திரித்துவம் கிறிஸ்தவத்துள் நுழைந்த கதை

 கருப்பொருள் வசனம்
"மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்கள்." (அப்போஸ்தலர் 20:29-30)

நாம் சர்வ வல்ல தேவன் (கடவுள்) பற்றியும், இயேசு கிறிஸ்து பற்றியும் படித்தோம், மேலும் சரிசமானத்துவம் மற்றும் அநாதித்தன்மை குறித்த கேள்விகளையும் ஆராய்ந்தோம். பரிசுத்த ஆவி பற்றியும் கற்றுக்கொண்டோம். யோவான் 1:1-ன் நேரடியான முரணற்ற அர்த்தத்தையும் நாம் கண்டோம். 'பதினாலுத்துவம்' போன்ற வினோதமான வழக்குகளையும் விசாரித்தோம். இனி நாம் கிறிஸ்தவ நம்பிக்கைகளில் ஒரு திரித்துக் கோட்பாடு எப்போது, எப்படி நுழைந்தது என்பதுபற்றிய வரலாற்றை சிறிது படிக்கலாம்.

1) மறையியல் ஞானமார்க்கத்தாரின் (Gnostics) தவறான பிரச்சாரமும், யோவானின் பதிலும்

2) யோவானின் பதில் திரிக்கப்பட்டு மெதுவாக இயேசுவை கடவுளுக்கு இணையாக்க முயற்சி
யோவான் இறந்த பிறகு, மறையியல் ஞானமார்க்க (Gnostic) குழுக்கள் மேலும் சக்தி பெற்று, கிறிஸ்தவர்களை நெருக்கின. அவர்களுடன் தர்க்கம் செய்ய, கிறிஸ்தவர்கள் தேவகுமாரனாகிய இயேசுவின் பரலோகத்தன்மையை வலியுறுத்த வேண்டியிருந்தது.
நாளுக்கு நாள் அவருடைய பிம்பம் பெரிதுபடுத்தி முன்வைக்கப்பட்டு, வேத வசனங்களில் வரையறுக்கப்பட்டதைத் தாண்டி அவரது அந்தஸ்து ஏற்றப்பட ஆரம்பித்தது.
3-ஆம் நூற்றாண்டில், இயேசு கடவுளுடைய வெளிப்பாடு என்றும், அவர் தனிநபர் அல்ல என்றும் உரைத்த சபிலியஸ் (Sabellius) போன்றோரின் தவறான கருத்துக்கள் முன்மொழியப்பட்டன. இது முதலில் பரவலாக நிராகரிக்கப்பட்டது.

3) ஆதி கிறிஸ்தவ விசுவாசிகளுக்கும், புதிய சரிசமானத்துவ புனைவாளர்களுக்கும் பிளவு
இயேசுவை கடவுளுடன் சமன்படுத்திய புதிய புனைவுகள், அவர் ஒரு கீழ்ப்படியும் குமாரன் என்ற ஆதிகால திருச்சபைத்தந்தைகளின் கோட்பாட்டை நிராகரித்தன.
ஆதி விசுவாசத்தை காத்துக்கொண்டவர்கள் அர்ப்பணிப்புடன் அதனை காக்க முனைந்தனர். மகா ஏரியன் சர்ச்சை (the great Arian controversy) கிளர்ந்தெழுந்தது. கிறிஸ்தவர்களிடையே பிளவு உண்டானது.

4) அரசியல் தலையீடும், அரை-திரித்துவ நைசியா பிரமாணம் (Nicene Creed) உருவாக்கமும்

5) நைசியா-கான்ஸ்டண்டினோபில் பிரமாணம் - முழுநீள திரித்துவவாதத்திற்கு ஓர் பாலம்

6) முழு திரித்துவத்தின் வருகை - அதனாசியின் பிரமாணம் (Athanasian Creed)

7) வரலாற்று உண்மைகளின் ஒரு சுருக்கம்
இரண்டாயிரம் ஆண்டுகளாக எவ்வளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதைப் புரிந்துகொள்ள, சில சரித்திர உண்மைகளை நாம் பார்க்கலாம்.

