம் செய்கிறார்: “அவர்களை நான் மரணத்திற்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்.” ஓசியா 13:14. இந்த தீர்க்கதரிசனத்தைக் கிறிஸ்து எங்ஙனம் நிறைவேற்றினார் என்று அப்போஸ்தலன் பவுல் 1தீமோத்தேயு 2:4-6 வசனங்களில் விவரிக்கிறார். பவுலின் வார்த்தைகளில் இவற்றின் அர்த்தம்தான் என்ன - 'எல்லாரையும் மீட்கும் பொருள்', ‘ஏற்ற கால சாட்சி’, 'இரட்சிக்கப்பட்டு சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும்’?

  • மரித்தோர் உயிர்த்தெழுதல்

    இயேசு கிறிஸ்து பூமி திரும்பும்பொழுது, மரித்த அனைவரும் உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்று வேதவாக்கியங்கள் கூறுகின்றன. அப்படியெனில், எல்லா மனிதரும் ஒரே நொடிப்பொழுதில் உயிரோடு எழுவார்களா, என்ன? இரண்டுவித உயிர்த்தெழுதல்கள் உள்ளன என்று வேதாகமம் சொல்கிறது. மேலும் அது, 'முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவான்' என்று கூறுவதன் காரணம் என்ன?

  • மறுசீரமைப்பின் யுகம்

    இயேசு பூமி திரும்பும்போது எல்லாம் மறுசீரமைப்பு செய்யும் காலம் வரும் என பேதுரு ஏன் வாக்குறுதி அளிக்கிறார்? பழைய ஏற்பாட்டின் பரிசுத்த தீர்க்கதரிசிகளால் அந்த காலம் விவரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார். இந்த மறுசீரமைப்பின் யுகம் பற்றி வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்குத்தத்தங்கள் யாவை? மனுக்குலத்தின் ஆரோக்கியம், சமூக நீதி, நியாயம், உலக சமாதானம், மற்றும் செழிப்பு பற்றி இந்த இராஜ்ய தீர்க்கதரிசனங்கள் என்னதான் கணிக்கின்றன? மனிதனுக்காக கடவுள் வைத்திருக்கும் எதிர்காலம்தான் என்ன?

  • மெய்யாகவே நல்ல செய்தி

Scriptures, unless otherwise indicated, are taken from THE HOLY BIBLE, NEW INTERNATIONAL VERSION®, NIV® Copyright © 1973, 1978, 1984, 2011 by Biblica, Inc.® Used by permission. All rights reserved worldwide. Scriptures indicated NASB are taken from the NEW AMERICAN STANDARD BIBLE®, Copyright © 1960,1962,1963,1968,1971,1972,1973,1975,1977,1995 by The Lockman Foundation. Used by permission.