பெந்தெகொஸ்தே இயக்கம்

கருப்பொருள் வசனம்: ‘தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம். அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம்.’ 1கொரிந்தியர் 13:8.

1) பெந்தெகொஸ்தே சபைகள் என்றால் என்ன? அவை எப்படி, எப்போது தோன்றின?
பெந்தெகொஸ்தே இயக்கம் சமீபத்தில் தோன்றியதுதான். அதன் சபைகளின் முக்கிய கவனம் அந்நிய பாஷைகளில் பேசுவது போன்ற பரிசுத்த ஆவியின் அதிசய வரங்களை அனுபவிப்பதாகும். ‘வரம்’ என்பதன் கிரேக்க வார்த்தை ‘கரிஷ்மா’ (Charisma) ஆகும். அதனாலேயே இந்த இயக்கத்திற்கு கரிஸ்மாடிக் இயக்கம் (Charismatic Movement) என்ற பெயரும் உண்டு. 19-ஆம் நூற்றாண்டின் முடிவில் சமய ஆர்வத்தில் ஒரு திடீர் எழுச்சி ஏற்பட்டது. பல குழுக்கள் 1900-இல் கிறிஸ்துவின் வருகையை, அதாவது உலக வரலாற்றின் முடிவை எதிர்பார்த்தன. இதில் முக்கிய பங்கு வகித்தது மெத்தடிஸ்ட் (Methodist) சபையின் பரிசுத்தவாத இயக்கம் நடத்திய மறுமலர்ச்சி கூட்டங்கள் ஆகும். அக்கூட்டங்களில் மக்கள் அந்நியபாஷைகளில் பேசுவதாக அவ்வப்போது செய்திகள் வெளிவந்தன. ஜனவரி, 1900-இல் அமெரிக்காவில் கான்சஸ் மாகாணத்தில் டோபேகா என்ற ஊரில் சார்லஸ் பர்ஹாம் தலைமையில் நடைபெற்ற மறுமலர்ச்சி கூட்டத்தில்தான் பரவலான அந்நிய பாஷை பேசுதல் பற்றின முதல் செய்தி வெளியானது. மேலும் அதுபோன்ற அனுபவங்கள் 1906-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாநகரத்தில் அசூசா தெருவில், வில்லியம் சேமோர் (சார்ல்ஸ் பர்ஹாமின் மாணவர்) தலைமையில் நடந்த மறுமலர்ச்சி கூட்டங்களில் நிகழ்ந்தன. அதன் பின்னர் அந்நிய பாஷை பேசுவதை வலியுறுத்தும் சபைகள் அமெரிக்கா முழுவதும் நிறுவப்பட்டன. இது உலகெங்கும் பரவி, பல நாடுகளில் பிரசித்தி பெற்றது. இன்று, சுமார் 170 கிறிஸ்தவ பிரிவுகள் தங்களை பெந்தெகொஸ்தே என்று அழைக்கின்றன.

2) ஆவியின் அதிசய வரங்கள் என்றால் உண்மையில் என்ன?
‘எப்படியெனில், ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே விசுவாசமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலே குணமாக்கும் வரங்களும், வேறொருவனுக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப் பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது.’ 1கொரிந்தியர் 12:8-10.
இந்த ஒன்பது வரங்களையும் எவ்வித மனித முயற்சியும் இல்லாமல் தேவன் இலவசமாய் வழங்கினார். உதாரணமாக, தானியேல் புத்தகத்தில் உள்ள ஞானத்தையும் அறிவையும் (முதல் இரண்டு வரங்களையும்) பெற வேண்டுமென்றால் நாம் இன்று என்ன செய்ய வேண்டும்? அந்த புத்தகத்தை படித்து புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும் அல்லவா? ஆனால் ஆதிகால திருச்சபை மக்களுக்கு அத்தகைய ஞானமும் அறிவும் படிக்காமலேயே அதிசயமாக வரமாக வழங்கப்பட்டது. அந்நிய பாஷை வரமும் அதுபோலவே - ஒரு புதிய பாஷையை கற்றுக்கொள்வதற்கு எந்த சுயமுயற்சியும் தேவையில்லை! சுகமாக்கும் வரமும் அதுபோலவே - மற்றவரை குணப்படுத்த மருத்துவம் கற்க வேண்டிய அவசியமில்லை.. இதுபோன்ற வரங்களை அதிசயமாக பெற்றனர்.

