சரிசமானத்துவ கேள்வி

கருப்பொருள் வசனம்: 'பிதா என்னைவிட பெரியவராயிருக்கிறார்.' (யோவான் 14:28)

1) சர்வ வல்ல தேவன் (கடவுள்) பற்றியும் மற்றும் இயேசு பற்றியும் நாம் படித்தோம். ஆனால், அதநாசியின் பிரமாணம் (Athanasian Creed) கூறும் "சரிசமானத்துவ" திரித்துவ கோட்பாட்டை ஆதரிக்க திரித்துவக் குழுக்கள் யோவான் 5:18-ஐ மேற்கோள் காட்டுவது வழக்கம். அந்த வசனம் என்ன தான் சொல்கிறது?
இயேசு அவர்களை நோக்கி, "என் பிதா இதுவரைக்கும் கிரியைசெய்துவருகிறார். நானும் கிரியைசெய்துவருகிறேன்," என்றார். அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மை தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள் (யோவான் 5:17-18).
இந்த வசனத்தில் பரிசுத்த ஆவி பற்றி எந்தவிதமான குறிப்பும் இல்லை. எனினும் சிலர் அந்த ஓட்டையை மறந்து, “சரிசமானத்துவ” திரித்துவத்தை ஆதரிக்க இந்த வசனத்தை மேற்கோள் காட்டுவது உண்டு.
எனினும், இயேசு தன்னை தேவனுக்கு சமமாக்கினாரா என்பதை நாம் ஆராய்வோம்:

அக்காலத்தில் யூதரில் பலர் குமாரத்துவத்தை புரிந்துகொள்ளவில்லை. பிற இடங்களிலும் இயேசு அதை அவர்களிடம் விளக்குகிறார் (யோவான் 10:34-36).

2) தான் தேவனுக்கு இணை என்று இயேசு ஒருபோதும் சொல்லவில்லை என்றால், தேவனோடு அவருக்கு இருந்த உறவின் தன்மை பற்றி அவர் என்ன சொன்னார்?
வேதவசனங்களில் எல்லா இடங்களிலும், இயேசு தான் தேவனுக்கு அடிபணிந்தவர் எனவே கூறுகிறார். சில உதாரணங்கள்:

இயேசு பிதாவாகிய தேவனை (கடவுளை) தம் சொந்த தேவனாக அறிக்கையிட்டு, அவருக்கு வழிபாடு, தொழுகை, ஆராதனை மற்றும் நன்றி செலுத்துகிறார்.

அப்போஸ்தலர்கள் பவுலும், யோவானும் அதனையே உறுதி செய்கின்றனர் -

3) தேவன் இயேசுவை மகிமைப்படுத்தியபோது, அவர் தேவனுக்கு (கடவுளுக்கு) சமமானவராக மாறவில்லையா?
நாம் வேதவாக்கியங்களைப் படிக்கையில், உண்மையிலேயே இயேசு எல்லாவற்றிற்கும் மேலாக தேவனால் உயர்த்தப்பட்டார் என்று நாம் காண்கிறோம், ஆனால் அவர் இன்னும் தேவனின் அன்பான கீழ்ப்படிதலுள்ள குமாரனாக இருப்பதை பார்க்கிறோம்.
தனது மகிமை, மரியாதை மற்றும் பட்டங்கள் எதையுமே அவர் தானாக சூட்டிக்கொள்வது இல்லை. மாறாக, தம்முடைய பிதாவின் கைகளில் இருந்தே அவைகளை அவர் பெற்றுக்கொள்கிறார்:

உண்மையில், இயேசு தான் பிதாவின் கட்டளையைத்தான் எப்போதும் செய்வேன் என்பதை உலகத்தார் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தம் சீடர்களிடம் கூறினார் (யோவான் 14:31). ஆமாம், கடவுளால் நியமிக்கப்பட்ட இராஜா, தம் பிதா கட்டளையிடுகிற காரியங்களைத்தான் தாம் செய்வேன் என்பதை தம் குடிமக்கள் (உலகத்தார்) கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்!
பவுல் இதனை விளக்குகிறார்:
    சகலத்தையும் அவருடைய பாதத்திற்குக் கீழ்ப்படுத்தினாரே; ஆகிலும் சகலமும் அவருக்குக் (இயேசுவுக்கு) கீழ்ப்படுத்தப்பட்டதென்று சொல்லியிருக்கும் போது, சகலத்தையும் அவருக்குக் கீழ்ப்படுத்தினவர் (தேவன்) கீழ்ப்படுத்தப்படவில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார். (1 கொரிந்தியர் 15: 27-28).

மேலும் படிக்க: ஆதியில்லா கேள்வி