Tag mei kristhavam

இயேசு கிறிஸ்துவின் மீதான விசுவாசம்

நியாயப்பிரமாண உடன்படிக்கையின் காலமானது, மனுக்குலம் சுயமாய் தம்மைதாமே நியாயப்படுத்திக்கொள்ள முனையும் முயற்சிகளிலிருந்து தம் மனப்போக்கை மாற்றி ஒரு இரட்சகரின் (கிறிஸ்துவின்) தேவையை புரிந்து கொள்ளவேண்டும் என்பதைக் காட்டியது. ஆனால், நாம் இன்னும் வீழ்ச்சியுற்ற மாம்சத்தில் இருக்கும்போது, கிறிஸ்து எவ்வாறு நம்மை நியாயப்படுத்த முடியும்? பாவமன்னிப்புக்காக ஜெபிக்கும்படி கிறிஸ்து நமக்குக் கற்றுக் கொடுத்தபோது, அந்த ஜெபம் எவ்வளவுதரம் நமக்குத் தேவைப்படும் என்று சொன்னாரா? நியாயப்பிரமாணம் கிறிஸ்துவின் அவசியத்தை நமக்குக் காட்டினதென்றால், அவருடைய வருகையைத் தொடர்ந்து அதன் நிலை என்ன ஆனது? அது இன்னும் நடைமுறையில் உள்ளதா?

மனந்திரும்புதல் – எதிலிருந்து?

வேதாகமத்தின் மூல கிரேக்கத்திற்கு செல்லும்போது, 'மனந்திரும்புதல்' (கிரேக்க: மெட்டனோயியா metanoia) என்ற வார்த்தை 'மனதை மாற்றுவது' என அர்த்தப்படுத்துகிறது என்பதை பார்க்கிறோம். சரி, நாம் எந்த விசயத்தில் மனதை மாற்றிக்கொள்ள வேண்டும்? மனிதர்கள் நீதி/நியாயமற்ற நிலையில் இருக்கிறார்கள் என வேதாகமம் ஏன் சொல்கிறது? பழைய ஏற்பாட்டு காலங்களில், கடவுள் நியாயப்பிரமாண உடன்படிக்கை என்று கட்டளைகளின் ஒரு தொகுப்பு கொடுத்தார். அந்த உடன்படிக்கையின் ஒப்பந்தம்தான் என்ன? அதற்கும் பாவத்திற்கும் என்ன சம்பந்தம்? புதிய ஏற்பாடு வரும் என்று முன்னமே அறிந்திருந்தால் கடவுள் ஏன் ஒரு பழைய ஏற்பாட்டை (நியாயப்பிரமாணத்தை) அளித்தார்?

திருச்சபை

புதிய ஏற்பாட்டில் 'திருச்சபை' (Church) என்ற வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தினது இயேசுதான். இன்று பெரும்பான்மை மக்கள் திருச்சபைகள் என்றால் தேவாலய கட்டடங்கள் என்று நினைக்கின்றனர். உண்மையில் வேதாகமப்படி, திருச்சபை என்றால் என்ன?  'திருச்சபை' என்ற வேதாகம கிரேக்க மூலச்சொல்லானது எக்கலீசியா (ekklesia) ஆகும். அதன் பொருள் என்ன? ஆதி திருச்சபைகளை வேதாகமம் எவ்வாறு விவரிக்கிறது? இயேசு கிறிஸ்துவின் திருச்சபையில் ஒரு அங்கமாக ஒருவர் எப்படி சேர்வது? அதற்கென செய்ய வேண்டிய சில குறிப்பிட்ட காரியங்கள் உள்ளனவா?

தேர்ந்தெடுக்கப்பட்டோரின் அழைப்பு

அப்போஸ்தலனாகிய பவுல் முன்னறிவித்ததைப் போல, கிறிஸ்தவர்களுக்குள்ளிருந்தே கொடிதான ஓநாய்கள் எழும்பி, வேதாகம சத்தியங்களை திரித்து, பெரும்பாலான விசுவாசிகளை ஏமாற்றினர். இந்த பரவலான வஞ்சனையானது அந்திக்கிறிஸ்துவின் 1260 வருட போப்பாண்டத்துவ ஆட்சிக்காலம் முழுவதும் நீடித்து, புராட்டஸ்டன்ட் சீர்திருத்த திருச்சபைகளிலும்கூட பல வடிவங்களில் தொடர்ந்து, பல நூற்றாண்டுகளாக நிலைத்து, இன்றும்கூட பரவலாக உள்ளது. அதனால்தான் இன்று காணப்படும் அனைத்து ஜனரஞ்சகமான கிறிஸ்தவ பிரிவுகளும் ஆதியிலிருந்த மெய் கிறிஸ்தவத்தின் அஸ்திபார நம்பிக்கைகளுக்கு எதிராகச் செல்லும் பல்வேறு கோட்பாடுகளைக் கொண்டிருக்கின்றன. அப்படியானால், ஒரு மெய்யான வேதாகாமப்பூர்வமான விசுவாசி இந்த காலத்தில் என்னதான் செய்ய வேண்டும்?

