நற்செய்தி

  • ஆதாம் உட்பட கெட்டவரின் கதி

    மரித்தவர்கள் தற்போது எங்கேதான் உள்ளனர்? அவர்கள் மறுபடியும் உயிர்பெற வாய்ப்பு உண்டா? முதல் மனிதனான ஆதாம் ஏதேன் தோட்டத்தில் கீழ்ப்படியாமல் வீழ்ச்சியடைந்தபோது அவன் வம்சாவழி வந்த நமது ஆத்துமாக்கள் அனைத்தும் "ஷியோல்/ஹேடீஸ்" என்றொரு பாதாளத்திற்கு கண்டனம் செய்யப்பட்டன. அதுதான் கல்லறை. ஆனாலும் நம் எல்லோருக்கும் எதிர்கால நம்பிக்கை உண்டு! (ஷியோல் என்னும்) கல்லறையின் பிடியிலிருந்து நம்மை மீட்கும் பொருள் (ransom) கொடுத்து மீட்டு விடுவிப்பேன் என்று தேவன் வாக்குத்தத்தம் செய்தார் (ஓசியா 13:14). அவர் இயேசுவை ஆதாமிற்குப் பதிலாக மரிப்பதற்கு அனுப்பிவைத்தார் (யோவான் 3:16). ஆதாமிற்குரிய மீட்பின் கிரயத்தை (விலையை) இயேசு கொடுத்து ஆதாமின் வம்சம் அனைவரையும் (எல்லா மனிதரையும்) உயிர்த்தெழ வைப்பதற்கான வழியை ஏற்படுத்தினார் (ரோமர் 5:12,18). இயேசுவே அனைவருக்குமாகக் கொடுக்கப்பட்ட மீட்கும் பொருள் (1தீமோத்தேயு 2:6). "ஆதாமிற்குள் எல்லாரும் மரிக்கிறது போல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்" (1கொரி 15:22).

  • இரட்சிப்பு

  • ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும்

    "ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே” எபிரெயர் 9:27. பெரும்பாலான மக்கள் இந்த வசனத்தை படிக்கும்போது, ஒவ்வொரு மனிதனின் தற்போதைய வாழ்க்கையும் நாம் ஒவ்வொருவரும் அனுபவிக்கும் ஒருவிதமான பரீட்சை என்றும், அதன் முடிவில் நாம் மரித்து நம் வாழ்வில் நாம் புரிந்த செயல்களுக்கு ஏற்ப பரிசோ தண்டனையோ பெற கடவுள்முன் நிற்க நேரிடும் என்று அர்த்தப்படுத்துகிறார்கள். இது வேதப்பூர்வமான அர்த்தமா? வேதவசனங்களின்படி நியாயத்தீர்ப்பு என்றால் என்ன?

  • நரகத்தின் கட்டுக்கதை!

    சிலர், "நித்திய நரக வேதனை என்பது பைபிளில் இல்லாமல் இருக்கலாம்; எனினும் உலக மக்களை தேவனுக்கு கீழ்ப்படிய வைப்பதற்காக அவர்களை பயமுறுத்தும் அச்சுறுத்தலாக எரிநரகத்தைப் பயன்படுத்துவது பரவாயில்லை, தானே?" என்று கேட்கலாம். அது சரிதானா? இல்லை, அது சரி அல்ல. அப்படிப்பட்டவர்களை குறித்து ஏமாற்றம் அடைந்த தேவன் கூறுகிறார்: "அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது" (ஏசாயா 29:13). மிரட்சியாலும், அச்சுறுத்தல்களாலும் தனக்கு கீழ்ப்படிகிற இதயங்களை அவர் நாடவில்லை. மாறாக, தன்மேலும் தனது நீதியின்மேலும் கொண்ட அன்பாலே உந்தப்பட்டு மனமுவந்து கீழ்ப்படிகிற இதயத்தையே அவர் விரும்புகிறார். மேலும், சித்திரவதை பற்றிய எண்ணமே தேவனுக்கு அருவருப்பானது. தனது நியாயப்பிரமாணத்திலே தேவன் சித்திரவதை முறைகளை அனுமதிக்கவில்லை. நம் எதிரிகளிடமும் நாம் அன்பு செலுத்த வேண்டுமென்று கட்டளையிடுகிற தேவன் அவர்களை நித்தியமாக எரிப்பதற்கு விரும்புவாரா, என்ன?