3) இன்று பலர் அந்நிய பாஷை வரம் என்றால் யாருக்கும் புரிய மாட்டாத சொற்களை பேசுவது என்று நினைக்கிறார்கள், ஏனென்றால் இன்றைய பெந்தெகொஸ்தே சபைகளில் மக்கள் அதைத்தான் காண்கிறார்கள். ஆனால் ஆதிகால திருச்சபை இந்த வரத்தை பெற்றபோது என்ன நிகழ்ந்தது?
‘பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவி தங்களுக்கு தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள். வானத்தின்கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்துவந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே வாசம்பண்ணினார்கள். அந்தச் சத்தம் உண்டானபோது, திரளான ஐனங்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் பாஷையிலே அவர்கள் பேசுகிறதை அவரவர்கள் கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள். எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து; இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா? அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி?’ (அப்போஸ்தலர் 2:1-8)
ஆம், அப்போஸ்தலர்கள் அந்நிய பாஷைகளில் பேசியபோது, பல்வேறு நாடுகளிலிருந்து வந்தவர்கள் விதவிதமான தங்கள் சொந்த பாஷைகளில் அவர்கள் பேசியதை கேட்டார்கள். கேட்டது மட்டுமல்லாமல் அவர்கள் சொல்வது என்னவென்றும் புரிந்துகொண்டார்கள்.

4) தேவன் இந்த வரங்களை ஆதிகால திருச்சபைக்கு ஏன் கொடுத்தார்?
அ) ஒருவேளை நீங்கள் ஒரு புதிய மதத்தை வெறும் 12 நபர்களை கொண்டு ஆரம்பிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்படியென்றால் மக்களை எப்படி நம்ப வைப்பீர்கள்? நீங்கள் கூறும் செய்தியை நிரூபிக்க சக்திவாய்ந்த அடையாளங்கள் உங்களுக்கு தேவைப்படும் அல்லவா? அதற்காகவே அந்த காலத்தில் ஆவியின் விசேஷித்த அதிசய வரங்களை தேவன் கொடுத்தார்.

ஆம், இது மிக முக்கியம். சுகமளிக்கும் வரம் போன்ற அதிசய வரங்கள் திருச்சபை விசுவாசிகளை குணமாக்கும் பொருட்டு வழங்கப்படவில்லை, மாறாக அவிசுவாசிகள் மத்தியில் தேவனின் நற்செய்தியை நிரூபிக்க அற்புத அடையாளங்களாக பயன்படுத்தப்படவே அருளப்பட்டன. ஏற்கனவே திருச்சபையுள் இருக்கிறவர்களுக்கு (விசுவாசிகளுக்கு) மேலும் அடையாளங்கள் தேவைப்படவில்லை. இது உண்மையில் நமக்கு பவுலின் நடத்தையை விளக்குகிறது –

ஆம், உண்மையில் பவுல் தன்னுடைய சுகமளிக்கும் வரத்தை விசுவாசிகள் மத்தியில் ஒருபோதும் பயன்படுத்தவே இல்லை! மாறாக அவிசுவாசிகள் நடுவில் மட்டுமே அதனை வெளிக்காட்டினார்.

