Tag mei kristhavam

வரலாற்றின் கடவுள் யார்?

"பூர்வகாலத்தில் நடந்தவைகளை ஆதிமுதல் அறிவித்தேன், அவைகள் என் வாயிலிருந்து பிறந்தன, அவைகளை வெளிப்படுத்தினேன். அவைகளைச் சடிதியாய்ச் செய்தேன், அவைகள் நடந்தன.. நான் அவைகளை முன்னமே உனக்கு அறிவித்து, அவைகள் வராததற்குமுன்னே உனக்கு வெளிப்படுத்தினேன்." ஏசாயா 48:3-5. சரிதான். மனிதனின் எதிர்காலத்தை வடிவமைக்கும் மெய்யான கடவுளால் மட்டுமே மனிதகுல வரலாற்று நிகழ்வுகளை முன்னறிவிக்க முடியும். எங்கெல்லாம் இந்த தேவன் தனது தீர்க்கதரிசனங்களை முன்னறிவிக்கிறார்? அவை எதுவும் நிறைவேறியிருக்கின்றனவா?

நரகத்தின் கட்டுக்கதை!

சிலர், "நித்திய நரக வேதனை என்பது பைபிளில் இல்லாமல் இருக்கலாம்; எனினும் உலக மக்களை தேவனுக்கு கீழ்ப்படிய வைப்பதற்காக அவர்களை பயமுறுத்தும் அச்சுறுத்தலாக எரிநரகத்தைப் பயன்படுத்துவது பரவாயில்லை, தானே?" என்று கேட்கலாம். அது சரிதானா? இல்லை, அது சரி அல்ல. அப்படிப்பட்டவர்களை குறித்து ஏமாற்றம் அடைந்த தேவன் கூறுகிறார்: "அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது" (ஏசாயா 29:13). மிரட்சியாலும், அச்சுறுத்தல்களாலும் தனக்கு கீழ்ப்படிகிற இதயங்களை அவர் நாடவில்லை. மாறாக, தன்மேலும் தனது நீதியின்மேலும் கொண்ட அன்பாலே உந்தப்பட்டு மனமுவந்து கீழ்ப்படிகிற இதயத்தையே அவர் விரும்புகிறார். மேலும், சித்திரவதை பற்றிய எண்ணமே தேவனுக்கு அருவருப்பானது. தனது நியாயப்பிரமாணத்திலே தேவன் சித்திரவதை முறைகளை அனுமதிக்கவில்லை. நம் எதிரிகளிடமும் நாம் அன்பு செலுத்த வேண்டுமென்று கட்டளையிடுகிற தேவன் அவர்களை நித்தியமாக எரிப்பதற்கு விரும்புவாரா, என்ன?

பரலோகத்தின் இராஜ்யம்

பரலோகத்தின் இராஜ்யத்தை பற்றி எந்தவொரு கிறிஸ்தவரும் ஏன் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டும்? தேவனின் சித்தம் பரலோகத்தில் செய்யபடுவதை போல பூமிலேயும் செய்யப்படும் நாட்களான தேவனின் இராஜ்யம் பூமியில் வரவேண்டுமென ஜெபியுங்கள் என இயேசு ஏன் நமக்கு கற்றுக்கொடுத்தார்? பரலோகத்தின் இராஜ்யம் பரலோகத்தில் அல்லவா இருக்கும்? இயேசு பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, இராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார். அதனோடு ஒப்பிட்டுப்பார்க்கும்பொழுது, இன்றைய சபைகளில் இராஜ்யத்தைப் பற்றி காணப்படும் பரவலான போதனைதான் என்ன?

இயேசு கிறிஸ்துவின் மீதான விசுவாசம்

நியாயப்பிரமாண உடன்படிக்கையின் காலமானது, மனுக்குலம் சுயமாய் தம்மைதாமே நியாயப்படுத்திக்கொள்ள முனையும் முயற்சிகளிலிருந்து தம் மனப்போக்கை மாற்றி ஒரு இரட்சகரின் (கிறிஸ்துவின்) தேவையை புரிந்து கொள்ளவேண்டும் என்பதைக் காட்டியது. ஆனால், நாம் இன்னும் வீழ்ச்சியுற்ற மாம்சத்தில் இருக்கும்போது, கிறிஸ்து எவ்வாறு நம்மை நியாயப்படுத்த முடியும்? பாவமன்னிப்புக்காக ஜெபிக்கும்படி கிறிஸ்து நமக்குக் கற்றுக் கொடுத்தபோது, அந்த ஜெபம் எவ்வளவுதரம் நமக்குத் தேவைப்படும் என்று சொன்னாரா? நியாயப்பிரமாணம் கிறிஸ்துவின் அவசியத்தை நமக்குக் காட்டினதென்றால், அவருடைய வருகையைத் தொடர்ந்து அதன் நிலை என்ன ஆனது? அது இன்னும் நடைமுறையில் உள்ளதா?