  • பரலோகத்தின் இராஜ்யம்

    பரலோகத்தின் இராஜ்யத்தை பற்றி எந்தவொரு கிறிஸ்தவரும் ஏன் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டும்? தேவனின் சித்தம் பரலோகத்தில் செய்யபடுவதை போல பூமிலேயும் செய்யப்படும் நாட்களான தேவனின் இராஜ்யம் பூமியில் வரவேண்டுமென ஜெபியுங்கள் என இயேசு ஏன் நமக்கு கற்றுக்கொடுத்தார்? பரலோகத்தின் இராஜ்யம் பரலோகத்தில் அல்லவா இருக்கும்? இயேசு பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, இராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார். அதனோடு ஒப்பிட்டுப்பார்க்கும்பொழுது, இன்றைய சபைகளில் இராஜ்யத்தைப் பற்றி காணப்படும் பரவலான போதனைதான் என்ன?

  • மகா மறுசீரமைப்பின் காலம்

    "தேவன் எல்லோரின் மீட்பராக இருக்கிறார். அதோடு விசுவாசிகளுக்குச் சிறப்பான முறையில் மீட்பராக இருக்கிறார்." 1தீமோத்தேயு 4:10. இந்த வசனம் தேவன் எல்லோரையும் மீட்பார் எனவும், இன்றைய விசுவாசிகளை ஒரு சிறப்பான முறையில் மீட்பார் என்றும் உரைக்கிறது. அப்படியெனில், எல்லா மக்களுக்கும் இலவச சொர்க்க அனுமதி சீட்டு என்று அர்த்தமா? இன்றைய விசுவாசிகளுக்குக் காத்திருக்கும் சிறப்பு மீட்புதான் என்ன? அதுபோக, இயேசு சொல்கிறார், "முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேசங்கள் மேல் அதிகாரம் கொடுப்பேன்.” வெளி. 2:26. யார் இந்த தேசங்கள்? கிறிஸ்துவைப் பின்பற்றுவோரால் அவை எதற்காக ஆளப்படவேண்டும்?

  • மனுக்குலத்தின் கிரய மீட்பு

    ஆதாமின் பாவத்திற்குரிய தண்டனையாக ஆதாமின் இனம் முழுவதும் மரண நித்திரையில் ஆழ்கிறதெனில், கிறிஸ்துவுக்குள் அனைவரும் உயிர்பெறுவர் என்று வேதாகமம் எப்படி வாக்களிக்கக்கூடும்? வேதத்தில் கடவுள் பிரகடனம் செய்கிறார்: “அவர்களை நான் மரணத்திற்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்.” ஓசியா 13:14. இந்த தீர்க்கதரிசனத்தைக் கிறிஸ்து எங்ஙனம் நிறைவேற்றினார் என்று அப்போஸ்தலன் பவுல் 1தீமோத்தேயு 2:4-6 வசனங்களில் விவரிக்கிறார். பவுலின் வார்த்தைகளில் இவற்றின் அர்த்தம்தான் என்ன - 'எல்லாரையும் மீட்கும் பொருள்', ‘ஏற்ற கால சாட்சி’, 'இரட்சிக்கப்பட்டு சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும்’?

  • மெய்யாகவே நல்ல செய்தி

Scriptures, unless otherwise indicated, are taken from THE HOLY BIBLE, NEW INTERNATIONAL VERSION®, NIV® Copyright © 1973, 1978, 1984, 2011 by Biblica, Inc.® Used by permission. All rights reserved worldwide. Scriptures indicated NASB are taken from the NEW AMERICAN STANDARD BIBLE®, Copyright © 1960,1962,1963,1968,1971,1972,1973,1975,1977,1995 by The Lockman Foundation. Used by permission.