Tag mei kristhavam

பரிசுத்த ஆவி

திரித்துவத்தின் மூன்றாம் பங்கு - பரிசுத்த ஆவி - வேதாகமத்தில் எங்குமே தேவன் என சொல்லப்படவில்லை. 5-ஆம் நூற்றாண்டில்தான் அது தேவன் என்று ஒரு கோட்பாடு (Creed) மூலம் அறிவிக்கப்பட்டது (அதன் முழு வரலாறு பின்னர் படிப்போம்) . பரிசுத்த ஆவி பற்றி வேத வசனங்கள் மூலம் நாம் என்ன அறிகிறோம்? முதலில் ஆவி என்றால் என்ன? அது ஏன் பரிசுத்தமாக அழைக்கப்படுகிறது? பரிசுத்த ஆவியின் தாக்கம் என்ன? ஆவி பற்றி இயேசு என்ன சொன்னார்? இந்த கேள்விகளுக்கான பதில்களுடன் சேர்த்து, சிறிது கிரேக்க இலக்கணமும் கற்போம்!

மகா விசுவாச துரோகம்

அப்போஸ்தலர்களின் மரணத்திற்குப்பின் கிறிஸ்தவத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற வேதாகமத்தின் கணிப்பு சுவாரஸ்யமாக இருந்தது. விசுவாசிகளுக்குள்ளிருந்தே கொடிதான ஓநாய்கள் எழும்பி, சீஷர்களை திசைதிருப்பும்படி மாறுபாடானவைகளைப் போதிக்கும் ஒரு மகத்தான விசுவாச துரோகம் நேரும் என்று அப்போஸ்தலர் பவுல் முன்னறிவித்தார். இந்த தீர்க்கதரிசனம் எங்ஙனம் நிறைவேறியது? இந்த விசுவாச துரோகம் கொண்டுவந்த தவறான கோட்பாடுகள் என்ன? அவை கிறிஸ்தவத்தை எப்படி பாதித்தன?

உங்கள் பரம அழைப்பு – நீங்கள் செய்ய வேண்டியது

இயேசு ஆதாமிற்காக சிலுவையில் செலுத்திய மீட்பின் கிரயம் பற்றின உண்மையான நற்செய்தியை நீங்கள் புரிந்துகொண்டீர்களா? மனுக்குலம் அனைத்தும் மறுபடி பூமியில் உயிரோடு எழும்பி கிறிஸ்துவின் ஆட்சியின்கீழ் நீதி கற்றுக்கொள்ளவிருக்கும் தேவனின் மகிமையான இராஜ்யம் குறித்து நீங்கள் உற்சாகமடைகிறீர்களா? நீங்கள் அப்பொழுது கிறிஸ்துவுடன் ஆட்சி செய்ய விரும்புகிறீர்களா? மெய் கிறிஸ்தவத்தின் வேதாகம அஸ்திபாரங்களை நீங்கள் தெரிந்துகொண்டீர்களா? நீங்கள் தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் பின்பற்ற விரும்புகிறீர்களா? சரி, அப்படியென்றால் நீங்கள் இப்போது செய்ய வேண்டியது என்ன?

எரிநரக கோட்பாடு

பிரசங்க பீடத்திலிருந்து போதகர்கள், "கிறிஸ்துவை உங்கள் மீட்பராய் ஏற்றுக்கொள்ளுங்கள்! இல்லையெனில், உங்கள் பாவங்களுக்காக கண்டனம் செய்யப்படுவீர்கள். இறந்ததும் பற்றியெரிகிற அக்கினியில் நித்தியத்திற்கும் சித்திரவதை செய்யப்பட உயிருடன் நரகத்திற்கு கொண்டு செல்லப்படுவீர்கள்," என்று எச்சரிக்கை விடுக்கிறார்கள். நித்திய ஆக்கினையே அவர்கள் விடுக்கும் பயங்கரமான எச்சரிப்பாகும். இந்த பாதாள உலகினை, நெருப்பு தீண்ட இயலாத சாத்தான் ஆட்சி செய்வதாக பலர் கூறுகிறார்கள். அங்கே தள்ளப்பட்ட மக்களை அவனது பிசாசுகள் சித்திரவதை செய்வதாகவும் சொல்கிறார்கள். எதன் அடிப்படையில் இவ்வாறு போதிக்கப்படுகிறது? பாவத்திற்கென ஆத்துமாவிற்குரிய தண்டனையாக பைபிள் கூறுவது யாது? அது நித்திய வேதனையை போதிக்கிறதா?

