ஆவிக்குரியனவும், மாம்சத்திற்குரியனவும்

Jesus in Gethsemane

 கருப்பொருள் வசனம்: மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனாம். ரோமர் 8:6.

1) “அன்றியும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள், ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள். மாம்சசிந்தை மரணம்: ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்”. ரோமர் 8:5-6. இங்கே ஒன்றுக்கொன்று எதிராயிருக்கும் மாம்சம், ஆவி என்ற இரண்டின் அர்த்தம் என்ன?
மாம்ச சிந்தனை என்பது பாவத்தை குறிக்கிறது என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் பவுல் இங்கு 'பாவ சிந்தனை' என்று சொல்லவில்லை. மாறாக, 'மாம்சம்' என்ற வார்த்தையை அவர் பயன்படுத்துகிறார். மாம்சத்தின் செயல்கள் பாவம் மட்டுந்தானா? இல்லை, நாம் உலக வாழ்வில் செய்யும் அனைத்து விசயங்களுமே மாம்சத்திற்குரியவைதான்.
இயேசு சொல்கிறார், "தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான், என்னிமித்தமாகவும் சுவிசேஷத்தினிமித்தமாகவும் தன் ஜீவனை இழக்கிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்." மாற்கு 8:35. ஆம், இந்த உலகில் ஒரு நேர்மையான வாழ்க்கை வாழ முயலும் மக்கள் கூட நிச்சயமாக இறந்துதான் போவார்கள்.
         ‘தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்’ = 'மாம்சசிந்தை மரணம்’

2) உலகப்பிரகாரமான (மாம்ச) வாழ்க்கை மரணத்திற்கு இட்டுச்செல்லும் என்றால், பவுலின் அறிவுரையின்படி நாம் என்னதான் செய்ய வேண்டும்?
“பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள். மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்திற்கு விரோதமாகவும் இச்சிக்கிறது. நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது. ஆவியினால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல”. கலாத்தியர் 5:16-18.
மறுபடியும் இங்கே பயன்படுத்தப்படும் வார்த்தை 'பாவம்' அல்ல, ‘மாம்சம்’ என்று காண்கிறோம். பவுல் தொடர்கிறார்: “மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன. இவையாவன: விபச்சாரம், வேசித்தனம், அசுத்தம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள்.. முதலானவைகளே.” கலா 5:19-21.
பவுல் சொல்லவரும் கருத்து இதுதான் - நாம் மாம்சத்தின்படி வாழ முயன்றால், அது ஒரு நேர்மையான வாழ்க்கை வாழ்வதற்கான முயற்சியாக இருப்பினும் கூட, நிச்சயமாக இத்தகைய பயனற்ற செயல்களுக்கே - அதாவது நம் சுவிசேஷ ஓட்டத்திற்கு பயனற்ற செயல்களுக்கே - அந்த முயற்சிகள் நம்மை இறுதியில் இட்டுச்செல்லும்.
மாறாக, நாம் ஆவிக்கேற்றபடி நடக்கவேண்டும். நாம் முன்பு படித்தவாறு, சுவிசேஷத்தை அறிவிக்க திருச்சபையை பலப்படுத்துவதற்கே ஆவியின் அபிஷேகம் அளிக்கப்படுகிறது (அப்போஸ்தலர் 1:8, 4:31). ஆக, ஆவிக்கேற்றபடி நடப்பதென்றால் சுவிசேஷத்தை அறிவிக்கும் பணி செய்வதே ஆகும்.
     “ஆகையால் சகோதரரே, மாம்சத்தின்படி பிழைப்பதற்கு நாம் மாம்சத்துக்குக் கடனாளிகளல்ல. மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்”. ரோமர் 8:12-13.
இங்கே 'சரீரத்தின் பாவங்கள்' என்று சொல்லவில்லை. 'சரீரத்தின் செய்கைகள்' என்று சொல்கிறார். அதாவது சரீரத்தில் செய்யும் எல்லா செயல்களுமே. பவுல் இங்கே கூறும் விசயம் இயேசு மாற்கு 8:35 வசனத்தில் சொன்ன கோட்பாட்டுடன் முற்றிலும் ஒத்துப்போகிறது.
     “என்னிமித்தமாகவும் சுவிசேஷத்தினிமித்தமாகவும் தன் ஜீவனை இழக்கிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்” = “ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்”.
இதுவே நம் ஞானஸ்நான உடன்படிக்கையுமாகும் – நாம் நம்மை இவ்வுலக வாழ்விற்கு மரித்தவர்களாகவும், கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்காகவே உயிர்வாழ்பவர்களாகவும் எண்ணுகிறோம்.