) இந்த வரங்களெல்லாம் ஆதித்திருச்சபை பக்திவிருத்தி அடைய உதவின. ஆனால் இன்றைய திருச்சபையான நமக்கு அத்தகைய அதிசய தீர்க்கதரிசனங்களோ அற்புத அறிவோ தேவையில்லை, ஏனெனில் இன்று வேதாகமத்தின் புதிய ஏற்பாடு முழுவதும் நம் கையில் இருக்கிறது. ஆனால் ஆதி விசுவாசிகளுக்கு அந்த வசதி இல்லாமல் இருந்தது.
உதாரணமாக, அப்போஸ்தலனாகிய பவுல் வெளிப்படுத்தின விசேஷத்தின் புஸ்தகம் (கி.பி. 95-இல்) எழுதப்படுவதற்கு வெகுகாலம் முன்னரே (கி.பி. 64-இல்) சாவை சந்தித்தார்.
எனவே அவர் வாழ்நாளில் அவர் கையில் வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்தில் உள்ள தீர்க்கதரிசனங்கள் இருக்கவில்லை. புதிய ஏற்பாட்டின் மற்ற புத்தகங்களும் கூட கி.பி.150-களில் தான் ஒரே நூலாக தொகுக்கப்பட்டன. அந்த காலகட்டம் வரை, விசுவாசிகளுக்கு தீர்க்கதரிசனம், அற்புத ஞானம், அறிவு மற்றும் ஆவியின் பகுத்தறிதல் போன்ற அதிசய வரங்கள் தேவைப்பட்டன.
‘’நீங்கள் கூடிவந்திருக்கிறபோது, உங்களில் ஒருவன் சங்கீதம் பாடுகிறான். ஒருவன் போதகம்பண்ணுகிறான், ஒருவன் அந்நியபாஷையைப் பேசுகிறான், ஒருவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான், ஒருவன் வியாக்கியானம்பண்ணுகிறான். சகோதரரே, சகலமும் பக்திவிருத்திக்கேதுவாகச் செய்யப்படக்கடவது." 1கொரிந்தியர் 14:26. ஆம், அறிவு மற்றும் தீர்க்கதரிசனங்களின் அதிசய வரங்களின் மூலம் ஆதித்திருச்சபையினர் நிறைய கற்றுக்கொண்டார்கள். இன்று நாம் ஆவிகளை பகுத்தறிய வேண்டும் என்றால், ஒருவர் சொல்லும் கருத்தை வேதாகமத்தோடு ஒப்பிட்டு சோதித்துப்பார்க்கிறோம். ஆனால் அன்றைய திருச்சபையினர் கையில் வேதாகமம் இல்லாததால், அப்படிப்பட்ட அதிசய வரங்களே அவர்களுக்கு உதவின.

5) ஆவியின் அதிசய வரங்களை ஒருவர்க்கு யாரால் வழங்க முடியும்? அந்த வரங்களை பெற்றுக்கொண்ட ஒருவர் அவற்றை இன்னொருவருக்கு வழங்க முடியுமா?
வேதம் தெளிவாக கூறுகிறது - கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் மட்டுமே மற்றவர்க்கு ஆவியின் அதிசய வரங்களை அருள முடியும்.

ஆகவே, இரண்டு காரியங்களில் வேதவாக்கியங்கள் மிகத்தெளிவாக உள்ளன -
   அ) கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களால் மட்டுமே ஆவியின் அதிசய வரங்களை வேறொருவருக்கு அருள முடியும்.
   ஆ) ஆனால் அப்போஸ்தலர்களிடம் வரத்தை பெற்றுக்கொண்ட ஒருவரால் மற்றொருவருக்கு அவற்றை வழங்க முடியாது. அவை பரிமாற்றம் செய்யக்கூடிய வரங்கள் அல்ல.

6) சரி, அப்போஸ்தலர்களின் மரணத்திற்கு பின்பு என்ன நடந்தது? மேலும், அதிசய வரங்களை பற்றி வேதாகமம் என்ன தான் முன்னுரைக்கிறது?

"வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவி ஒன்றே. ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது. எப்படியெனில், ஒருவனுக்கு அந்த ஆவியினாலேயே குணமாக்கும் வரங்களும், வேறொருவனுக்கு அற்புதங்களைச்செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப்பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது.
இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவி நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்துகொடுக்கிறது.. எல்லாரும் அற்புதங்களைச் செய்கிறவர்களா? எல்லாரும் குணமாக்கும் வரங்களுடையவர்களா? எல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசுகிறார்களா?.. இப்படியிருக்க, மேன்மையான வரங்களை நாடுங்கள்; இன்னும் அதிசிறந்த வழியையும் உங்களுக்குக் காண்பிக்கிறேன்..
தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம். நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ் சொல்லுதலும் குறைவுள்ளது. நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம். நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்.. இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே, அறிந்துகொள்ளுவேன். இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது." 1கொரிந்தியர் 12:4-31; 13.