வாக்குத்தத்த வியாபாரிகள்

ஆசீர்வாத நற்செய்தி சபைகள் நடத்துபவர்கள் தங்கள் சபையாரிடம், "தேவன் நீங்கள் உலக வாழ்க்கையை அனுபவித்து மகிழ்ச்சியையும், செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் அனுபவிக்க விரும்புகிறார். வியாதி தீரும்! வறுமை ஒழியும்! அதுதான் உன் பரிசு. இந்த வாக்குத்தத்தத்தை உங்களுக்குரியதாக்கிக் கொள்ளுங்கள். என்னோடு சேர்ந்து இதை சொல்லுங்கள்!" என்று பிரகடனம் செய்கிறார்கள். அவர்கள் தம்வசப்பட்ட சபை மக்களை பழைய ஏற்பாட்டு வேதவசனங்களை வாய்மொழியால் மந்திரம்போல மறுபடி மறுபடி ஆமென் போட்டு ஓதவைக்க உற்சாகப்படுத்துவது வழக்கம். மேலும் அவர்கள் சபையாரின் மாதாந்திர ஊதியத்தில் தசமபாகமாக பத்தில் ஒரு பங்கை தேவாலயத்திற்கென  கோருகின்றனர். இவை எல்லாம் வேதாகாமப்பூர்வமானவையா? உலகப்பிரகாரமனான வெற்றிகளையும்,  செல்வச்செழிப்பையும் தேடுவதைப்பற்றி இயேசு என்ன சொன்னார்?

கலாச்சார சட்டம் பேசுவோர்

இன்றைய கிறிஸ்தவ சபைகளில், எந்தவொரு பிரிவை சார்ந்த சபையாக இருந்தாலும் சரி, பெரும்பாலான இளைஞர்கள் ஏமாற்றமடைந்த நிலையில் ஈடுபாடில்லாமல் உள்ளனர். ஏனெனில் அவர்கள் சபை மக்கள் மத்தியில் பரவலாக "நான் உன்னை விட புனிதம்!" என்ற கர்வ நடத்தையையும், அடுத்தவரை குறைசொல்லி குற்றம்தீர்க்கும் மனப்பான்மையையும் அதிகமாக காண்கிறார்கள். கிறிஸ்துவின் போதனைகள் அத்தகைய மனப்பான்மையை ஆதரிக்கின்றனவா? அவரை பின்பற்றுபவர்கள் அவர்வழி செயல்படுவதா, அல்லது இயேசுவை பாவிகளோடு அடிக்கடி உணவருந்தினார் என்பதால் போஜனப்பிரியன் என்றும், குடிகாரன் என்றும் பழிசொல்லி குற்றம் சாட்டின பரிசேயர்கள் போல செயல்படவேண்டுமா?

பெந்தெகொஸ்தே இயக்கம்

பெந்தெகொஸ்தே இயக்கம் 20-ஆம் நூற்றாண்டில் தோன்றிய ஓர் இயக்கம். அதன் சபைகளின் முக்கிய கவனம் அந்நிய பாஷைகளில் பேசுவது போன்ற பரிசுத்த ஆவியின் அதிசய வரங்களை அனுபவிப்பதாகும். இன்று பலர் அந்நிய பாஷை வரம் என்றால் யாருக்கும் புரிய மாட்டாத சொற்களை பேசுவது என்று நினைக்கிறார்கள், ஏனென்றால் பெந்தெகொஸ்தே சபைகளில் மக்கள் அதைத்தான் காண்கிறார்கள். ஆனால் ஆதித்திருச்சபை இந்த வரத்தை பெற்றபோது என்ன நிகழ்ந்தது? முதலாவதாக, தேவன் இந்த வரங்களை ஆதித்திருச்சபைக்கு ஏன் கொடுத்தார்? சுகமளித்தல், தனிநபர் தீர்க்கதரிசனங்கள் போன்ற அற்புத வரங்களின் நோக்கம் என்னவாக இருந்தது?