3) ஒருவர் எவ்வாறு ஆவியின் கனிகளைப் பெறலாம்?
“ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம். கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள். நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம்”. கலாத்தியர் 5:22-25.
ஆம், நமது ஞானஸ்நானத்தில், நம் பாவத்தை மட்டுமல்ல, மாம்சத்தின் எல்லா காரியங்களையும் நாம் சிலுவையில் அறைகிறோம். ஞானஸ்நானம் என்பது உலகத்திற்கு மரிப்பதாகும். இறந்துபோன மனிதர்களுக்கு பூமிக்குரிய ஆசபாசங்கள் எதுவும் கிடையாது!
எனவே நாம் சுவிசேஷ வேலைகள் செய்வதில் (ஒரு பொழுதுபோக்காக செய்வதாக இல்லாமல்) நம் முழு வாழ்க்கையையும் கவனம் செலுத்தினால், நாம் ஆவிக்கேற்றபடி நடந்து ஆவியின் கனிகளை வெளிப்படுத்துபவர்களாக திகழ்வோம் – சாந்தமாக சுவிசேஷத்தை பிரசங்கிப்பதன் மூலம் நாம் உலக மக்களை அன்புகூர்ந்து, அவர்களுக்கு உண்மையான நன்மையை அளித்து, சுவிசேஷத்தின் காரணமாக அவர்கள் நம்மை துன்புறுத்தும்போதிலும் நீடியபொறுமையையும் சுயக்கட்டுப்பாட்டையும் காண்பித்து, தேவனுடைய பணியை செய்வதில் சந்தோஷத்தையும், சமாதானத்தையும் அனுபவிப்போம்.

4) நமது ஆவிக்குரிய ஞானஸ்நான உடன்படிக்கையிலிருந்து நம்மைத் திசைதிருப்பக்கூடிய சில மாம்சத்திற்குரிய காரியங்கள் யாவை?

ஒரு விதத்தில், நாம் போர்வீரர்களைப் போல இருக்கிறோம். போராடுவதற்கு ஒரு போர் இருக்க பொதுமக்கள் விவகாரங்களில் வீரர்கள் சிக்கிக்கொள்ளலாமா? பவுல் கூறுகிறார்: "நீயும் இயேசு கிறிஸ்துவுக்குள் நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவி. தண்டில் சேவகம்பண்ணுகிற எவனும், தனக்கு கட்டளையிடும் தளபதிக்கு [இயேசு கிறிஸ்துவிற்கு] ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான்." 2தீமோ 2:3-4.
மேலும் இயேசு கிறிஸ்து நம்மை பூமியில் வாழ்வதற்குரிய பொதுமக்களுக்குரிய தேவைகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம் எனவும், மாறாக தேவனுடைய இராஜ்யத்தை தேடவும், அதாவது இராஜ்யத்தின் நற்செய்தியை சேவிக்கவும் அறிவுறுத்துகிறார் - “ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள். இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள், இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். முதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும். ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள், நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும்”. மத்தேயு 6:31-34.

5) சுவிசேஷத்திற்காக இவ்வளவு தியாகங்களையும் / சோதனைகளையும் / உபத்திரவங்களையும் நாம் எப்படிதான் சகித்துக்கொள்வது?
நாம் பவுலின் மனப்பான்மையைக் கொண்டிருக்க வேண்டும் - “மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகைள நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்." 2கொரிந்தியர் 4:17-18.
இதே மனப்பாங்குதான் இயேசுவையும் செயல்பட செய்தது – “அவர் தமக்குமுன் வைக்கப்பட்டிருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் அமர்ந்தார்." எபிரேயர் 12:2.
இதனை அவரது பாடுகளின் போது நாம் பார்க்கிறோம் – பிரதான ஆசாரியன் அவரை நோக்கி, "நீ ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா?" என்று கேட்டான். அதற்கு இயேசு, "நான் அவர் தான். மனுசகுமாரன் சர்வவல்லவரின் வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள்," என்றார். மாற்கு 14:61-62.
இயேசு அவனுக்கு வெறும் 'ஆம், நான்தான்' என்று பதில் அளிக்கவில்லை, மாறாக எதிர்காலத்தில் தனக்கு வரவிருக்கும் மகிமை பற்றி பேசுகிறார். ஏனெனில் அவரது மனதின் கவனமெல்லாம் அதின்மேல்தான் இருந்தது. அந்த மகிழ்ச்சியானது அவருக்கு பாடுகளை சகிக்க உதவியது.
நாமும் அதுபோலவே இயங்க வேண்டும் – “ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்”. ரோமர் 8:18. சரி, நமக்கு முன்னே வைக்கப்பட்டிருக்கும் சந்தோஷங்கள் என்ன?

மேலும் படிக்க: சுவிசேஷ ஓட்டத்தின் நோக்கம்