நரகத்தின் கட்டுக்கதை!

 கருப்பொருள் வசனம்: "தேவன் அன்பாகவே இருக்கிறார்... பூரண அன்பு பயத்தை புறம்பே தள்ளும்; ஏனெனில் பயமானது வேதனையுள்ளது" (1யோவான் 4:16, 18)

1) தமிழ் பைபிளில் "நரகம்" என மொழிபெயர்க்கப்பட்டுள்ள - "ஷியோல்/ஹேடீஸ்", "கெஹன்னா", "டார்டரூ" - என்ற பல்வேறு வார்த்தைகளின் மெய்யான அர்த்தத்தை ஆராய்ந்தோம். கிறிஸ்தவத்திற்குள் நரக அக்கினியும் நித்திய வேதனையும் பற்றின நம்பிக்கைகள் எவ்வாறு ஊடுருவின என்ற வரலாற்றையும் பார்த்தோம். ஆதாமிற்காக இயேசு கொடுத்த மீட்பின் கிரயம் பற்றியும், பூமியையும் மனுக்குலத்தையும் மறுசீரமைப்பு செய்து புதுப்பிக்க வரவிருக்கிற இயேசுவின் இராஜ்யத்தைக் குறித்தும் திருமறை சொல்வதென்ன என்பதைக் கண்டறிந்தோம். ஆனாலும் சிலர், "நித்திய நரக வேதனை என்பது பைபிளில் இல்லாமல் இருக்கலாம்; எனினும் உலக மக்களை தேவனுக்கு கீழ்ப்படிய வைப்பதற்காக அவர்களை பயமுறுத்தும் அச்சுறுத்தலாக எரிநரகத்தைப் பயன்படுத்துவது பரவாயில்லை, தானே?" என்று கேட்கலாம். அது சரிதானா?

2) மக்களை நித்திய வேதனைக்கு தள்ள விரும்புவது நமது அன்பான தேவனுக்கு உகந்த காரியமா?

ஆம், "கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள் வரும்படி, முன்னே குறிக்கப்பட்ட இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தின்போது, மனிதரின் பாவங்கள் நிவிர்த்தி செய்யப்படும். உலகத் தோற்றமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளெல்லாருடைய வாக்கினாலும் உரைத்தவைகள் எல்லாம் நிறைவேறும் மகா மறுசீரமைப்பின் காலம் [இராஜ்யம்] வருமளவும் பரலோகம் அவரை ஏற்றுக் கொள்ளவேண்டும்" (அப்போஸ்தலர் 3:19-21).

பின்னிணைப்பு: அசல் "நரகங்கள்" - ஒரு கண்ணோட்டம்

மேலுமான ஆராய்ச்சிக்குரிய கேள்வி

நரக வேதனையைப் போல, வேதாகமத்தில் இல்லாத "இருண்ட கால" (Dark Age) கோட்பாடுகள் வேறேதும் கிறிஸ்தவத்திற்குள் புகுந்துள்ளனவா? - மேலும் படிக்க.