யோவான் 1:1 – வார்த்தையும் தேவனும்

யோவான் 1:1 கூறுகிறது, 'ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனுடன் இருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது'. இவ்வசனம் வார்த்தை கடவுளுடன் இருந்ததாகவும், அதே சமயத்தில் அதுவே கடவுளாகவும் இருந்ததாகவும் சொல்கிற மாதிரி தெரிகிறது. கூட பரிசுத்த ஆவிபற்றி  குறிப்பிடாத பற்றாக்குறை இருப்பினும், இவ்வசனம் திரித்துவத்தை நிரூபிக்க மேற்கோள் காட்டப்படுவது வழக்கம். யோவானின் மூல வார்த்தைகளை கிரேக்க மொழியில் படித்துப் பார்ப்போம். வார்த்தை (லோகாஸ்) பற்றியும் தேவன் பற்றியும் அவர் உண்மையில்  என்ன சொல்கிறார் என்பது பற்றி தெளிவான புரிதல் கிடைக்கும்.

கேட்டின் மகன்

வேதாகம தீர்க்கதரிசனங்கள் ஒரு "கேட்டின் மகனாகிய பாவமனுஷன்", அதாவது ஒரு அந்திக்கிறிஸ்துவை முன்னறிவித்தன. பலர் அந்த தீர்க்கதரிசனங்கள் உரைப்பது எதிர்காலத்தில் எழப்போகும் ஒரு உலகத் தலைவரை என்று எதிர்பார்க்கின்றனர். வேறு சிலர் அந்த நபர் ரோம பேரரசனாக இருந்த நீரோ என்றும் அந்தத் தீர்க்கதரிசனங்கள் எல்லாம் கி.பி.70-இலேயே நிறைவேறிவிட்டன என்றும் கருதுகின்றனர். இந்த இரண்டு  கோட்பாடுகளில் ஏதேனும் ஒன்று உண்மையாக இருந்தால் - அதாவது, அந்திக்கிறிஸ்து கி.பி.70-இல் ஒரு குறுகியகால ஆட்சி செய்தான் என்றாலோ (அல்லது) அவன் வெகுதொலைவில் உள்ள எதிர்காலத்தில்தான்  எழவிருக்கிறான் என்றாலோ - அது திருச்சபை வரலாற்றின் பெரும்பகுதியை (2000-சொச்சம் ஆண்டுகளை) அர்த்தமற்றதாக்கிவிடும். அது நிச்சயம் சரியாக தோன்றவில்லை. வேதாகமம் உண்மையில் அப்படியா சொல்கிறது?

சுவிசேஷ ஓட்டத்தின் நோக்கம்

வேதாகமப்படி, கிறிஸ்துவை பின்பற்றுகிறவருடைய பரம அழைப்பு என்பது, அனைத்து மனுக்குலத்திற்கும் அவரது இராஜ்யத்தின் சுவிசேஷத்தை அறிவிக்க நம் வாழ்க்கையை முழுமையாய் அர்ப்பணிப்பதே ஆகும். மேலோட்டமாக பார்த்தால், இது ஒரு அற்பமான விஷயம் போல தோன்றலாம். ஆனால் வேதவாக்கியங்களை நாம் வாசிக்கும்போது, நற்செய்தியை அறிவிக்கும் இந்த சுவிசேஷ ஓட்டத்தில் ஓட நம்மை நாமே ஜீவபலியாய் ஒப்புக்கொடுக்கும்படி தேவன் ஏன் கேட்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். அவரது நோக்கம் பல்வேறு சாராம்சங்களை கொண்டதாகும். அவற்றை ஒவ்வொன்றாக ஆழமாக படிப்போம்.