பாபிலோனின் குமாரத்திகள்

மெய் திருச்சபையானது எப்பொழுதுமே வனாந்தரத்தில் (சமூகத்திலிருந்து ஓரம் கட்டப்பட்ட நிலையில்) கேட்டின் மகனின் (அந்திக்கிறிஸ்துவின்) 1,260 வருட ஆட்சியின்கீழ் போப்பாண்டத்துவதால்  துன்புறுத்தப்பட்டிருந்து வந்திருந்ததுதான் உண்மை என்றால், சீர்திருத்த (Reformation) சகாப்தத்தின் பிரபலமான புராட்டஸ்டன்ட் சீர்திருத்த திருச்சபைகள் எப்படிப்பட்டவை? அவை நல்ல சபைகள் இல்லையா? அவைகள் போப்பாண்டத்துவத்தின் வேதாகமம் சாராத போதனைகளுக்கு ஆட்சேபம் தெரிவித்து அந்த அமைப்பிலிருந்து வெளிவந்தன, அல்லவா? பைபிளில் திருச்சபை வரலாற்றில் அந்தவொரு காலப்பகுதி பற்றி எந்தவொரு தீர்க்கதரிசனங்களும் உள்ளனவா? அவை எவ்வாறு நிறைவேறின?

கேட்டின் மகன்

வேதாகம தீர்க்கதரிசனங்கள் ஒரு "கேட்டின் மகனாகிய பாவமனுஷன்", அதாவது ஒரு அந்திக்கிறிஸ்துவை முன்னறிவித்தன. பலர் அந்த தீர்க்கதரிசனங்கள் உரைப்பது எதிர்காலத்தில் எழப்போகும் ஒரு உலகத் தலைவரை என்று எதிர்பார்க்கின்றனர். வேறு சிலர் அந்த நபர் ரோம பேரரசனாக இருந்த நீரோ என்றும் அந்தத் தீர்க்கதரிசனங்கள் எல்லாம் கி.பி.70-இலேயே நிறைவேறிவிட்டன என்றும் கருதுகின்றனர். இந்த இரண்டு  கோட்பாடுகளில் ஏதேனும் ஒன்று உண்மையாக இருந்தால் - அதாவது, அந்திக்கிறிஸ்து கி.பி.70-இல் ஒரு குறுகியகால ஆட்சி செய்தான் என்றாலோ (அல்லது) அவன் வெகுதொலைவில் உள்ள எதிர்காலத்தில்தான்  எழவிருக்கிறான் என்றாலோ - அது திருச்சபை வரலாற்றின் பெரும்பகுதியை (2000-சொச்சம் ஆண்டுகளை) அர்த்தமற்றதாக்கிவிடும். அது நிச்சயம் சரியாக தோன்றவில்லை. வேதாகமம் உண்மையில் அப்படியா சொல்கிறது?

மகா விசுவாச துரோகம்

அப்போஸ்தலர்களின் மரணத்திற்குப்பின் கிறிஸ்தவத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற வேதாகமத்தின் கணிப்பு சுவாரஸ்யமாக இருந்தது. விசுவாசிகளுக்குள்ளிருந்தே கொடிதான ஓநாய்கள் எழும்பி, சீஷர்களை திசைதிருப்பும்படி மாறுபாடானவைகளைப் போதிக்கும் ஒரு மகத்தான விசுவாச துரோகம் நேரும் என்று அப்போஸ்தலர் பவுல் முன்னறிவித்தார். இந்த தீர்க்கதரிசனம் எங்ஙனம் நிறைவேறியது? இந்த விசுவாச துரோகம் கொண்டுவந்த தவறான கோட்பாடுகள் என்ன? அவை கிறிஸ்தவத்தை எப்படி பாதித்தன?

Scriptures, unless otherwise indicated, are taken from THE HOLY BIBLE, NEW INTERNATIONAL VERSION®, NIV® Copyright © 1973, 1978, 1984, 2011 by Biblica, Inc.® Used by permission. All rights reserved worldwide. Scriptures indicated NASB are taken from the NEW AMERICAN STANDARD BIBLE®, Copyright © 1960,1962,1963,1968,1971,1972,1973,1975,1977,1995 by The Lockman Foundation. Used by permission. Scripture quotations marked (NLT) are taken from the Holy Bible, New Living Translation, copyright © 1996, 2004, 2007 by Tyndale House Foundation. Used by permission of Tyndale House Publishers, Inc., Carol Stream, Illinois 60188. All rights reserved. Scripture quotations marked HCSB are taken from the Holman Christian Standard Bible®, Copyright © 1999, 2000, 2002, 2003, 2009 by Holman Bible Publishers. Used by permission. Holman Christian Standard Bible®, Holman CSB®, and HCSB® are federally registered trademarks of Holman Bible Publishers. Wherever indicated NCV, scripture taken from the New Century Version®. Copyright © 2005 by Thomas Nelson, Inc. Used by permission. All rights reserved.