அசல் “நரகங்கள்”

"ஷியோல்", "ஹேடீஸ்", "கெஹன்னா", "டார்டரூ" என்ற நான்கு மூல வார்த்தைகளும் தமிழ் பைபிளில் "நரகம்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. "ஷியோல்" என்ற சொல் பழைய ஏற்பாட்டு எபிரேய பதமாகும். மற்ற மூன்றும் புதிய ஏற்பாட்டு கிரேக்க பதங்களாகும். தமிழ் பைபிள் மொழிபெயர்ப்புகள் கூறுவது போல் இந்த மூல வார்த்தைகள் அனைத்திற்கும் ஒரே அர்த்தம்தானா? அல்லது அச்சொற்கள் ஒவ்வொன்றிற்கும் வெவ்வேறு அர்த்தங்கள் உண்டா? எபிரேய, கிரேக்க அகராதிகளை எடுத்துப்பார்க்கும்போதும், இந்த வார்த்தைகளைக் குறித்த திருமறையின் சுய விவரிப்புகளையும் கவனித்துப்பார்க்கும்போதும், அச்சொற்களின் அர்த்தங்களைக் குறித்த ஆழமான நுண்ணறிவை நாம் கண்டறிகிறோம். தமிழ் வேதாகமங்களில் மேலோட்டமாக படிக்கும்போது ஒன்றுக்கொன்று முரணாக தோன்றுகிற வசனங்களை பற்றிய தெளிவையும் கண்டடைகிறோம்.

கிறிஸ்துவின் இரண்டாம் வருகை

தானியேலின் தீர்க்கதரிசனங்கள் உலகம் கட்டியாளும் பேரரசுகளையும், அரசாங்கங்களையும் பற்றி என்ன முன்னறிவிக்கின்றன? கடைசி பேரரசான ரோமாபுரியின் வீழ்ச்சிக்குப் பின் என்ன நடக்கிறது? தேவனிடத்தில்  இராஜ்யத்தையும், அரசாங்க உரிமையையும் பெறவிருக்கும் மனுஷகுமாரன் யார்?

விசுவாசத்தை நிரூபிப்பது

திருச்சபையின் அழைப்பு பாவத்திற்கு எதிராக போராடுவது அல்ல என்றால், கிறிஸ்துவின்மீது வைக்கும் விசுவாசமே நமக்கு நீதியாக எண்ணப்படுகிறது என்றால், நம் விசுவாசத்தை நிரூபிக்க எதுவும் செய்யவேண்டியதில்லை என்று அர்த்தமா, என்ன? ஒரு நபர் கிறிஸ்துவின்மீது கொண்ட விசுவாசத்தை எவ்வாறு நிரூபிக்க முடியும்? நாம் கிறிஸ்துவைப் பின்பற்ற வேண்டும் என்று அடிக்கடி கூறப்படுகிறது. ஆனால் அதன் பொருள்தான் என்ன? இயேசு தன்னை பின்பற்றுபவர்களை என்ன செய்யும்படி கட்டளையிட்டார்?

தனியுரிமை கொள்கை

This privacy policy sets out how ChristianityOriginal.com uses and protects any information that you provide when you use this website. ChristianityOriginal.com is committed to ensuring that your privacy is protected. Should we ask you to provide certain information by which you…

மகா மறுசீரமைப்பின் காலம்

"தேவன் எல்லோரின் மீட்பராக இருக்கிறார். அதோடு விசுவாசிகளுக்குச் சிறப்பான முறையில் மீட்பராக இருக்கிறார்." 1தீமோத்தேயு 4:10. இந்த வசனம் தேவன் எல்லோரையும் மீட்பார் எனவும், இன்றைய விசுவாசிகளை ஒரு சிறப்பான முறையில் மீட்பார் என்றும் உரைக்கிறது. அப்படியெனில், எல்லா மக்களுக்கும் இலவச சொர்க்க அனுமதி சீட்டு என்று அர்த்தமா? இன்றைய விசுவாசிகளுக்குக் காத்திருக்கும் சிறப்பு மீட்புதான் என்ன? அதுபோக, இயேசு சொல்கிறார், "முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேசங்கள் மேல் அதிகாரம் கொடுப்பேன்.” வெளி. 2:26. யார் இந்த தேசங்கள்? கிறிஸ்துவைப் பின்பற்றுவோரால் அவை எதற்காக ஆளப்படவேண்டும்?

Scriptures, unless otherwise indicated, are taken from THE HOLY BIBLE, NEW INTERNATIONAL VERSION®, NIV® Copyright © 1973, 1978, 1984, 2011 by Biblica, Inc.® Used by permission. All rights reserved worldwide. Scriptures indicated NASB are taken from the NEW AMERICAN STANDARD BIBLE®, Copyright © 1960,1962,1963,1968,1971,1972,1973,1975,1977,1995 by The Lockman Foundation. Used by permission. Scripture quotations marked (NLT) are taken from the Holy Bible, New Living Translation, copyright © 1996, 2004, 2007 by Tyndale House Foundation. Used by permission of Tyndale House Publishers, Inc., Carol Stream, Illinois 60188. All rights reserved. Scripture quotations marked HCSB are taken from the Holman Christian Standard Bible®, Copyright © 1999, 2000, 2002, 2003, 2009 by Holman Bible Publishers. Used by permission. Holman Christian Standard Bible®, Holman CSB®, and HCSB® are federally registered trademarks of Holman Bible Publishers. Wherever indicated NCV, scripture taken from the New Century Version®. Copyright © 2005 by Thomas Nelson, Inc. Used by permission. All rights reserved.