8) திரித்துவ மொழிமுறை புறச்சமய ஆதாரங்களில் இருந்து களவாடப்பட்டது
திரித்துவ பிரமாணங்களில் விசித்திரமான மாய வாக்கியங்களை நாம் பார்க்கலாம் - 'பிதாவுடனான ஒரே சாரமாக, தேவனின் தேவன், ஒளியின் ஒளி' என்ற இந்த சொற்றொடர்கள் வேதவாக்கியங்களுக்கு மிக அந்நியமானவை. இவை எங்கிருந்து வருகின்றன? இவற்றின் மூலம்தான் என்ன?
இந்த கேள்விகளின் பதில் கிடைக்கும்போது, அது நாம் திடுக்கிட்டு உறையும் வண்ணம் அதிர்ச்சியாக இருக்கிறது.
ஜான் நியூட்டன் ('மும்மூர்த்திகள் மற்றும் திரித்துவங்களின் தோற்றம்' Origin of Triads and Trinities) கூறுகிறார்,
     'மிகவும் பழமையான குடிகள் மத்தியில் ஒரு தனித்துவமான மதம் மற்றும் வழிபாடு பற்றி நமக்கு முதல் பார்வை கிடைக்கும்போது, அவர்கள் தங்கள் தெய்வங்களை மும்மூர்த்திகளாக தொகுப்பதை பார்க்கிறோம்'.
அவர் மேலும் இந்திய திரித்துவத்தை விளக்குகிறார்,
     'பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவா என்ற மூன்று வெளிப்பாடுகள் கொண்ட ஒரே உச்ச ஜீவியைப் பற்றி காளிதாசன் (கி.மு. 55) இங்ஙனம் பாடினார்: 'இந்த மூன்று நபர்களில் ஓர் இறைவன் காட்சி கொடுக்கிறான், ஒவ்வொருவரும் முதலாவதாகவும், ஒவ்வொருவரும் கடைசியாகவும் இருக்க, மாறாக தனியாக இருக்க அல்ல. பாக்கியப்பட்ட மூவரில் பிரம்மா, விஷ்ணு, சிவா, ஒவ்வொருவரும் முதல், இரண்டு, மூன்றாக இருப்பராக..'’
ஆதிகால எகிப்து பற்றி, நியூட்டன், பேராசிரியர் சயீஸ் Professor Sayce ('கிஃப்ஃபோர்ட் லெக்சர்ஸ் & ஹிபெர்ட் விரிவுரை' Gifford Lectures & Hibbert Lectures) எழுதியதை மேற்கோள் காட்டுகிறார்:
     'பண்டைய எகிப்திய சமய மரபிற்கு கிறிஸ்தவ இறையியல் கோட்பாடு கடன்பட்டுள்ள விசயம், திரித்துவத்தின் தத்துவத்தைக் காட்டிலும் வேறெங்கும் தெள்ளத்தெளிவாக இல்லை. கிறிஸ்தவ இறையியலாளர்கள் திரித்துவத்தில் பயன்படுத்திய அதே சொற்கள் எகிப்தின் கல்வெட்டு மற்றும் நாணற்புற்களில் (papyri) நம்மை சந்திக்கின்றன.
நியூட்டன் தொடர்கிறார்:
     'நைசியா மற்றும் அதனாசி பிரமாணங்களில் காணப்படும் 'ஒளியின் ஒளி, தேவனின் தேவன், உண்டாக்கப்பட்டவருமல்ல, ஜெனிப்பிக்கப்பட்டவரே, பிதாவுடனான ஒரு சாரமானவர்' போன்ற விசித்திரமான சொற்றொடர்கள் பல தலைமுறையினரை குழப்பத்தில் ஆழ்த்தியதுண்டு. அன்றியும் இப்போது அவற்றின் அர்த்தங்களை நாம் காண்கிறோம். எப்படியெனில், [பண்டைய எகிப்தில் வணங்கப்பட்ட] சூரிய திரியேக தெய்வத்தின் (Solar Trinity) மொழிமுறையில் மொழிபெயர்க்கப்பட்டால், இவை அனைத்தும் புரிந்து கொள்ளத்தக்கவை ஆகின்றன. ஆனால், அந்த அர்த்தத்தின் துப்புதுலக்கம் இல்லாமல், அவை சுத்த அபத்தமான முரண்பாடுகளாகின்றன... பழைய புறச்சமய உருமாதிரிகளைக் கொண்டு இந்த புது கிறிஸ்தவ பிரமாணங்கள் புனையப்பட்டபோது பண்டைய சூரிய திரித்துவத்தின் எளிமையும், அங்க இலட்சணமும் முற்றிலும் தொலைந்து போயின... [புறச்சமய] திரித்துவங்கள் பரந்துவிரிந்த பழமையும், உலகளாவிய பின்பற்றுதலும் கொண்டு கௌரவம் மிகுந்து புறக்கணிக்க முடியாதவாறு இருந்தன. அதனால் கிறிஸ்தவத்திற்கு மதம்மாறிக்கொண்டு இருந்த புறச்சமயத்தார்கள் திரித்துவ சமரசத்தை ஆவலுடன் ஏற்றுக்கொண்டார்கள். திருச்சபையும் அதனை முழுக்காட்டுதல் செய்தது. இப்போது நாம் அதன் தோற்றத்தின் முழுநீள வரலாற்றை அறிகிறோம்.'
ஆம், வார்த்தைக்கு வார்த்தை, சொற்றொடருக்கு சொற்றொடர், நைசியா மற்றும் அதனாசி பிரமாணங்களின் பகுதிகள் புறச்சமய மத நூல்களிலிருந்து களவாடப்பட்டவை!

மேலும் படிக்க: இது அவ்வளவு முக்கியமா?