ஆதாம் உட்பட கெட்டவரின் கதி

 கருப்பொருள் வசனம்: "அவர்களை நான் கல்லறையின் (ஷியோலின்) வல்லமைக்கு நீங்கலாக்கி மீட்பேன்" (ஓசியா 13:14)

1) தமிழ் பைபிளில் "நரகம்" என மொழிபெயர்க்கப்பட்டுள்ள - "ஷியோல்/ஹேடீஸ்", "கெஹன்னா", "டார்டரூ" - என்ற பல்வேறு வார்த்தைகளின் மெய்யான அர்த்தத்தை ஆராய்ந்தோம். கிறிஸ்தவத்திற்குள் நரக அக்கினியும் நித்திய வேதனையும் பற்றின நம்பிக்கைகள் எவ்வாறு ஊடுருவின என்ற வரலாற்றையும் பார்த்தோம். அப்படியெனில், மரித்தவர்கள் தற்போது எங்கேதான் உள்ளனர்? அவர்கள் மறுபடியும் உயிர்பெற வாய்ப்பு உண்டா?

முதல் மனிதனான ஆதாம் ஏதேன் தோட்டத்தில் கீழ்ப்படியாமல் வீழ்ச்சியடைந்தபோது அவன் வம்சாவழி வந்த நமது ஆத்துமாக்கள் அனைத்தும் "ஷியோல்/ஹேடீஸ்" என்றொரு பாதாளத்திற்கு கண்டனம் செய்யப்பட்டன. அதுதான் கல்லறை.

2) "திரும்பவும் வருவேன்!" என்று வாக்குறுதி அளித்து இயேசு பரத்திற்கு ஏறினார் அல்லவா? தனது இராஜ்யத்தை நிறுவ வருவேன் என்றாரே? இராஜ்யத்தில் நடக்கவிருப்பதுதான் என்ன?

3) கிறிஸ்துவின் இராஜ்யத்தில் உயிர்த்தெழுந்து, ஆயிர வருடங்கள் சத்தியத்தையும், அறிவையும் கற்றுக்கொண்ட பின்னும் கீழ்ப்படியாமல் கலகம் பண்ணுகிறவர்களின் கதி என்னாகும்?
ஆயிர வருட அரசாட்சியின் இறுதியிலே, சாத்தான் "கொஞ்சக்கால"த்திற்கு மனுக்குலத்தைச் சோதிப்பதற்காக விடுவிக்கப்படுவான். அவன் வழி திரும்புகிறவர்கள் "கெஹன்னா" என்ற அக்கினிக்கடல் அடையாளப்படுத்தும் நிர்மூலமான அழிவுக்கு ஆளாகும் தண்டனையைப் பெறுவார்கள் - அதாவது இரண்டாம் மரணத்தை அடைவார்கள் (வெளி 20:3, 9; 21:8).

மேலும் படிக்க: என்ன ஒரு கட்டுக்கதை!