யுகங்களுக்கோர் உவமை - யார் அந்த ஐசுவரியவான்?

கருப்பொருள் வசனம்: "மனுசகுமாரனே, நீ ஒரு விடுகதையை அமைத்து அதை இஸ்ரவேல் வம்சத்தாருக்கு ஓர் உவமையாக சொல்லு" (எசேக்கியேல் 17:2). 'அப்பொழுது அவருடைய சீஷர்கள், இந்த உவமையின் கருத்து என்னவென்று அவரிடத்தில் கேட்டார்கள். அதற்கு அவர், "அந்த உவமையின் கருத்தாவது.." (லூக்கா 8:9-11)

1) 'ஷியோல்' / 'ஹேடீஸ்', 'கெஹன்னா', 'டார்டரூ' ஆகிய மூல பைபிள் வார்த்தைகள் 'நரகம்' என தமிழ் வேதாகமங்களில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதையும், அச்சொற்களின் மெய்யான அர்த்தங்களையும் நாம் ஆராய்ந்தோம். ஆனாலும் சிலர், ஐசுவரியவான் - லாசரு உவமையை நிஜமான சம்பவம் என்று எடுத்துக் கொண்டு நரக வேதனையை பிரசங்கிக்கிறார்கள். அது சரிதானா? 
"ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான். லாசரு என்னும் பேர்கொண்ட ஒரு தரித்திரனும் இருந்தான்; அவன் பருக்கள் நிறைந்தவனாய், அந்த ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்து, அவனுடைய மேஜையிலிருந்து விழுந் துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான்; நாய்கள் வந்து அவன் பருக்களை நக்கிற்று. பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம் பண்ணப்பட்டான். பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்" (லூக்கா 16:19-23).

உவமைகள் என்பவை உருவகமான செய்திகளைக் கொண்ட கதைகள் என்பதை நாம் அறிவோம். ஓர் உவமையில் கருத்தை விளக்க சொல்லப்படுகிற எடுத்துக்காட்டு விசயமானது நிஜமான நிகழ்வு கிடையாது (லூக்கா 8:9-11ஐ படிக்கவும்).
புளித்த மாவைக் குறித்த உவமை ரொட்டி சுடுவதற்கான சமையற் குறிப்பா, என்ன? விதைப்பவனைப் பற்றிய உவமையில் இயேசு விவசாயத்தொழில் நுட்பங்களைக் குறித்தா பேசுகிறார்? நிச்சயம் அல்ல. புளித்த மாவும் வெவ்வேறு வகை விதைகளும் எவற்றை அடையாளப்படுத்தின என்பதை அறிவோம். களைகள் குறித்த உவமையில் நல்ல விதை இராஜ்யத்தின் புத்திரரைக் குறிக்கிறது என்றும், களைகள் பொல்லாங்கனுடைய புத்திரரைக் குறிக்கிறது என்றும் இயேசு விளக்கினார்.
இதுபோலவே, வேறுபல உவமைகளிலும் பல்வேறு உருவகங்களையும், எடுத்துக்காட்டுகளையும் அவர் பயன்படுத்தினார்.

2) நிஜ நிகழ்வாக அர்த்தப்படுத்திக்கொண்டால் இந்த ஐசுவரியவான் - லாசரு உவமையானது சில அபத்தங்களை உள்ளடக்கியதாகத் தோன்றுகிறது. அவை என்ன?

3) யூத பரிசேயர்களுக்கு ஓர் உருவகக்கதை பாடமாகவே இயேசு இந்த உவமையை சொன்னார். அவர்களுக்கு அவர் உண்மையில் சொல்லவந்த செய்திதான் என்ன?

4) ஐசுவரியவானும், லாசருவும் மரித்தபின்னே நடக்கும் நிகழ்வுகள் குறிப்பதென்ன?

ஆம்! இது உண்மையில் யுகங்களைப்பற்றிய ஒரு உவமையே ஆகும். பழைய ஏற்பாட்டு யுகமானது புதிய ஏற்பாட்டு யுகமாக மாறுவதை விளக்கும் ஓர் உருவகக்கதை! நாம் கண்டவாறு, பல திருமறை வசனங்கள் அதன் தீர்க்கதரிசன நிறைவேற்றத்தை விளக்குகின்றன.

மேலும் படிக்க: நரக வரலாறு