ஷியோல்/ஹேடீஸ் – மொழிபெயர்ப்பாளர்கள் மோசடி

தமிழ் வேதாகம மொழிபெயர்ப்பாளர்கள் மூல வேதாகமத்தில் 65 இடங்களில் காணப்படும் "ஷியோல்" என்னும் ஒரே எபிரேய வார்த்தையை தமிழ் வேதாகமத்தில் 59 தடவை பாதாளம் என்றும், 2 தடவை படுகுழி/ஆழம் என்றும், 4 தடவை நரகம் என்றும் மொழிபெயர்த்துள்ளனர். நல்லவர்கள் இறந்தபோது இந்த "ஷியோல்" இளைப்பாறும் இடத்தை "பாதாளம்/கல்லறை/குழி" என்று மொழிபெயர்த்தவர்கள், கெட்டவர்கள் இறந்தபோது அதே மூல வார்த்தையை "நரகம்" என்று மொழியாக்கம் செய்துள்ளனர். யோபு "ஷியோலில்" தன்னை ஒளித்து வைக்கவேண்டுமென தேவனிடம் வேண்டுகிறான் (யோபு 14:12-13). எபிரேய மொழி வல்லுநர் எவரைக் கேட்டாலும் "ஷியோல்" என்றால் "சவக்குழி" என உறுதி செய்வார்கள். வேதாகமம் உண்மையில் "ஷியோல்" எப்படிப்பட்ட இடம் என்பதை விவரிக்கிறது!

வினோதமான வழக்குகள் – பதினாலுத்துவம், நான் இருக்கிறேன்..

இயேசு, 'என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்,' என்கிறார் (யோவான் 14:9). இன்னொரு இடத்தில் அவர், 'நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்,' என்கிறார் (யோவான் 10:30). மேலும், 'ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன்' எனவும்  கூறுகிறார் (யோவான் 8:58). இவற்றால் அவர் என்னதான் சொல்ல முனைகிறார்? சரியாக புரிந்து கொள்ள இந்த கூற்றுகளின் பின்னணியைப் பார்ப்போம். மேலும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் (மத்தேயு 28:19) கொடுப்பதன் அர்த்தம் பற்றியும் கற்றுக்கொள்வோம்.

பாபிலோனின் குமாரத்திகள்

மெய் திருச்சபையானது எப்பொழுதுமே வனாந்தரத்தில் (சமூகத்திலிருந்து ஓரம் கட்டப்பட்ட நிலையில்) கேட்டின் மகனின் (அந்திக்கிறிஸ்துவின்) 1,260 வருட ஆட்சியின்கீழ் போப்பாண்டத்துவதால்  துன்புறுத்தப்பட்டிருந்து வந்திருந்ததுதான் உண்மை என்றால், சீர்திருத்த (Reformation) சகாப்தத்தின் பிரபலமான புராட்டஸ்டன்ட் சீர்திருத்த திருச்சபைகள் எப்படிப்பட்டவை? அவை நல்ல சபைகள் இல்லையா? அவைகள் போப்பாண்டத்துவத்தின் வேதாகமம் சாராத போதனைகளுக்கு ஆட்சேபம் தெரிவித்து அந்த அமைப்பிலிருந்து வெளிவந்தன, அல்லவா? பைபிளில் திருச்சபை வரலாற்றில் அந்தவொரு காலப்பகுதி பற்றி எந்தவொரு தீர்க்கதரிசனங்களும் உள்ளனவா? அவை எவ்வாறு நிறைவேறின?

Scriptures, unless otherwise indicated, are taken from THE HOLY BIBLE, NEW INTERNATIONAL VERSION®, NIV® Copyright © 1973, 1978, 1984, 2011 by Biblica, Inc.® Used by permission. All rights reserved worldwide. Scriptures indicated NASB are taken from the NEW AMERICAN STANDARD BIBLE®, Copyright © 1960,1962,1963,1968,1971,1972,1973,1975,1977,1995 by The Lockman Foundation. Used by permission. Scripture quotations marked (NLT) are taken from the Holy Bible, New Living Translation, copyright © 1996, 2004, 2007 by Tyndale House Foundation. Used by permission of Tyndale House Publishers, Inc., Carol Stream, Illinois 60188. All rights reserved. Scripture quotations marked HCSB are taken from the Holman Christian Standard Bible®, Copyright © 1999, 2000, 2002, 2003, 2009 by Holman Bible Publishers. Used by permission. Holman Christian Standard Bible®, Holman CSB®, and HCSB® are federally registered trademarks of Holman Bible Publishers. Wherever indicated NCV, scripture taken from the New Century Version®. Copyright © 2005 by Thomas Nelson, Inc. Used by permission. All rights reserved.