கேட்டின் மகன்

 கருப்பொருள் வசனம் - 'விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, கிறிஸ்துவினுடைய நாள் வராது. அவன் தேவன் என்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்.' 2தெசலோனிக்கேயர் 2:2-4.

1) பவுலின் கூற்றுப்படி, அவர் முன்னறிவித்த மகா விசுவாசதுரோகத்தின் முடிவு என்னவாக இருக்கும்?
'விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, கிறிஸ்துவினுடைய நாள் வராது. அவன் தேவன் என்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்.' 2தெசலோனிக்கேயர் 2:2-4.
இங்கே பவுல் ஒரு பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனத்தை (தானியேல் 11:31-37) மேற்கோள் காட்டி விவரிக்கிறார். அது இங்ஙனம் தொடங்குகிறது: 'அவனிடத்திலிருந்து புறப்பட்டசேனைகள் எழும்பி, அரணான பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, அன்றாடபலியை நீக்கி, பாழாக்கும் அருவருப்பை அங்கே வைப்பார்கள்.'

2) சரி, இதில் என்னதான் தவறு?

3) போப்பாண்டத்துவதால் கிறிஸ்தவத்திற்குள் கொண்டுவரப்பட்ட அருவருப்பான காரியங்கள் யாவை?

4) கத்தோலிக்க தலைமைக்கு எதிராக தைரியமாக பேசியவர்களை அந்திக்கிறிஸ்து எப்படி நடத்தினான்?
இயேசு கிறிஸ்து (மத்தேயு 5:39) - 'ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு உன் மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு'.
போப்பாண்டவர் இன்னொசண்ட் III (கி.பி.1198) - 'திருச்சபையின் கோட்பாடுகளுக்கு முரண்படும் விதமாக கடவுளைப் பற்றி தனிப்பட்ட விளக்கம் யாரேனும் கூற முயன்றால் அவர்கள் இரக்கமின்றி எரிக்கப்பட வேண்டும்'.

5) அந்திக்கிறிஸ்துவின் ஆட்சி எவ்வளவு காலம் நீடித்தது? வேதாகமம் அந்த கால அளவை முன்னறிவித்ததா?
நெப்போலியன் போனபர்டேவின் பிரெஞ்சு படைகள் கி.பி.1798-ஆம் ஆண்டில் போப்பாண்டவர் பையஸ் VI ஐ சிறையில் அடைத்து ரோமாபுரியில் இருந்து இழுத்துச் சென்றன. கி.பி.1799-ஆம் ஆண்டில் அந்த போப்பாண்டவர் ஒரு பிரெஞ்சு சிறையில் மரணமடைந்தார். அப்போதிலிருந்து, போப்பாண்டவதத்துவ பதவியானது தேசங்கள் மீது நிஜ அதிகாரமும் அரசியல் ஆதிக்கமும் செலுத்தின காலம் திட்டவட்டமாக முடிந்து போனது. நாம் முன்னர் பார்த்தபடி, போப்பாண்டத்துவம் முழுமையான அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிய ஆண்டு கி.பி.539 ஆகும். ஆக, அந்திக்கிறிஸ்துவின் ஆட்சியானது மொத்தத்தில் 1,260 ஆண்டுகள் நீடித்தது (கி.பி.539-1799). ஆர்வத்திற்குரிய விஷயம் என்னவென்றால், பல இடங்களில் வேதாகமம் இதை முன்னறிவித்தது:

தானியேல் 7:25-ல் 'ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும்' என்பது ஒரு எபிரேய வழக்க சொற்றொடர். அதன் அர்த்தம் 'ஒரு வருடமும், இரு வருடங்களும், அரை வருடமும்' என்பதாகும் என வேதாகம குறிப்புகள் தெரிவிக்கின்றன (பார்க்கவும் NASB பைபிள் தானியேல் 7:25 அடிக்குறிப்பு footnote). ஆக மொத்தம், அது 3.5 வருடங்கள் ஆகும்.
வேதாகமத்தில் ஒரு மாதம் என்பது 30 நாட்கள் ஆகும் (ஆதி 7:11, 8:3-4); ஆக, ஒரு வேதாகம வருடம் = 360 நாட்கள்; எனவே 3.5 வருடங்கள் = 1,260 நாட்கள். இது வெளி 13:5 வசனத்தின் 42 மாதக்கணக்குடனும் ஒத்துப்போகிறது: 42 x 30 = 1,260 நாட்கள். மேலும், தீர்க்கதரிசன மொழி வழக்கில், ஒரு நாள் ஒரு வருடத்தை குறிக்கும் (எசேக்கியேல் 4:5-6). ஆக, தானியேல் தீர்க்கதரிசி கூறும் இந்த 1,260 நாட்கள், போப்பாண்டவர்கள் அரசியல் ஆட்சி புரிந்த 1,260 வருடங்களை (கி.பி. 539 - 1799) முன்னறிவிக்கின்றது!

6) இந்த நூற்றாண்டுகளில் எந்த சமயத்திலாவது அந்திக்கிறிஸ்து அடையாளம் கண்டுகொள்ளப்பட்டானா?
பதினாறாம் நூற்றாண்டின் புராட்டஸ்டன்ட் சீர்திருத்த இயக்கமானது (Protestant Reformation) போப்பாண்டத்துவம் தான் அப்போஸ்தலர்களால் முன்னறிவிக்கப்பட்ட பாவ மனுஷனாகிய கேட்டின் மகன் "அந்திக்கிறிஸ்து" என ஏகமனதாக அடையாளம் கண்டுகொண்டது.

7) அப்படியானால், இன்றைய புராட்டஸ்டன்ட் (சீர்திருத்த) கிறிஸ்தவர்கள் ஏன் ஒரு எதிர்கால அந்திக்கிறிஸ்துவை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்?
போப்பாண்டத்துவத்தை அந்திக்கிறிஸ்து என்று அடையாளம் கண்டுகொண்ட புராட்டஸ்டன்ட் சீர்திருத்த (Reformation) இயக்கத்தின் மக்களை எதிர்த்து மட்டுப்படுத்தும் பொருட்டு கி.பி.1500-களில் வேதாகம தீர்க்கதரிசனங்களுக்கு புதிய விளக்கங்களை உருவாக்கும் பொறுப்புடன் 'இயேசுநாதர் சங்கம் - ஜெசுவிட் குழு' (Jesuits) என்ற குழுவை போப்பாண்டத்துவம் நியமித்தது.

8) அந்திக்கிறிஸ்துவின் ஆட்சிக்காலங்களில் மெய்யான திருச்சபைக்கு என்ன நேர்ந்தது?

மேலும் பல வேதாகம தீர்க்கதரிசனங்களும் கூட அந்திக்கிறிஸ்துவிற்கு ஆண்டவருடைய பரிசுத்தவான்களை ஒடுக்குவதற்கு அதிகாரம் கொடுக்கப்படும் என உறுதிப்படுத்துகின்றன (தானியேல் 7:21-22, வெளி 17:6). அங்ஙனம் முன்னறிவிக்கப்பட்டபடியே, அந்திக்கிறிஸ்துவான போப்பாண்டத்துவம் அவர்களை மரண தண்டனைக்கும், சிறைவாசத்திற்கும் உட்படுத்தியது.

மேலும் படிக்க: பாபிலோன் குமாரத்திகள்