7) அதிசய வரங்கள் யாவும் 2-ஆம் நூற்றாண்டோடு நின்றுபோயின என்றால், இன்றைய பெந்தெகொஸ்தே சபைகளில் செய்யப்படும் அற்புதங்கள் எல்லாம் என்ன?
சரி, புறமத கோயில்களில் அற்புதங்கள் நடக்கின்றனவா? – ஆம், நிச்சயமாக. புறமத மந்திரவாதிகளும் இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதங்களை செய்தார்கள் என்று வேதாகமமே பதிவு செய்துள்ளது –
‘பார்வோன் சாஸ்திரிகளையும் சூனியக்காரரையும் அழைப்பித்தான். எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள். அவர்கள் ஒவ்வொருவனாகத் தன் தன் கோலைப் போட்டபோது, அவைகள் சர்ப்பங்களாயின.’ யாத்திராகமம் 7:11-12.
அத்தகைய காரியங்களைச் செய்ய அவர்களுக்கு வல்லமை அளிக்கிறவன் யார்? - சாத்தான் மற்றும் அவனது தூதர்கள் நிச்சயம் இயற்கைக்கு அப்பாற்பட்ட அசாத்திய சக்தி கொண்டவர்கள்தாம்.

8) ஆனால் இந்த சபைகள் இயேசுவின் பெயரில் அற்புதங்கள் செய்கின்றன அல்லவா? சாத்தான் இயேசுவின் நாமத்தில் அற்புதங்கள் செய்வானா, என்ன?
பவுல் கொரிந்தியர்க்கு எச்சரிக்கை விடுக்கிறார்: ‘அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே.' 2கொரிந்தியர் 11:14. இது என்ன வினோதம்! சாத்தான் இருளின் தூதன் ஆயிற்றே? ஆனால் அவன் ஒளியின் தூதனாகவும் வேஷம் தரிப்பான் என்கிறாரே பவுல்!
சரி, ஆனால் இந்த சபைகளில் நடக்கும் அற்புதங்கள் ஏன் உண்மையில் இயேசுவின் வல்லமையால் இருக்க முடியாது?

வெகுஜனங்களைப் குழப்புவதற்காக உண்மையில் சாத்தான் தான் அச்சபைகள் மூலம் அந்த அற்புதங்களை செய்கிறான். குழப்பம் விளைவிப்பதுதான் (ஒளியின் தூதன் வேடம்!) அவன் தொழில் ஆயிற்றே!

9) இப்படிப்பட்ட அற்புதங்களை தன் பெயரில் செய்வார்கள் என இயேசு முன்னறிவித்தாரா?
இயேசு, "அந்நாளில் அநேகர் என்னை நோக்கி, 'கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா?' என்பார்கள். அப்பொழுது, 'நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை, அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்,' என்று அவர்களுக்குச் சொல்லுவேன்," என்றார். மத்தேயு 7:22-23. இயேசுவின் இந்த தீர்க்கதரிசனத்தில் மூன்று விசயங்கள் குறிப்பிடத்தக்க வண்ணம் தனித்து நிற்கின்றன –

10) அன்று 2-ஆம் நூற்றாண்டில் நின்றுபோன ஆவியின் அதிசய வரங்கள் திடீரென 20-ஆம் நூற்றாண்டில் மறுபடி தலையெடுப்பது ஏன்?
சாத்தானின் வல்லமையால் பிசாசுகளை விரட்டுவதாக குற்றம் சாட்டப்பட்டபோது இயேசு இதனை விளக்குகிறார் – ‘சாத்தானைச் சாத்தான் துரத்துவது எப்படி? ஒரு இராஜ்யம் தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருந்தால், அந்த இராஜ்யம் நிலைநிற்கமாட்டாதே. ஒரு வீடு தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருந்தால், அந்த வீடு நிலைநிற்கமாட்டாதே. சாத்தான் தனக்குத்தானே விரோதமாக எழும்பிப் பிரிந்திருந்தால், அவன் நிலைநிற்கமாட்டானே, அவன் முடிவு வந்துவிட்டது." மாற்கு 3:23-26.

