அழுகையும் பற்கடிப்பும்

கருப்பொருள் வசனம்: "இதோ, உன்னைப் புடமிட்டேன், ஆனாலும் வெள்ளியைப்போலல்ல, உபத்திரவத்தின் சூளையிலே உன்னை சோதித்தேன்" (ஏசாயா48:10).

"நரகம்" என தமிழ் வேதாகமங்களில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள - "ஷியோல்"/”ஹேடீஸ்", "கெஹன்னா" மற்றும் "டார்டரூ" - என்ற மூல வார்த்தைகளின் மெய்யான அர்த்தத்தை ஆராய்ந்தோம். ஆனால், அழுகையும் பற்கடிப்பும் இருக்கும் இடம் பற்றி இயேசு பேசினாரே, அது என்ன?
மொத்தம் ஏழு வசனங்களிலே இந்த "அழுகையும், பற்கடிப்பும்" வாசகத்தை காண்கிறோம் - மத்தேயு 8:12; 13:42,50; 22:13; 24:51; 25:30; லூக்கா 13:28.

மேலும் படிக்க: யுகங்களுக்கோர் உவமை - யார் அந்த ஐசுவரியவான்?