நாங்கள் யார்?

நாங்கள் யார்?

  1. வாழ்க்கை, பிரபஞ்சம் இவை எல்லாவற்றின் அர்த்தம் தேடும் பயணத்தில் சக பயணி நாங்கள். இந்த தேடுதலானது காலத்தின் சோதனைகளைத் தாண்டி நிலைநிற்கும் ஒரே புத்தகமான புனித வேதாகமத்தில் மிகவும் சுவாரஸ்யமாகிறது.
  2. வேதாகமம் தான் கடவுளின் வார்த்தை என்பதில் எங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. அதுவே தெய்வீக தாக்கம் கொண்ட அறிவிற்கெல்லாம் மூலாதாரம். அதன் நம்பகத்தன்மை காலகாலமாய் விஞ்ஞானம் மூலவும், மனுக்குலத்தின் சரித்திரத்தின் மூலவும் மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது.
  3. "விவாதிப்போம், வாருங்கள்," என்று கர்த்தர் சொல்லுகிறார். (ஏசாயா 1:18) - மனிதனின் பகுத்தறிவை முடக்க முயலும் நிறுவனமயமாக்கப்பட்ட மதங்கள் போல் அல்லாமல், வாசகர்களைப் பகுத்தறிந்து விவாதிக்க அழைக்கும் ஒரே மத நூல் உலகத்திலேயே புனித வேதாகமம் மட்டும்தான்!
    தன்னுடன் விவாதிக்க அழைக்கும் கடவுளின் அழைப்பை (பணிவுடன்) மகிழ்ச்சியுடன் ஏற்று அவரது வார்த்தையைக் கவனமாய்ப் படிக்கிறோம்.
  4. நாங்கள் எந்த சபைப்பிரிவையும் சார்ந்தவர்கள் அல்ல. எங்களில் பெரும்பாலோர் பிரபலமான சபைப்பிரிவுகளில் அங்கமாக இருந்தவர்கள்தான். ஆனால், வேதாகமத்தை படித்தபின் அதெல்லாம் மாறிப்போனது.
    மாறாக, வேதாகமத்தில் உள்ள மெய் நற்செய்தி அறிவிக்கும் மெய்யான கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படவே நாங்கள் விரும்புகிறோம்.
  5. எங்களுக்கு ஒத்த சிந்தனையுள்ள மெய் கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் பரவலாக உலகம் முழுவதும் உண்டு.

நாங்கள் நம்புவது என்ன? ஏன் மெய் கிறிஸ்தவம் என்ற பெயர்?

நாங்கள் வேதாகமம் படிக்கும் வழிமுறை என்ன?

எங்கள் குறிக்கோள் என்ன?