வினோதமான வழக்குகள் - பதினாலுத்துவம், நான் இருக்கிறேன்..

1) நாம் சர்வ வல்ல தேவன் (கடவுள்) பற்றியும், இயேசு கிறிஸ்து பற்றியும் படித்தோம், மேலும் சரிசமானத்துவம் மற்றும் அநாதித்தன்மை குறித்த கேள்விகளையும் ஆராய்ந்தோம். பரிசுத்த ஆவி பற்றியும் கற்றுக்கொண்டோம். யோவான் 1:1-ன் நேரடியான முரணற்ற அர்த்தத்தையும் நாம் கண்டோம். இப்போது திரித்துவாதிகளால் மேற்கோள் காட்டப்படும் வேறு சில வசனங்களை படிப்போம். உதாரணமாக, யோவான் 14:9 மற்றும் 10:30 - இந்த வசனங்களின் அர்த்தம் என்ன?

2) மத்தேயு 28:19 வசனம் 'பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே ஞானஸ்நானம்' கொடுப்பதைப் பற்றி பேசுகிறதே. அதன் அர்த்தம் என்ன?
எல்லோருக்கும் ஒரே நாமம் எனவும், அதனால் எல்லாருமே ஒருவர் எனவும் சில திரித்துவவாதிகள் வாதிடுவது உண்டு. ஆனால் அவ்வாதத்தில் ஒரு பிரச்சனை என்னவென்றால், 'மூன்று நபர்களும் குழப்பப்படக்கூடாது' என்கிற திரித்துவக் கோட்பாட்டிற்கே அது முரண்படுகிறது. மூன்று பேரையும் ஒரே பெயரில் அழைப்பது கண்டிப்பாக மூன்று நபர்களையும் குழப்புவதே ஆகும்.
இதற்கு ஒரு மேலான விளக்கம் உள்ளது. யூத கலாச்சாரம் (மற்றும் பிற பழங்கால கலாச்சாரங்கள்) பற்றி படிக்கும் எவரும், பழங்காலங்களில் 'அவர் நாமத்தில்' என்ற சொற்றொடர் 'அவரது அதிகாரத்தில்' என்ற பொருள்படும் என அறிவார்கள். உதாரணத்திற்கு, 'இராஜ இராஜ சோழன் பெயரில் ஆணை' என்றால் 'இராஜ இராஜ சோழனுடைய அதிகாரத்தால் ஆணை' என்றுதான் பொருள்.
அதே பொருள்தான் மத்தேயு 28:19 வசனத்திலும்! - 'பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் அதிகாரத்தால் ஞானஸ்நானம்' என்பதுதான் அதன் சரியான பொருள்.

3) 'ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் (I AM)' என்று யோவான் 8:58-இல் இயேசு கூறுகிறார். அதன் அர்த்தம் என்ன?
சிலர் இயேசு 'நான் இருக்கிறேன்' என்ற நிகழ்கால கூற்றை பயன்படுத்துவது யாத்திராகமம் 3:14-இல் காணப்படும் கடவுளின் பெயரை குறிப்பிடுவதாகவும், அதனால்தான் சில யூதர்கள் அவரைக் கல்லெறிய முயன்றனர் எனவும் வாதிடுகின்றனர் (8:59).
ஆனால் கிரேக்கத்தில் உள்ள யோவான் 8:58 வசனத்தையும், எபிரெய மொழியில் உள்ள யாத்திராகமம் 3:14 வசனத்தையும் நாம் படிக்கும்போது இரண்டிற்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லை என்று நாம் காண்கிறோம்.

சில யூதர்கள் அவரைக் கல்லெறிய முயன்றது ஒரு திடீர் எதிர்விளைவு அல்ல, அவர்கள் ஏற்கனவே அவரைக் கொல்ல வகைதேடுவதாக இயேசு குறிப்பிடுகிறார் (8:37,40).

4) கிங் ஜேம்ஸ் ஆங்கில பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள Godhead வார்த்தையின் சரியான (அப்போஸ்தலர் 17:29, ரோமர் 1:20, கொலோசெயர் 2:9) அர்த்தம் என்ன?
இன்று இந்த கிங் ஜேம்ஸ் வார்த்தை பல-தலை கடவுள் படங்களை சிலர் மனதில் வரைகிறது. ஆனால் 'head ' என்கிற மத்திய ஆங்கில பின்னொட்டு (Middle English suffix) என்பது 'hood' (தன்மை) என்ற அர்த்தத்தில் இடைக்காலத்தில் (Middle Ages) பயன்படுத்தப்பட்டது (எடுத்துக்காட்டு: maidenhead). அதனால் அதன் சரியான ஆங்கில வார்த்தை Godhood தான்.
அதன் கிரேக்க மூல வார்த்தையும் தெய்வம்/தெய்வத்தன்மை என்றுதான் அர்த்தப்படுத்துகிறது.
எனவே கண்ணியமான ஆங்கில மொழிபெயர்ப்புகளில் Godhead வார்த்தை காணப்படவில்லை (NIV / NASB போன்றவை). பெரும்பாலான தமிழ் வேதாகமங்களும் இவ்வார்த்தையை ‘தெய்வம்’ அல்லது ‘தெய்வத்தன்மை’ என சரியாகவே மொழிபெயர்க்கின்றன.

மேலும் படிக்க: திரித்துவம் கிறிஸ்தவத்துள் நுழைந்த கதை