வேதாகமம்

  • அறிவியலின் கடவுள் யார்?

    அறிவியல் என்பது முறையான ஆய்வு, கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகள் மூலம் திரட்டப்பட்ட பிரபஞ்சத்தின் அறிவு. தொன்மையான புனித நூல்கள் அறிவியல் சம்பந்தப்பட்ட கூற்றுகளை சொல்லவே செய்கின்றன. ஓர் புனித நூல் கூறும் பிரபஞ்சம் குறித்த கூற்றுகள் அது எழுதப்பட்ட காலத்தின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் மூடநம்பிக்கைகளாக இருப்பின், அந்த புத்தகம் சிறந்த அறநெறிகளை கொண்டிருந்தாலும் தனது நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது. ஆனால் ஒரு தொன்மையான மத புத்தகம் சொல்லிய பிரபஞ்ச கூற்றுகள் நவீன விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு உடன்பட்டால், அந்த நூல் உண்மையிலேயே தெய்வீக உந்துதலில் எழுதப்பட்டது என வாதிட முடியும்!

  • இரட்சிப்பு

  • மகா மறுசீரமைப்பின் காலம்

    "தேவன் எல்லோரின் மீட்பராக இருக்கிறார். அதோடு விசுவாசிகளுக்குச் சிறப்பான முறையில் மீட்பராக இருக்கிறார்." 1தீமோத்தேயு 4:10. இந்த வசனம் தேவன் எல்லோரையும் மீட்பார் எனவும், இன்றைய விசுவாசிகளை ஒரு சிறப்பான முறையில் மீட்பார் என்றும் உரைக்கிறது. அப்படியெனில், எல்லா மக்களுக்கும் இலவச சொர்க்க அனுமதி சீட்டு என்று அர்த்தமா? இன்றைய விசுவாசிகளுக்குக் காத்திருக்கும் சிறப்பு மீட்புதான் என்ன? அதுபோக, இயேசு சொல்கிறார், "முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேசங்கள் மேல் அதிகாரம் கொடுப்பேன்.” வெளி. 2:26. யார் இந்த தேசங்கள்? கிறிஸ்துவைப் பின்பற்றுவோரால் அவை எதற்காக ஆளப்படவேண்டும்?

  • மனுக்குலத்தின் கிரய மீட்பு

    ஆதாமின் பாவத்திற்குரிய தண்டனையாக ஆதாமின் இனம் முழுவதும் மரண நித்திரையில் ஆழ்கிறதெனில், கிறிஸ்துவுக்குள் அனைவரும் உயிர்பெறுவர் என்று வேதாகமம் எப்படி வாக்களிக்கக்கூடும்? வேதத்தில் கடவுள் பிரகடனம் செய்கிறார்: “அவர்களை நான் மரணத்திற்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்.” ஓசியா 13:14. இந்த தீர்க்கதரிசனத்தைக் கிறிஸ்து எங்ஙனம் நிறைவேற்றினார் என்று அப்போஸ்தலன் பவுல் 1தீமோத்தேயு 2:4-6 வசனங்களில் விவரிக்கிறார். பவுலின் வார்த்தைகளில் இவற்றின் அர்த்தம்தான் என்ன - 'எல்லாரையும் மீட்கும் பொருள்', ‘ஏற்ற கால சாட்சி’, 'இரட்சிக்கப்பட்டு சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும்’?

  • மரண தண்டனை

    மனிதர்கள் மரித்துப்போவதேன்? இது இயற்கை நியதியா? மிருகங்கள் போல் மடிந்து போவதுதான் நம் விதியா? ஒருவன் மரிக்கும்போது என்ன நேருகிறது? மரணத்தைப்பற்றி இயேசு என்ன சொன்னார்? மரணநிலை பற்றி வேதாகமம் கூறுவதை அறிவியல் ஏற்றுக்கொள்கிறதா? வேதாகமத்தின்படி ஆத்துமா என்பது என்ன? ஆத்துமா மரித்துப் போகக்கூடுமா? மரணத்திற்குப்பின் ‘ஆவி’ வாழுமா?

  • மெய்யாகவே நல்ல செய்தி

  • வரலாற்றின் கடவுள் யார்?

    "பூர்வகாலத்தில் நடந்தவைகளை ஆதிமுதல் அறிவித்தேன், அவைகள் என் வாயிலிருந்து பிறந்தன, அவைகளை வெளிப்படுத்தினேன். அவைகளைச் சடிதியாய்ச் செய்தேன், அவைகள் நடந்தன.. நான் அவைகளை முன்னமே உனக்கு அறிவித்து, அவைகள் வராததற்குமுன்னே உனக்கு வெளிப்படுத்தினேன்." ஏசாயா 48:3-5. சரிதான். மனிதனின் எதிர்காலத்தை வடிவமைக்கும் மெய்யான கடவுளால் மட்டுமே மனிதகுல வரலாற்று நிகழ்வுகளை முன்னறிவிக்க முடியும். எங்கெல்லாம் இந்த தேவன் தனது தீர்க்கதரிசனங்களை முன்னறிவிக்கிறார்? அவை எதுவும் நிறைவேறியிருக்கின்றனவா?

  • வேதம் ஏன்?

Scriptures, unless otherwise indicated, are taken from THE HOLY BIBLE, NEW INTERNATIONAL VERSION®, NIV® Copyright © 1973, 1978, 1984, 2011 by Biblica, Inc.® Used by permission. All rights reserved worldwide. Scriptures indicated NASB are taken from the NEW AMERICAN STANDARD BIBLE®, Copyright © 1960,1962,1963,1968,1971,1972,1973,1975,1977,1995 by The Lockman Foundation. Used by permission.