கிறிஸ்துவின் திருச்சபை

கருப்பொருள் வசனம் – ‘போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசு கிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது.’ 1கொரிந்தியர் 3:11.

1) கிறிஸ்துவின் சரீரம் என கருதப்படும் மெய் திருச்சபையில் ஒருவர் அங்கமாய் இருக்கிறாரா என்பதை நாம் எப்படி அறிந்துகொள்ள முடியும்?
தேவனின் இராஜ்ய நற்செய்தியின் வேதப்பூர்வமான அடிப்படைக் கோட்பாடுகளை புரிந்து கொண்டு கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை பின்பற்றுவதற்காக தனது வாழ்வை அர்ப்பணித்தவர்களே கிறிஸ்துவின் மெய் திருச்சபையின் அங்கமாவார்கள்.

2) வேதாகமம் மிகப்பெரியது. அதில் கிறிஸ்துவின் நற்செய்தியின் இன்றியமையாத அஸ்திபார கோட்பாடுகளை நாம் உண்மையில் அடையாளம் கண்டுகொள்ள முடியுமா?
உண்மையைச் சொல்லப்போனால், அப்போஸ்தலனாகிய பவுல் அவற்றை நமக்காக மிகத்தெளிவாக எழுதி வைத்துவிட்டார் -
     “கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய அடிப்படை உபதேச கோட்பாடுகள்... செத்த கிரியைகளிலிருந்து மனந்திரும்புதலும் தேவன்பேரில் வைக்கும் விசுவாசமும், ஸ்நானங்களுக்கடுத்த உபதேசமும் கைகளை வைக்குதலும், மரித்தோரின் உயிர்த்தெழுதலும் நியாயத்தீர்ப்பும் என்பவைகளாகிய அஸ்திபாரம்.." எபிரெயர் 6:1-2.

மெய் கிறிஸ்தவத்தின் மகத்தான அஸ்திபாரங்கள்

3) மேலே கண்ட அஸ்திபாரக் கோட்பாடுகள் ஏதேனும் ஒன்றில் ஒருவர் கருத்து வேறுபட்டால், கிறிஸ்துவின் மெய் திருச்சபையில் அவர் அங்கமாக இருப்பது சாத்தியம் ஆகுமா?
கிறிஸ்துவின் இந்த அடிப்படை கோட்பாடுகளை சரியாகப் புரிந்துகொண்டு அவற்றின்மேல் விசுவாசம் வைக்காதவர்கள் எவரும் நிச்சயம் மெய்யான கிறிஸ்தவர்களாக இருப்பது சாத்தியப்படாது.
     “போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது.” 1கொரிந்தியர் 3:11.

அப்போஸ்தலர் பவுல், "உங்கள் மனதும் கிறிஸ்துவைப் பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன். எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால்.." என்று நம்மை எச்சரிக்கிறார். 2கொரிந்தியர் 11:3-4.
ஆம், யார் வேண்டுமானாலும் தாங்கள் "இயேசு கிறிஸ்துவை" பின்பற்றுவதாக சொல்லிக்கொள்ளலாம். ஆனால் நாம் கேட்கவேண்டிய கேள்வி – அவர்கள் வேதாகமம் கற்பிக்கும் உண்மையான இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுகிறார்களா, இல்லையா? - என்பதே!

அதுபோன்ற கிறிஸ்துவின் உண்மையான சகோதர, சகோதரிகளோடு கூட மட்டுமே நாம் பரம அழைப்பின் சுவிசேஷ ஓட்டத்தை ஓட வேண்டும்.

மேலும் படிக்க: உங்கள் பரம அழைப்பு – செய்ய வேண்டியது என்ன?