11) இந்த அற்புதங்கள் உண்மையில் சாத்தானிடமிருந்துதான் வருகின்றன என்பதை தெளிவாக காட்டும் வேறு விசயங்கள் உள்ளனவா?
"சகோதரரே, நான் உங்களிடத்தில் வந்து உங்களுக்கு இரகசியங்களை வெளிப்படுத்துவதற்காவது, அறிவுண்டாக்குவதற்காவது ஏதுவானதைச் சொல்லாமல், அந்நியபாஷைகளில் பேசினால் என்னாலே உங்களுக்குப் பிரயோஜனம் என்ன? அதுபோல, நீங்களும் தெளிவான புரியும்படியான பேச்சை நாவினால் வசனியாவிட்டால் பேசப்பட்டது இன்னதென்று எப்படித்தெரியும்? ஆகாயத்தில் பேசுகிறவர்களாயிருப்பீர்களே.
உலகத்திலே எத்தனையோ விதமானபாஷைகள் உண்டாயிருக்கிறது, அவைகளில் ஒன்றும் அர்த்தமில்லாததல்ல. சகோதரரே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள்; 'மறுபாஷைக்காரராலும், மறுஉதடுகளாலும் இந்த ஜனங்களிடத்தில் பேசுவேன்; ஆகிலும் அவர்கள் எனக்குச் செவிகொடுப்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்,' என்று வேதத்தில் எழுதியிருக்கிறதே. அப்படியிருக்க, அந்நியபாஷைகள் விசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது; ஆகையால், சபையாரெல்லாரும் ஏகமாய்க் கூடிவந்து, எல்லாரும் அந்நியபாஷைகளிலே பேசிக்கொள்ளும்போது, கல்லாதவர்களாவது, அவிசுவாசிகளாவது உள்ளே பிரவேசித்தால், அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களென்பார்களல்லவா?
யாராவது அந்நியபாஷையிலே பேசுகிறதுண்டானால், அது இரண்டுபேர்மட்டில், அல்லது மிஞ்சினால் மூன்றுபேர்மட்டில அடங்கவும், அவர்கள் ஒவ்வொருவராய்ப் பேசவும், ஒருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும். அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால், சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன்.
தீர்க்கதரிசிகள் இரண்டுபேராவது மூன்றுபேராவது பேசலாம், மற்றவர்கள் நிதானிக்கக்கடவர்கள். அங்கே உட்கார்ந்திருக்கிற மற்றொருவனுக்கு ஏதாகிலும் வெளிப்படுத்தப்பட்டால், முந்திப் பேசினவன் பேசாமலிருக்கக்கடவன். எல்லாரும் கற்கிறதற்கும் எல்லாரும் தேறுகிறதற்கும், நீங்கள் அனைவரும் ஒவ்வொருவராகத் தீர்க்கதரிசனஞ்சொல்லலாம். தீர்க்கதரிசிகளுடைய ஆவிகள் தீர்க்கதரிசிகளுக்கு அடங்கியிருக்கிறதே. தேவன் கலகத்திற்கு தேவனாயிராமல், சமாதானத்திற்கு தேவனாயிருக்கிறார்." 1கொரிந்தியர் 14:6-33.

சரி, இன்றைய பெந்தெகொஸ்தே சபைகளில் ஒன்றிற்கு நாம் சென்றோமானால், என்ன காண்கிறோம்? - மக்கள் அந்நிய பாஷை பேசுகிறேன் என்று சொல்லிக்கொண்டு அர்த்தமற்ற சொற்களை உளறுவதையும், ஒரே நேரத்தில் பலர் இரைச்சல் போடுவதையும், சுய கட்டுப்பாடு இல்லாத ஆட்டங்களையும், இவ்வகையான பல கூத்துக்களையும் பார்க்கிறோம். என்னவொரு ஒழுங்கற்ற கலகமான காட்சி!
கலகத்தின் தேவன் யார் என சற்று சிந்தியுங்கள்? ஆம் உண்மையில் அது சாத்தான் தான். இவை எல்லாம் அவனுடைய வல்லமையின் பயன்களே!

மேலும் படிக்க: கலாச்சார சட்டம் பேசுவோர்